> குருத்து: பூங்கா - சில குறிப்புக்கள்!

August 17, 2018

பூங்கா - சில குறிப்புக்கள்!


பூங்காவிற்கும் எனக்கும் நெருங்கிய பந்தம் உண்டு.
வீடு ஒரு பூதம் போல! நமக்கு ஏதாவது வேலைகள் கொடுத்துக்கொண்டே
இருக்கின்றன.
வீட்டில் படிப்பதற்கான எல்லா போராட்டங்களும் தோற்றுவிட்ட பிறகு, நம்மை அரவணைப்பது பூங்காக்கள் தான்! நண்பர்களுக்கும் பலமுறை பரிந்துரைத்திருக்கிறேன்.
 
அமைதியும் மரங்கள் தருகிற குளிர்ச்சியும் படிப்பதற்கு இதமான சூழல் தருபவை!
 சில ஆண்டுகளுக்கு முன்புவரை பூங்காக்களின் நிலை படுமோசம். அந்தந்த பகுதி மக்களின் முயற்சியா, ஏதும் உலக வங்கித்திட்டமா என தெரியவில்லை. கடந்த சில வருடங்களாக பூங்காக்கள் சென்னையில் ஆங்காங்கே உருவாக்கப்படுகின்றன. குறைந்தபட்ச அளவில் பராமரிக்கப்படுகின்றன.
 மற்றப்படி, பூங்காக்களில் படிக்கும் பொழுது போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறவர்கள், நண்பர்கள், காதலர்கள் முக்கியமாக குழந்தைகள்.
சென்னையில் முழுநேர பூங்காக்கள் மிக குறைவு தான்! மற்றப்படி, பூங்காக்கள் விடிகாலையிலேயே விழித்துக்கொள்கின்றன. காலை 10.30 வரை இயங்குகின்றன. மீண்டும் மாலை 4 மணிக்கே திறந்துகொள்கின்றன. இரவு 8.30 -க்கு பாதுகாவலர் விசில் ஊதி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்.
 "ரசியாவில் எங்கெங்கு காணினும் பூங்காக்களுக்கு நடுவே வீடுகள் இருக்கின்றன" என்பார் வைரமுத்து வடுகப்பட்டி முதல் வால்காவரை' புத்தகத்தில்!
நினைத்துப் பார்த்தாலே சந்தோசமாக இருக்கிறது! அதற்கு சமூக மாற்றமல்லவா செய்யவேண்டியிருக்கும்! :)
 எதுவும் போராட்டம் இல்லாமல் எளிதில் கிடைத்துவிடுவதில்லை

வீட்டில் படிப்பதற்கான எல்லா போராட்டங்களும் தோற்றுவிட்ட பிறகு, நம்மை அரவணைப்பது பூங்காக்கள் தான்! நண்பர்களுக்கும் பலமுறை பரிந்துரைத்திருக்கிறேன்.அமைதியும் மரங்கள் தருகிற குளிர்ச்சியும் படிப்பதற்கு இதமான சூழல் தருபவை!சில ஆண்டுகளுக்கு முன்புவரை பூங்காக்களின் நிலை படுமோசம். அந்தந்த பகுதி மக்களின் முயற்சியா, ஏதும் உலக வங்கித்திட்டமா என தெரியவில்லை. கடந்த சில வருடங்களாக பூங்காக்கள் சென்னையில் ஆங்காங்கே உருவாக்கப்படுகின்றன. குறைந்தபட்ச அளவில் பராமரிக்கப்படுகின்றன.மற்றப்படி, பூங்காக்களில் படிக்கும் பொழுது போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறவர்கள், நண்பர்கள், காதலர்கள் முக்கியமாக குழந்தைகள்.சென்னையில் முழுநேர பூங்காக்கள் மிக குறைவு தான்! மற்றப்படி, பூங்காக்கள் விடிகாலையிலேயே விழித்துக்கொள்கின்றன. காலை 10.30 வரை இயங்குகின்றன. மீண்டும் மாலை 4 மணிக்கே திறந்துகொள்கின்றன. இரவு 8.30 -க்கு பாதுகாவலர் விசில் ஊதி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்."ரசியாவில் எங்கெங்கு காணினும் பூங்காக்களுக்கு நடுவே வீடுகள் இருக்கின்றன" என்பார் வைரமுத்து வடுகப்பட்டி முதல் வால்காவரை' புத்தகத்தில்!நினைத்துப் பார்த்தாலே சந்தோசமாக இருக்கிறது! அதற்கு சமூக மாற்றமல்லவா செய்யவேண்டியிருக்கும்! https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f4c/1/16/1f642.pngஎதுவும் போராட்டம் இல்லாமல் எளிதில் கிடைத

0 பின்னூட்டங்கள்: