> குருத்து: அத்தை, பெரியப்பா வீடு!

June 19, 2019

அத்தை, பெரியப்பா வீடு!

ஊரை பிரிந்து வந்து பதினைந்து ஆண்டுகளாகிவிட்டன.

சென்னையிலிருந்து ஊரே தீபாவளிக்கு கிளம்பி போகும் பொழுது, நாங்களும் மூன்று நாட்கள் ஊர்ப்பக்கம் குடும்பத்தோடு போய், இருந்து வருகிறோம். மூன்று நாளும் வேகமாக போய்விடும்.

மற்றபடி, நெருங்கிய சொந்தங்கள் திருமணத்தின் பொழுதோ, இறப்பின் பொழுதோ தான் ஊர்ப்பக்கம் நான் மட்டும் போய் வருகிறேன்.

பொண்ணுக்கு நம்ம மண்ணு வாசம், சொந்தங்கள், பண்பாடு ஒட்டனுமே! அதற்காக கோடை விடுமுறையில் ஊருக்கு அனுப்பிவைக்கிறோம்.

அக்காவும், அண்ணனும் ஊரில் இருப்பதால், பதினைந்து நாட்களோ, இருபது நாட்களோ ஊருக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அவர்களுக்கும் மகிழ்ச்சி.

30 வருடங்களாக ஊரில் வாழ்ந்தாலும் என்னிடம் ஊரின் பேச்சு வழக்கு பெரிதாக ஒட்டிக்கொண்டதில்லை. பதினைந்து நாள் இருந்துவிட்டு வரும் என் மகளிடம் நன்றாகவே ஒட்டிக்கொள்ளும்!

சிறுவயதில் கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றதேயில்லை. எல்லா சொந்தங்களும் உள்ளூரிலேயே இருந்ததும் ஒரு காரணம்.

0 பின்னூட்டங்கள்: