> குருத்து: முதலாளிகளின் 'நேர்மையும்' உழைக்கும் மக்களின் நேர்மையும்!

September 26, 2012

முதலாளிகளின் 'நேர்மையும்' உழைக்கும் மக்களின் நேர்மையும்!

நிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் மாதம் இது. தணிக்கையாளர் அலுவலகம் அடிக்கடி போய்வருகிறேன். ஒவ்வொரு முதலாளியும் தணிக்கையாளருடன் தனித்தனியாக ரகசியம் பேசி கிளம்புகிறார்கள்.

தங்கள் ஈட்டிய லாபத்திற்கு வரி கட்ட மூக்கால் அழுகிறார்கள் முதலாளிகள்.  10 லட்சம் கட்ட வேண்டியிருந்தால், 1 லட்சம் கட்டினால் போதும் என்கிறார்கள்.  தணிக்கையாளர்  லாபத்தை கொஞ்சம் கூடுதலாக காட்டலாம் என எப்படியெல்லாமோ பேசி முயற்சி செய்கிறார். தணிக்கையாளர் கொஞ்சம் கூடுதலாக காட்டினால், தன் நிலைக்கு ஆபத்து வராது என நினைக்கிறார். ஆனால், முதலாளிகள் கறாராக மறுத்துவிடுகிறார்கள். 

முதலாளிக்கு இன்னும் அழுத்தம் கொடுத்தால், தணிக்கையாளரை மாற்றிவிடுவார்கள்; தன் பொழப்பு போய்விடும் என்பதால், அதற்கு தகுந்தாற் போல பொய்கணக்கை தயாரிக்க துவங்கிவிடுகிறார். முதலாளிகள் எல்லா துறை அதிகாரிகளையும் லஞ்சத்தால் வாயை மூடிவிடலாம் என தங்களது சொந்த அனுபவத்திலும், சக முதலாளிகளின் அனுபவ பகிர்விலும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். 

இந்த நாட்டில் நேர்மையாக அனைத்து வரிகளையும் செலுத்துபவர்கள் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தான்!

2 பின்னூட்டங்கள்:

BKK said...

unmai

BKK said...

unmai