> குருத்து: ஆபத்தான அணு உலை வேண்டாம்! - எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம்!

February 21, 2012

ஆபத்தான அணு உலை வேண்டாம்! - எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம்!


ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!!

கடந்த 50 நாட்களாக மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் "முல்லை பெரியாறு அணையை பாதுகாப்போம்!" "நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் அணு உலையை இழுத்து மூடு" என்ற முழக்கத்தின் அடிப்படையில், தமிழக மக்கள் மத்தியில் பேருந்தில், ரயிலில், வீடு வீடாக, தெருமுனைக்கூட்டங்கள் வாயிலாக, பொதுக்கூட்டம் வாயிலாக, ஆலைகளின் வாயில்களில் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியில் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளுங்கள். நன்றி.

தோழமையுடன்,

குருத்து.

*****

பொதுக்கூட்டம்
பிப்ரவரி 25, மாலை 6 மணி

இடம் : எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.

தலைமை

தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை

தோழர் மருதையன், பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு

தோழர் ராஜூ, வழக்குரைஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு

புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

தொடர்புக்கு

முகுந்தன் – 944448 34519
வினவு – 97100 82506

நன்றி : வினவு

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

கூடல் பாலா said...

99 சதவீதம் ஜெயித்தாகிவிட்டது ...