> குருத்து: ஆண்பாவம்! - சில குறிப்புகள்!

August 3, 2018

ஆண்பாவம்! - சில குறிப்புகள்!


கொஞ்சம் சோர்வாக இருக்கும் பொழுது, பார்க்ககூடிய படங்களில் ஆண் பாவமும் ஒன்று!

படம் வந்து 33 வருடங்களுக்கு பிறகு...சமீபத்தில் இந்த படம் குறித்து ஒரு கூட்டம் நடத்தியுள்ளார்கள். பாண்டியராஜன் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். (உபயம் : யூடியூப். படமும் கிடைக்கிறது!)

முதல்படம் கன்னிராசி. இது இரண்டாவது படம். ஒரு நபரை தேர்வு செய்து வைத்து, பிறகு தானே நடித்துவிடலாம் என முடிவெடுத்துள்ளார்.
கதாநாயகனுக்கான லட்சணத்தை, பாரதிராஜா, அவருடைய திரை வாரிசுகள் உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் ரேவதி ரெம்ப பிஸி. ஐந்து நாட்கள் தேதி கொடுத்து...எல்லா காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். மருத்துவமனை காட்சிகளிலெல்லாம் முகத்தை காட்டவேயில்லை. சில இடங்களில் வேறு பெண்ணை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் எல்லோரும் அவரவர் சொந்த பெயரிலேயே நடித்திருப்பார்கள்.
பாண்டியன் சீதாவை பெண் பார்க்கும் பொழுது, உயரம் அளவிடும் பொழுது, குதிகாலை உயர்த்தி தன் பிரியத்தை காட்டும் காட்சி மிக அழகு! சொன்னவர் - விஜய்சேதுபதி!

பாண்டியராஜன் சைதைக்காரர் என்பது ஒரு ஆச்சர்யம். மொத்தப் படத்தையும் அதிகபட்சமாக 40 நாட்களுக்குள் எடுத்துமுடித்திருக்கிறார். படம் வெளியாகும் வரை இயக்குநருக்கே நம்பிக்கை இல்லை. ஆனால்.. 230 நாட்கள் ஓடியிருக்கிறது!

தனது பிஸியால், படம் எடுத்தபிறகு, பாடல்கள் தந்திருக்கிறார் இளையராஜா.
இளையராஜாவின் அருமையான பிஜிஎம் படங்களில் இந்தபடமும் முதல் வரிசையில் வந்துவிடும்! இளையராஜா எளிய தயாரிப்பாளர்களும் அணுகும்படி இருந்திருக்கிறார். இந்த படமும் ஒரு சான்று!

படத்தில் ரேவதி நடத்தும் டியூசன் மிகப்பிரபலம். இன்றைக்கும் "ஆண்பாவம் டியூசன் இல்லையே" என பேசிக்கொள்கிறார்கள். - தீபா - ஆண்பாவம் சிறப்பு கூட்டத்தில்.. "படத்தில் மனிதர்கள் நடித்திருக்கிறார்கள். சரி. ஆனால், சிஜி இல்லாத காலத்தில், இறுதி காட்சியில் அந்த ஈயை எப்படி நடிக்கவைத்தீர்கள்?" என பேச்சாளர் கேட்டதற்கு, இயக்குநர் பாண்டியராஜன் பதில் சொல்லவில்லை அல்லது யூடியூப்பில் இல்லை.

எங்கள் வீட்டிலும் அண்ணன், தம்பி இருவர். படத்தில் வரும் நாயகர்களைப் போலவே அத்தனை பிரியங்களும், சிறுவயது சண்டைகளும்! அப்பாவும் வி.கே. இராமசாமி தோற்றம் கொண்டவர் தான்!

0 பின்னூட்டங்கள்: