> குருத்து: October 2025

October 29, 2025

ஒரு வரி ஆலோசகருக்கு நேர மேலாண்மை அவசியம் ஏன்?

 


”அதிக வேலை செய்வதே திறமை அல்ல; சரியான வேலையை சரியான நேரத்தில் செய்வதே திறமை.” -  Harvard Business Review

***

வரி ஆலோசகரின் வாழ்க்கை காலக்கெடுவிற்குள் இருக்கிறது.  நெருக்கடியான சமயத்தில் தான் ஒரு நல்ல வரி ஆலோசகர் எப்படி திறம்பட செயல்படுகிறார் என அவரின் ஆற்றலை தெரிந்துகொள்ளமுடியும்.

 

சென்னையில் ஒரு தணிக்கையாளரை நானறிவேன்.  பலரும் இறுதி நாட்களில் பதைபதைப்பாய் இரவும் பகலும் வேலை செய்யும் பொழுது, அவர்  ஏதோ ஒரு நாட்டில் ஹாயாக சுற்றுலாவில் இருப்பார். இப்படி இந்தியாவின் கிழக்கு திசை நாடுகளில், வருடத்திற்கு இரண்டு சுற்றுலா என ஐம்பது நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். கடைசியாக ”வியட்நாம்” என தெரிவித்தார். அவருடைய அலுவலகத்திலுள்ள ஊழியர்களுக்கும் சுற்றுலா செல்வதற்கான விடுமுறையும், ஊக்க தொகையும் கொடுப்பார். (போகாவிட்டால், திரும்ப பெற்றுக்கொள்வார்)

 

உங்களுக்கும் பல அம்சங்கள் தெரியும். ஆகையால் எனக்கு புதிதாய் இருப்பதை மட்டும் பகிர்கிறேன்.

 

திட்டமிடுங்கள்

 

முதல் 30 நிமிடம்ஒரு நாளின் வேலைத் திட்டத்தை எழுதுவதற்காக ஒதுக்குங்கள். தினத்தைநோக்கத்துடன்தொடங்குங்கள்; பணிப் பட்டியலால் நிறைந்து அல்ல.

Digital calendar பயன்படுத்துங்கள்நினைவூட்டல்கள், மின்னஞ்சல் இணைப்புகள் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

பணிகளை மூன்று பிரிவாகப் பிரியுங்கள்: அவசரம், முக்கியம், பிற வேலைகள்.

ஒவ்வொரு பணிக்கும் நேரக்கெடு நிர்ணயுங்கள்; முடிவில்லா பட்டியல்கள் மனஅழுத்தம் தரும்

மனநிலை ஆற்றலுடன் இயங்கும் நேரத்தை முக்கிய பணிக்காக ஒதுக்குங்கள் காலை ஆழம், மாலை எளிமை.

To-do list மட்டுமல்ல, “Not-to-do list” ஒன்றையும் வைத்திருங்கள்.

 

செயல்படுங்கள்

 

அளவுக்கு மீறிய “multitasking” தவிருங்கள்; கவனம் சிதறும்.

கவனச்சிதறல்களை குறையுங்கள்: மொபைல் அறிவிப்புகள், சமூக ஊடகங்கள், இடையூறுகள்.

வேலைகளை பகிர்ந்தளியுங்கள் (Delegation)நம்பத்தகுந்த குழுவினருக்கு பணிகளை ஒப்படையுங்கள்.

ஒழுங்கான ஆவண அமைப்பில் கவனம் கொள்ளுங்கள் — physical & digital இரண்டிலும்.

வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை “deep work session”வேலைகள் செய்ததை குறித்த சுய பரிசீலனை செய்யுங்கள்.

சில வேலைகளை “automation” மூலம் எளிதாக்குங்கள்; தொழில்நுட்பத்தை துணையாக்கி கொள்ளுங்கள்.

மற்றவர்களின் அழுத்தத்தில் அல்ல, நமது மதிப்புகளின் அடிப்படையில் நேரத்தை நிர்ணயிங்கள்.

 

ஓய்வெடுங்கள்

 

மாலை நேர “shutdown ritual”வேலை முடிந்த பின் தொழிலிலிருந்து மனம் விலகட்டும்.

நமது ஆற்றலை மதிப்பிடுங்கள்; சோர்வை மீறிச் செயல்படாதீர்கள்.

மறக்காமல் இருக்க குறித்துக் கொள்ளுங்கள்; மனம் நினைவிற்காக அல்ல, சிந்தனைக்காக.

டிஜிட்டலில் இருந்து இரவு 9 மணிக்கே விடுபடுங்கள்.  நிம்மதியாக 7 மணி நேரம் தூங்குங்கள்.  நல்ல ஓய்வு அடுத்த நாள் திட்டமிட்டபடி செயல்படுவதற்கான மூலதனம்.

 

”ஒரு நேர்த்தியான வரி ஆலோசகர் இரண்டு திசையிலும் திறமையானவர் துல்லியமாகவும், திசைதிருப்பாமலும் செயல்படுபவர்” . - Peter Drucker

 

-          இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,

9551291721

 

October 28, 2025

ஒரு வரி ஆலோசகருக்கு Interpersonal and Communication Skills ஏன் அவசியம்?



“Communication works for those who work at it.” – John Powell

 

Interpersonal and communication skills என்பது பிறருடன் பயனுள்ள முறையில் பேசவும், கேட்கவும், புரிந்துகொள்ளவும் உதவும் திறன்கள். இதில் listening, empathy, clarity, மற்றும் respect போன்ற பண்புகளும் அடங்கும். ஒரு வரி ஆலோசகரின் பணியில் கணக்குகளும், சட்டங்களும் முக்கியம்ஆனால் அவை மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனுடன் இணைந்தால் தான் முழுமையடையும். இது வாய்மொழி, எழுத்து மற்றும் உடல்மொழி (body language) மூலமான தொடர்பாடலை உள்ளடக்கும்.

 

Harvard Business Review (2019) ஆய்வுப்படி, *தொழில்வெற்றியின் 85% பகுதி இத்தகைய திறன்களால் தீர்மானிக்கப்படுகிறது.*

 

வரி ஆலோசகர் தினசரி வாடிக்கையாளர்களோடு உரையாடுகிறார், அதிகாரிகளுடன் ஆவணங்களை பரிமாறுகிறார், மற்றும் நிதி விவரங்களை விளக்குகிறார். இத்தகைய சூழலில் தெளிவும் நம்பகத்தன்மையும் இல்லாவிட்டால், தவறான புரிதல்கள், தாமதங்கள், அல்லது வாடிக்கையாளர் இழப்புகள் ஏற்படும்.

 

மேலாண்மை நிபுணர் Peter Drucker கூறுவது போல்:

“The most important thing in communication is hearing what isn’t said.”

அதாவது, வாடிக்கையாளரின் சொல்லாத கவலைகளையும் உணர்வது தான் உண்மையான தொடர்பின் கலை.

 

American Psychological Association (APA, 2021) தரவுப்படி, ஒரு ஆலோசனையின் வெற்றியில் 70% பங்கு ஆலோசகரின் empathy மற்றும் active listening திறனால் ஏற்படுகிறது. அதேபோல், WHO (2022) கூறுகிறதுநல்ல தொடர்பாடல் மன அழுத்தத்தை 40% வரை குறைக்க முடியும்.

 

ஏன் அவசியம்?

 


வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறுவதற்கு.

சட்ட மற்றும் நிதி விவரங்களை எளிதாக விளக்குவதற்கு.

குழு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு.

பிரச்சினைகளை சீராக தீர்க்கும் திறனை வளர்த்துக்கொள்வதற்கு.

 

எப்படி வளர்த்துக்கொள்வது?

 

1. Listening Skills – பிறர் பேசும்போது முழுமையாக கவனியுங்கள்; இடைமறிக்க வேண்டாம்.

2. Empathy – வாடிக்கையாளரின் உணர்ச்சியை புரிந்து அதற்கேற்ப பதிலளிக்கவும்.

3. Clarity in Expression – தொழில்நுட்ப வார்த்தைகளை எளிய மொழியில் சொல்ல பழகுங்கள்.

4. Feedback – வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துகளை பெறுங்கள், உங்களின் தொடர்பை மேம்படுத்துங்கள்.

5. Continuous Learning – seminars, workshops, peer discussions மூலம் பயிற்சி பெறுங்கள்.

 

மனித உறவுகள் நம்பிக்கையால் கட்டப்படுகிறது; நம்பிக்கை, நல்ல தொடர்பாடலால் உருவாகிறது. ஒரு வரி ஆலோசகருக்கு இது வெறும் திறன் அல்லதொழில்முறை வாழ்வின் அடித்தளம்.

 

“Effective communication is 20% what you know and 80% how you feel about what you know.” – Jim Rohn

 

இந்த திறன்களை வளர்த்துக்கொள்வதே ஒரு வரி ஆலோசகரின் நீண்டகால வெற்றிக்கான முக்கிய விசையாகும்.

 

- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், .எஸ்., ஆலோசகர்,

9551291721

October 27, 2025

 


வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF)  :   புதிய மாற்றங்கள்

 

வாரிசுதாரர் நியமனம் (E Nomination ) கட்டாயமும் - அவசரமும்

 

பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு வைத்திருப்பவர்களின் பலன்களை, கணக்கு வைத்திருப்பவர் திடீரென மரணம் அடைந்தால், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுவதற்கு இந்த வசதி உதவுகிறது.

 

பணியில் இருக்கும் பொழுது இறந்தால், அந்த பணியாளர் வாங்கும் சம்பளம். வேலை செய்த வருடங்களை கணக்கில் கொண்டு மூன்று லட்சங்களில் இருந்து 7 லட்சங்கள் வரை அவருடைய குடும்பத்திற்கோ, வாரிசாக நியமிப்பவருக்கோ உடனடியாக போய்ச்சேரும்.

 

ஆகையால் ஒரு பணியாளர் இறந்த பிறகு வாரிசுதாரரை கண்டறிவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகளில் இப்பொழுது பி.எப். வாரிசுதாரரை உடனடியாக நியமிக்க சொல்லி, முன்பு வலியுறுத்தியது. இப்பொழுது கட்டாயப்படுத்துகிறது.

 

ஆகையால் முதலில் பணியாளர் UAN என்ற அடையாள  எண்ணை பெற்றுக்கொண்ட பிறகு, அதை பி.எப். உறுப்பினருக்கான தளத்தில் சென்று அதை பதிவு (Activate UAN) செய்யவேண்டும்.  அதன் பிறகு, பணியாளரின் புகைப்படத்தை  சுயவிவரம் பகுதியில் (Profile)  வலையேற்றவேண்டும்.

 




அதன்பிறகு  பணியாளரின் துணைவியார்/கணவர்/பிற உறவுகள் குறித்த பெயர், வயது, முகவரி என ஆதாரின் அடிப்படையில்  விவரங்களையும், புகைப்படத்தோடு பதிவேற்றவேண்டும்.  தளம் கேட்கிற விவரங்களை கொடுத்த பிறகு,  ஆதார் ஓடிபி மூலமாக ( E sign யையும்) பூர்த்தி செய்யவேண்டும்.

 

இப்பொழுது பணியாளர்களை இந்த வாரிசுதாரர் நியமனத்தை உடனடியாக செய்யவைக்கும் பொருட்டு, ஐந்து முறை மட்டும் உறுப்பினருக்கான தளத்தில் அனுமதிக்கிறது. அதற்குள் வாரிசுதாரரை நியமித்துவிடவேண்டும். இல்லையெனில் உள்ளே எந்த வேலையையும் செய்வதற்கு அனுமதிக்காமல் தடை (Blocked) செய்கிறது. ஆகையால் பணியாளர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக செயல்படுத்துங்கள். நிறுவனங்கள் தனது பணியாளர்களிடம் தெரிவித்து உடனே செய்ய வலியுறுத்துங்கள். பிறகு பி.எப். அலுவலகத்திற்கு சென்று அலையவேண்டியிருக்கும்.

 

பி.எப். ஊழியர்களின் கருணைத்தொகை அதிகரிப்பு

 

பி.எப். நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பணியில் இருக்கும் பொழுது இறக்கும் பொழுது அவர்களுடைய வாரிசுக்கு முன்பு கிடைக்கும் கருணைத்தொகை (Exgratia) ரூ. 8.80 லட்சமாக இருந்தது. இப்பொழுது அந்த தொகை ஏப்ரல் 1, 2025லிருந்து 15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை 5% உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சிலர் பத்திரிக்கையில் இந்த செய்தியைப் பார்த்து  பி.எப்.பில் நிதி செலுத்தும் பணியாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்துமா என சந்தேகம் கேட்டார்கள். இந்த அறிவிப்பு என்பது பி.எப்பில்  பணிபுரியும் ஊழியர்களுக்கான அறிவிப்பு. பி.எப். சந்தாதாரர்களுக்கு என புரிந்துகொள்ளக்கூடாது என விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது.

 

பணியாளர்களை இணைப்பதற்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டம்

 

PM விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா (PM-VBRY)” என்பது Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana எனப்படும் சர்வதேச மொழியில் “PM-VBRY” என்ற திட்டம் ஆகும். இது EPFO மூலம் அமல்படுத்தப்படும் புதிய பணியாளர்களை நியமிப்பதற்கு ஊக்கமளிக்கும் திட்டமாகும். திட்டத்திற்கு மொத்த ஒதுக்கீடு ரூ. 99,446 கோடி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 3.5 கோடி வேலை வாய்ப்புகளை 2 ஆண்டுகளில் உருவாக்குவதே இலக்காக கொண்டு இந்த திட்டம் வடிவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் என்பது, 01 ஆகஸ்ட் 2025 முதல் தொடக்கம் ஆகும், காலம் 31 ஜூலை 2027 வரை இருக்கும்.

 

திட்டத்தின் இரண்டு பகுதிகள்

இந்த திட்டம் Part A மற்றும் Part B என்ற இரண்டு பிரதான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

 


முதல் பகுதி (Part A)

EPFOல் முதன்முறை சேரும் புதிய உறுப்பினர்களுக்கானது.  ஒரு பணியாளர் ஆறு மாதங்கள் அவருக்கான நிதியளிப்பு செய்த பிறகு, அவருக்கு உதவித் தொகையாக ரூ. 7500 என அவருடைய கணக்கில் வரவு (Direct Benefit Transfer) வைக்கப்படும்.  அடுத்த ஆறு மாதங்கள் வேலை செய்த பிறகு, அவருடைய கணக்கில் மீண்டும் ரூ. 7500 வரவு வைக்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட பணியாளர் தனது வங்கி கணக்குடன் ஆதாருடன் இணைத்திருக்கவேண்டும். ஊக்கம் பெறுபவர்களின் சம்பளம்  மாதம் ரூ. 1 லட்சம் வரைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரண்டாம் பகுதி (Part B)

இந்த பகுதி நிறுவனங்களுக்கானது. தனது தேவைக்கு பணியாளர்களை புதிதாக நியமிக்கவேண்டும். இப்படி நியமிக்கும் ஒவ்வொரு பணியாளருக்கும் பணியாளர்களின் சம்பளத்தைப் பொறுத்து உதவித்தொகை தரப்படுகிறது.  ஊதியம் ரூ. 10000 என்றால், ரூ. 1000 எனவும், ரூ. 10001யிலிருந்து ரூ. 20000 வரைக்கும் ரூ. 2000 எனவும், ரூ. 20001 லிருந்து ரூ. 100000 வரையும் ரூ. 3000 வரை தரப்படுகிறது.  இந்த ஊக்கத்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு தரப்படுகிறது. (காலம் - ஜூலை 2027 வரை) அதுவே உற்பத்தித் துறையாக இருந்தால் (Manufacturing) நான்கு ஆண்டுகளுக்கு தரப்படுகிறது.  இந்த நிதி நிறுவனத்தின் பான் கணக்கை அடிப்படையாக இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதோடு நிறுவனத்திற்கு ஜி.எஸ்.டி இருந்தால், பி.எப். தளத்தில் அந்த விவரங்களையும்  பதியவேண்டும்.

 

இதற்கான நிபந்தனைகள்

 

1.       இந்த ஊக்கத் தொகையை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பணியாளர்களின் விவரம் பி.எப். தளத்தில் சரியாக பதிவு செய்யப்படவேண்டும்.

2.       பணியாளரை சரியாக அடையாளப்படுத்தும் விதத்தில் அடையாள எண் (Universal Account Number) உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். உமாங் செயலியில் (Face Authentication) செய்யப்பட்டிருக்கவேண்டும்.

3.       ஐம்பது ஊழியர்களுக்கு கீழ் எண்ணிக்கை கொண்ட நிறுவனங்களாய் இருந்தால், குறைந்தப்பட்சம் இரண்டு பணியாளர்கள் சேர்க்கப்படவேண்டும்.

4.       ஐம்பது ஊழியர்களுக்கு அதிக எண்ணிக்கை கொண்ட நிறுவனங்களாய் இருந்தால், குறைந்தப்பட்சம் ஐந்து பணியாளர்கள் சேர்க்கப்படவேண்டும்.

 


 

புதிய முறை அமுல்படுத்துதல்

 

கடந்த ஆகஸ்டு 2025 வரைக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் அடையாள எண்கள், சம்பள விவரம், பி.எப். விவரம் எல்லாவற்றையும் ஒரு பைலில் (ECR) தொகுத்து தாக்கல் செய்துகொண்டிருந்தோம். இப்பொழுது பி.எப். அதில் நடக்கும் தவறுகளை சரி செய்வதற்காக புதிய முறை (செம்ப்டம்பர் மாத கணக்கை கணக்குப் பார்க்கும்) இந்த அக்டோபர்  மாதத்தில் இருந்து அமுல்படுத்த உள்ளது. அதற்கான வழிகாட்டல்களை 33 பக்கங்களுக்கு புரியும் விதத்தில் ஒவ்வொன்றையும் படங்களாக தந்துள்ளது. இணையத்தில் (USER MANUAL RE-ENGINEERED ECRS) தேடினால் எளிதாக கிடைக்கிறது. பி.எப். தளத்திலும்  அதைத் தரவிறக்கம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

(https://www.epfindia.gov.in/site_en/revamped_ecr.php)

 

முந்தைய முறையில் கட்டணமும், கணக்கு தகவலும் ஒன்று சேர்ந்ததாக இருக்கும்.  இப்பொழுது, Return மற்றும் பண பரிமாற்றம் தனித்தனியாக பிரிக்கப்பட்டு செயல்படும்.  ECR சமர்ப்பிக்கும் முன்பு தவறான தகவல்களை தவிர்த்து, சரியான தகவல்களை தரும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. (System Based Validation)

 

தாமதமாக செலுத்தினால் வரும் வட்டி மற்றும் அபராதத்தை புதிய முறையில் பி.எப். தளமே கணக்கிட்டு தரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.   ஒருமுறை ECR சமர்பிக்கப்பட்டதும், அதில் தவறு இருந்தால், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், அதனை திருத்தும் வசதியும் இருக்கும் என புதிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முறை வந்தாலும், ஏற்கனவே நிறுவனங்கள் தாக்கல் செய்துகொண்டிருந்த பழைய தாக்கல் செய்யும் வடிவத்தை (ECR format) மாற்றம் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆகையால் கொடுக்கப்பட்டுள்ள புதிய மாற்றங்களை கவனத்துடன் புரிந்துகொண்டு, செயல்படுத்துங்கள்.

 

Passbook Lite என்ற புதிய வசதி அறிமுகம்.

 

பி.எப். தனது உறுப்பினர்களுக்கான “Passbook Lite” என்ற புதிய வசதியை  உறுப்பினர்களுக்கான தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதனால் சில அடிப்படைத் தகவல்களை இங்கேயே பார்க்கலாம்.  விரிவாக பார்க்கவேண்டுமென்றால், பாஸ்புக்கிற்கு என இயங்கும் தளத்தில் தனியாக பார்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது.

 

பி.எப். கணக்கை மாற்றுவதற்கான சான்றிதழ் (Annexure K)

Annexure K என்பது பணியாளர் வேலை செய்த முந்தைய கணக்கை புதிய கணக்கிற்கு மாற்றுவதற்கான மாற்றுச்சான்றிதழாகும்.  இப்பொழுது இணையத்திலேயே உறுப்பினர்கள் பெறக்கூடிய வசதியை செயல்படுத்தியுள்ளது முக்கியமானது. இந்த முறை வெளிப்படையானதாகவும், எளிதாக்கியும் உள்ளதாக பி.எப். அறிவித்துள்ளது.

உதாரணமாக…

1.       பணியாளரின் பழைய  கணக்கு TN/12345/678

2.       பணியாளரின் புதிய கணக்கு TN/12345/987

 

முதல் கணக்கில் உள்ள பி.எப். தொகை, சேர்ந்திருக்கும் வட்டித்தொகை அனைத்தையும் இரண்டாவது கணக்கிற்கு மாற்றுவதற்கு இந்த விண்ணப்பம் உதவுகிறது.

 

முன்பணம் (Advance) பெறுவதை விரைவுப்படுத்தப்பட்டுள்ள வசதி

 

ஒரு பணியாளர் தன் கணக்கில் சேகரிக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து, திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல் என  அவசர, அவசிய தேவைகளுக்கு முன்பணம் பெறும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது.  அதற்கான விதிகளையும் விரிவாக தந்துள்ளது.

 

தானாக ஒப்புதல் (Auto settlement) செய்யும் முறை

 

முன்பு பணியாளர்கள் முன்பணத்திற்கு விண்ணப்பிக்கும் பொழுது, அதிகாரிகள் நமது கோரிக்கையை பரிசீலனை செய்த பின்பு தான் நடைபெற்றது.  பணியாளர்களின் அடிப்படை விவரங்கள், தகுதிகள் சரியாக இருந்தால்,  சிஸ்டமே சரிப்பார்த்து, 3-5 நாட்களுக்குள் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்.

 

பழைய வரம்பு ரூ. 1 லட்சம். புதிய வரம்பு ரூ. 5 லட்சம்

 

முன்பு இப்படி தானியங்கி முறையில் முன்பணம் பெறும் வசதி ரூ. 1 லட்சம் வரை இருந்தது. கூடுதலான தொகைக்கு தாமதம் ஏற்பட்டது. இப்பொழுது புதிய முறையில் 5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானது. இதிலும் பணியாளர்களின் அடிப்படை விவரங்கள், தகுதிகள் சரியாக இருந்தால்,  சிஸ்டமே சரிப்பார்த்து, 3-5 நாட்களுக்குள் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,

9551291721


(தொழில் உலகம் அக்டோபர் 2025 இதழில்  இந்தக் கட்டுரை வெளியானது.)

உடலும் மனமும் கவனிக்க வேண்டியது ஏன் அவசியம்?


நம் வாழ்க்கையில் நமது மூளை வேலை நேரமே அதிகம்.

கணக்கு பார்க்கும் போதும்சட்டம் பார்க்கும் போதும்வாடிக்கையாளரை சமாளிக்கும் போதும் — எல்லாம் சிந்தனையையே உபயோகிக்கிறோம்.

உடல் சோர்ந்து போக ஆரம்பித்தால்மனமும்  இணைந்து உழல ஆரம்பிக்கும்.

 

நரம்பியல் நிபுணர் டாக்டர் சுந்தர் ராமன் சொல்கிறார்.

மூளை சரியாக செயல்பட தேவையானது தூக்கமும் இரத்த ஓட்டமும்.
நாம் முதலில் இதையே கவனிக்க வேண்டும்.”

அதாவது,
தூக்கம் → மூளை தெளிவு
நடை/உடற்பயிற்சி → மனம் சீரான நிலை

 

உடல் கவனிப்பது எப்படி?

 

  • தினமும் குறைந்தது அரை மணி நடை.
    இதனால் இரத்த ஓட்டம் சீராகி மூளை புத்துணர்ச்சி பெறும்.
  • உணவு நேரத்தை தவறாமல் செய்ய வேண்டும்.
    குறிப்பாக காலை/மதிய உணவை skip செய்வது →
    மாலை நேரத்தில் எரிச்சல் + கவனம் குறைவு உருவாக்கும்.
  • நாற்காலிமேசை உயரம் சரியாக இருக்க வேண்டும்.
    முதுகுகழுத்து வலி வந்தால் —
    வேலையின் தரம் தான் முதலில் பாதிக்கப்படும்.

 

உட்கரு மருத்துவ நிபுணர் டாக்டர் எம்சண்முகம் சொல்வார்:

உடல் நோய்கள் பெரும்பாலும் சிறு அலட்சியங்களில் தொடங்கும்.
அலட்சியத்தை குறைத்தால் மருந்து தேவையும் குறையும்.”

 

மன நலன் காப்பது எப்படி?


  • ஒரு நாளில் குறைந்தது 10 நிமிடம் அமைதியான மூச்சு பயிற்சி.
    இது மனதில் இருக்கும் “அசைவு” நிதானமாகும்.
  • வேலைக்கு நேரம்வீட்டுக்கு நேரம் — இரண்டுக்கும் எல்லை.
    எல்லை இல்லாத இடத்தில் தான் சோர்வு உருவாகும்.
  • கடினமான வாடிக்கையாளர்களுக்கு தெளிவான வரம்பு.
    மரியாதையுடன், “நாம் பேசும் நேரத்தில் பேசலாம்” என்று சொல்லலாம்.

 

உளவியல் ஆய்வாளர் டாக்டர் கண்ணப்பன் குறிப்பிடுகிறார்:

மன அழுத்தம் என்பது நிகழ்வுகளில் இல்லை;
அதை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதில் உள்ளது.”

 

வாழ்க்கை சமநிலை


வரி கோப்புநிதி அறிக்கை, AO பதில் — இவை எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி.

ஆனா வாழ்க்கை முழுக்க இதல்ல.

குடும்பம்உடல்மன அமைதி — இவை அடிப்படை.

விக்டர் ஃப்ராங்கிள் சொன்னார்:

மனிதனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் துறைகள் —
உறவுநோக்கம்அமைதி.
வேலை அதில் ஒன்று மட்டும்.”

 

சாரமாக….

  • தூக்கம் → மூளை தெளிவு
  • நடை / சிறு உடற்பயிற்சி → மன அமைதி
  • உணவு + நீர் → உடல் நிலை
  • வேலைவாழ்க்கை எல்லை → நீண்டநாள் நலம்

 

நாம் பல காலம் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வேண்டி இருக்கிறது.
அதற்காக நாம்  நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

 

-         - இரா. முனியசாமி, 

            9551291721