> குருத்து: Se7en (1995)

June 1, 2019

Se7en (1995)

பெருந்தீனிக்காரன் ஒருவன் கொலை செய்யப்படுகிறான். அதை ஆராயும் டிடெக்டிவ் இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெறப்போகிறோம். இதில் தலையிட வேண்டாம் என நினைக்கிறார்.

அவருடைய மேலதிகாரியோ அவரை கேஸை எடுத்துக்க சொல்லி நெருக்குகிறார். புதிதாக வந்த இளைய டிடெக்டிவ் அலட்டிக்கொள்கிறார்.
அடுத்தும் கொலை நடக்கிறது. மூத்த டிடெக்டிவ் கொலைகளுக்கான தடயங்களை ஆய்வு செய்கிறார்.

கிரேக்கத்தில் இருந்த இவாக்ரியஸ் என்பவர் எட்டு பாவங்களை வகுத்தார். அவை gluttony, lust, avarice, sadness, anger, acedia, vainglory, and pride. இந்த பாவங்களின் அளவை பின் போப் க்ரிகோரி என்பவர் ஏழாக குறைத்தார். மேலே இந்த பட்டியலில் இருந்து vainglory என்பதையும் pride-னுள் அடக்கி ஏழாக்கினார். அந்த ஏழு பாவங்களாவன.

gluttony - இதை பெருந்தீனிக்காரன் என சொல்லலாம். அஃதாவது தேவையுள்ளவர்களுக்கு அளிக்காமல் தனக்கே என்று தின்பவன்.

lust - பணம், சாப்பாடு, புகழ், அதிகாரம் மற்றும் குறிப்பாக காமம் ஆகியவற்றின் ஒரு வார்த்தை. பெருவாரியாக தவிர்க்க முடியாத காம இச்சைகளுக்கே இதை சொல்வார்கள்.

avarice(greed) - இதுவும் இச்சை சார்ந்தது தான். அடுத்தவர்களின் பொருட்கள் மேல் கொள்ளும் இச்சை.

(acedia, sadness) sloth - ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வேலைகள் பிறவிப்பயனாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வேலைகளை செய்யாமல் சோம்பேறியாய் இருத்தல்.

wrath - வெறுப்பாலும் கோபத்தாலும் பொங்கி எழும் வெறி.

envy - இதையும் அடக்கவியலாத இச்சை என்கிறார்கள். பிறரின் கௌரவம் மேல் கொள்ளும் பொறாமை.

pride - இதை ஏழு பாவங்களிலேயே முக்கியமாக கருதியிருக்கின்றனர். பிறரின் நன்முயற்சிகளை பொருட்படுத்தாமல் தன்னையே பிறரை காட்டிலும் மேலோங்கியவன் என்று எண்ணிக் கொள்ளுதல்.

இதன் அடிப்படையில் கொலைகள் தொடரும் என அவருக்கு புரிகிறது.
எதிர்பாரா சமயத்தில் கொலைகாரனே சரணடைகின்றான்.

மீதி கொலைகளையாவது தடுத்து நிறுத்தினார்களா என்பது முழு நீளக்கதை!

****
இந்து மதத்தில் அந்நியன் அம்பி போல, கிறித்துவ அம்பி தான் கொலைகளை செய்கிறார். சமூகத்தை திருத்துகிறேன் என்று தான் விளக்கம் தருகிறார். மதம் இருக்கும் வரையில் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளும் தொடரும்.

இந்த கதையை சொன்ன விதத்தில் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.

இளைய டிடெக்டிவ் வேகமாக இருக்கிறார். மூத்தவரோ விவேகத்துடன் இருக்கிறார். இருவருக்குமான அணுகுமுறை நன்றாகவே வெளிப்படுகிறது.

"ஆபத்து என்றால் " காப்பாற்றுங்கள்" என்று கத்தினால், அக்கம் பக்கத்தில் இருந்து ஒருத்தனும் வரமாட்டான். "நெருப்பு"ன்னு கத்துங்க! நம்மை வீட்டையும் பத்திக்குமேன்னு! உடனே ஓடிவருவான்!"

- இப்படி ஓரிடத்தில் பேசிக்கொள்கிறார்கள். தனி உடைமை சமூகத்தின் சாம்பிள் இது!

ஒரு சுவாரசியமான திரில்லர். பார்க்க கூடிய படம். பாருங்கள். தமிழில் கிடைக்கிறது.
நன்றி : ஏழு பாவங்கள் பற்றி குறிப்புகள் தந்து உதவியவர் பதிவர் கிருஷ்ணமூர்த்தி

0 பின்னூட்டங்கள்: