> குருத்து

October 9, 2025

அந்த நாள் (1954) ஒரு கொலையும் தொடர் விசாரணையும்


1943 காலக்கட்டம். ஜப்பான் ஆங்கிலேயரை எதிர்த்து இரண்டாம் உலகப்போரில் ஈடுப்பட்டிருந்த காலம். சென்னையில் குண்டு வீசுகிறது. எங்கும் மின்சாரம் இல்லை. பயத்தில் ஊரை விட்டு எல்லோரும் வேறு வேறு இடங்களுக்கு இடம் நகர்கிறார்கள்.

திருவல்லிக்கேணியில் ஒரு நல்ல வசதியாக இருக்கும் ஒரு ரேடியோ என்ஜினியர் துப்பாக்கியால் சுடப்பட்டு, அவர் வீட்டில் இறந்துகிடக்கிறார். போலீசுக்கு தகவல் போகிறது. அப்பொழுது போலீசு துறையில் இப்படிப்ப்பட்ட கொலைகளை துப்பறியும் சிஐடி விசாரணையை துவக்குகிறார்.

சுடப்பட்டவரின் தம்பி, தம்பி மனைவி, பக்கத்துவீட்டுக்காரர், அவருடைய காதலி என விசாரணையில் ஒவ்வொருவராக உள்ளே வருகிறார்கள். யார் கொலை செய்தார்கள் என்பதை கண்டறிந்தார்களா என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

***


1954ல் வந்த படம். ஆனால் இப்பொழுதும் பார்க்க சுவாரசியமாய் இருக்கிறது. குரோசாவின் Rashomon (1950) படம் உலகம் முழுவதும் இப்பொழுது வரை அதன் தாக்கத்தில் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழையும் விட்டுவைக்குமா என்ன?

ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதி, சிஐடி பாத்திரத்தில் நன்றாக நடித்திருமிருக்கிறார். வீணை S. பாலச்சந்தர் சிறப்பாக இயக்கியிருக்கிறார். 50களில் பாடல்களின் தாக்கம் மிக அதிகம். அப்பொழுதே ஒரு பாடல் இல்லாமல் எடுத்தது பெரிய விசயம். சண்டைகளும் இல்லை. ஏ.வி.எம் தயாரித்திருக்கிறது.

படம் வந்த பொழுதில், பெரிய வெற்றி அடையவில்லை. ஆனால் இன்றளவும் பேசப்படுகிற படம் என்பது முக்கியமானது.

சிவாஜி தான் முதன்மை பாத்திரம். தன்னைச் சுற்றி எல்லா பாத்திரங்களும் கொ*லைவெ*றியோடு திரிய வைக்கிற எதிர்மறைப் பாத்திரம். அருமையாக செய்திருக்கிறார். நாயகியாக பண்டரிபாயும் சிறப்பு.

கொலை. அது தொடர்பான விசாரணை துவக்கம் முதல், இறுதி வரை எங்கும் திசை மாறாமல் செல்கிறது. படம் முழுவதும் லேசான நகைச்சுவை காட்சிகளிலும் வசனங்களிலும் தூவப்பட்டு இருக்கிறது. மொத்த படமும் 130 நிமிடங்கள் தான். எல்லா பாத்திரங்களும் உடனுக்குடன் நேரடியாக சொல்வது கொஞ்சம் இயல்பாக இல்லை. அதை கொஞ்சம் இயல்பாக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி, படம் சொல்கிற படி, ஜப்பான் தமிழ்நாட்டில் குண்டு வீசியதா? என தேடிப்பார்த்தால், இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனை பலவீனப்படுத்துவதற்காக கல்கத்தா, அந்தமான் வரை குண்டு வீசியிருக்கிறது. அதை கதைக்காக சென்னை மாகாணம் வரை இழுத்துவிட்டிருக்கிறார்கள்.

திரில்லர் ரசிகர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம். பிரைமில் இருக்கிறது. யூடியூப்பிலும் நல்ல பிரதி கிடைக்கிறது.

October 3, 2025

EPFO and ESI Updates 2025 - Zoom Meeting - 04/10/2025 - சம்பந்தமாக!


வணக்கம். நாளை “EPF & ESI Updates 2025” தலைப்பில் நமது GSTPS சொசைட்டி சார்பில் ஜூம் கூட்டம் நடைபெற இருக்கிறது.   அதில் நான் பேச இருக்கிறேன். வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி.  ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்த தலைப்பில் பேச அழையுங்கள் என தலைவரிடம் தெரிவித்திருந்தேன். அதை நினைவில் வைத்துக்கொண்டு தலைவர் இந்த கூட்டத்தில் பேசுகிறீர்களா? என கேட்டதில் ஒத்துக்கொண்டேன்.


நமது குழுவில் பெரும்பாலும் ஜி.எஸ்.டி, வருமான வரி ஆலோசகர்கள் தான்.  நானும் கூட  அதிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி தான் பார்த்து வருகிறேன்.


இருந்தாலும், கற்றுக்கொண்டதை விட்டுவிடக்கூடாது என்பதற்காக சில நிறுவனங்களுக்கு மட்டும் பார்த்துவருகிறேன்.   தனிநபர் கிளைம்களை பார்ப்பதில்லை.


நம் குழுவில் சில உறுப்பினர்கள் மட்டும் இ.எஸ்.ஐ, பி.எப் பார்த்துவருகிறார்கள்.  அவசியம் கலந்துகொள்ளுங்கள். தேவையானவர்களுக்கு இந்தக் கூட்டத்தின் பேனரை அனுப்பி வையுங்கள். 


மற்றபடி, பி.எப் தனது பத்தாண்டு காலங்களில் ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து, அதனை டிஜிட்டல்மயமாக்கி வருகிறது.  அதற்கு முன்பு பி.எப். அலுவலகத்திற்கு சந்தாதாரர்கள் நடையாய் நடந்தார்கள்.   இப்பொழுதும் மாறிக்கொண்டு இருக்கும் காலம் என்பதால், நேரிடையாக அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆனால் முன்பு போல இல்லை.


சென்னையில் மெட்ரோ வேலைகள் புதிய பாதைகளில் வேலை நடந்துகொண்டு இருக்கிறது. ஆகையால் அந்த பிரதான சாலைகள் சீட்டுக்கட்டு கலைத்துப் போட்டது போல தான் இருக்கிறது.   அங்கு ”எதிர்கால நலனுக்காக, இப்பொழுது கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். மன்னியுங்கள்” என எழுதியிருப்பார்கள்.  அவர்கள் ஒப்புக்காவது மன்னிப்பு கேட்கிறார்கள். பி.எப். கேட்பதில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.


இத்தனை கோடி சந்தாதாரர்களை வைத்திருக்கும் பி.எப். இன்னும் தேவைக்கேற்ப தன் வலைத்தளத்தின் திறனை வளர்த்துக்கொள்வதில்லை என்பது பெரிய சோகம்.  ஆகையால், ஒரு சந்தாதாரர் பகலில் பல நேரங்களில் உள்ளேயே நுழைய முடிவதில்லை.   இன்று காலையில் கூட சில விவரங்கள் பார்ப்பதற்கு உள்ளே நுழைய முயன்றேன். முடியவில்லை.


நாளை காலை 10.45க்கு துவங்கி 11.40  வரை என்னுடைய உரை இருக்கும். 20 நிமிடங்கள்  கேள்வி பதில். 12 மணிக்கு முடிந்துவிடும் என தலைவர் திட்டமிட்டுள்ளார். கூடுதலாக கேள்வி இருப்பவர்கள்  குழுவிலோ, என்னிடம் தனிப்பட்ட முறையிலோ கேளுங்கள். பதிலளிக்கிறேன்.


நன்றி.


- இரா. முனியசாமி.


****



Dear GSTPS Members,


Greetings.  Tomorrow, our society will be hosting a Zoom Meet “EPF & ESI updates 2025”


I had earlier suggested to our President SS Sir that such sessions should be conducted once every six months, and keeping that in mind, he kindly invited me to speak at this meeting. I gladly accepted.


As you know, most of our group members are GST and Income Tax consultants. I also manage GST compliance for many companies. However, to stay updated, I continue to handle a limited number of companies for ESI and PF, though I do not take up individual claim cases.


Only a few members among us are engaged in handling ESI and PF matters on a regular basis. Therefore, I encourage you to attend this session and share the meeting banner with others who may find it useful.


Over the last decade, the EPF department has been gradually digitizing its processes. In earlier days, subscribers had to physically visit PF offices. While improvements are happening, challenges remain—especially with the EPF website, which still does not have adequate capacity despite serving crores of subscribers. Many of us face login issues, as I personally did this morning.


To illustrate, when metro works are carried out in Chennai, road diversions are marked with a note: “For the sake of the future, please bear with us. Sorry for the inconvenience.” At least there, an apology is offered. Unfortunately, PF does not extend the same courtesy to its subscribers despite similar disruptions.


Meeting Details:


Date: Tomorrow (04/10/2025)


Time: 10:45 AM to 11:40 AM (Speech)

Q&A: 11:40 AM to 12:00 Noon

End: 12:00 Noon


If you have additional queries beyond the session, please feel free to raise them in the group or contact me directly. I will be happy to assist.


Looking forward to your participation.


Warm regards,

R. Muniasamy


September 26, 2025

Let me in (2010) ஆங்கிலம்


1983. எங்கும் வெள்ளைப் பனி.   குளிர் வாட்டி வதைக்கிற ஊர். பள்ளி செல்லும் ஒரு 12 வயது பையன்.  அம்மாவும் அப்பாவும் பிரிகிற முடிவில் பிரிந்து வாழ்கிறார்கள். அதனால் வீட்டுச் சூழல் இயல்பானதாக இல்லை.   பள்ளியிலும் இவன் கொஞ்சம் நோஞ்சான் பையனாக இருப்பதால், மூன்று மாணவர்கள் இவனை டார்ச்சர் செய்துகொண்டு இருக்கிறார்கள். மனதளவில் தனிமையில் வாடுகிறான்.


பக்கத்து வீட்டுக்கு ஒரு வயதானவரும் 12 வயது பெண்ணுமாய் புதிதாய் குடியேறுகிறார்கள்.  தனிமையில் இருப்பதால், ஒரு பைனாகுலரை வைத்துக்கொண்டு சுற்றி உள்ளவர்களை நோட்டமிடுவது இவனது வழக்கம்.  அந்த பழக்கத்தில் அந்த பெண்ணையும் நோட்டமிடுகிறான்.


அவள் அத்தனை கடும் பனியிலும் வெறும் காலில் நடக்கிறாள். அவளைச் சுற்றிய நடவடிக்கைகள் கொஞ்சம் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கின்றன. இருவரும் மெல்ல மெல்ல பழக ஆரம்பிக்கிறார்கள்.


சில நாட்களிலேயே அவள் ஒரு ரத்தம் குடிக்கும் காட்டேரி என தெரிந்துவிடுகிறது. அவளுக்கு பல காலமாகவே 12 வயது தான் ஆகிறது.   அவள் உயிர் வாழ்வதற்கு மனித ரத்தம் தேவைப்படுகிறது.  ஊரில் ஆங்காங்கே சிலர் காணாமல் போகிறார்கள். போலீசு துப்பு துலக்க ஆரம்பிக்கிறது.

அவர்களுடைய நட்பு வளர்ந்ததா? போலீசு கைது செய்ததா?  பிறகு என்ன நடந்தது என்பதை  விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

 ****


Let the right one என்ற பெயரில் 2004ல் ஒரு நாவல் எழுதி, புகழ் பெறுகிறது.  அதை ஸ்வீடிசு மொழியில் 2008ல் இதே பெயரில் திரைப்படமாக எடுத்து படம் வெற்றி பெறுகிறது.  பிறகு 2010ல் ஹாலிவுட்டில் இந்த படத்தை எடுக்கிறார்கள்.  இந்தப் படத்தின் உத்வேகத்தில் தான் நம்மூருக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்து லோகா (2015) என மலையாளத்தில் எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் திரைமொழி அத்தனை அடர்த்தியாய் இருந்தது.   கேமிரா கோணங்கள், மிகவும் குறைவான வசனங்கள், ஒன்றை காட்சியில் காண்பிக்காமலே அதன் தீவிரத்தை உணர்த்துவது என சிறப்பாய் இருந்தன.  இயக்குநர் யார் என தேடினால்… Matt Reeves. இவர் Planet of apes சம்பந்தமான இரண்டு பாகங்களை எடுத்தவர்.

கதைக்கு தேவை என்றால் கூட அத்தனை குளிர் பனியில் அந்த பெண்ணை எப்படி வெறும் காலில் எடுத்தார்கள் என ஆச்சர்யமாய் இருக்கிறது. தொழில்நுட்பம் உதவியிருக்குமோ! எல்லா மக்களும் அத்தனை கனத்த ஆடைகளுடன் சுத்தும் பொழுது, ஷூ இல்லாமல் எப்படி உலாவுகிறாள். பார்க்கிறவர்களுக்கு பட்டென்று சந்தேகம் வந்துவிடும் அல்லவா!

அந்த பையனும், பெண்ணும் மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார்கள். காட்டேரியாக இருந்தாலும், அந்த பெண் தன் புன்னகையால் அத்தனை ஈர்க்கிறாள்.  படத்தைப் பார்த்து முடிக்கும் பொழுது, அவளுடன் வரும் பெரியவரின் இன்னொரு பாத்திரம் தான் அந்த பையன் என உணரமுடிந்தது.

காட்டேரிகளின் கதைகள் Originals,  Vanhelsing பல இருந்தாலும், இளம் பருவத்தின் நட்பு என்ற கதைக்களன் புதிதாக இருந்தது.

வாம்பயர் கதை பிடிக்கும் என்பவர்கள் பாருங்கள். இப்பொழுது எந்த ஓடிடியிலும் இல்லை. தமிழில் இல்லை.  வேறு வழிகளில் முயலுங்கள்.