> குருத்து: அமெரிக்க திவால் – “மார்க்சியமே உரைகல்”

January 6, 2009

அமெரிக்க திவால் – “மார்க்சியமே உரைகல்”


இன்றைக்கு அமெரிக்க பொருளாதார திவாலுக்கு பிறகு, பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. எல்லாம் ஏற்கனவே பலமுறை பேசி, பேசி ஓய்ந்து புளித்துப்போன விசயங்கள். முதலாளித்துவம் அதன் தலை முதல் வால் வரை அனைத்தும் அழுகிவிட்டது.

மீண்டும் மீண்டும் எழும் பொருளாதார சுனாமியைத் தவிர்க்க இதோ மார்க்சியம் தீர்வு சொல்கிறது.

"உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு".

மார்க்சின் மூலதனத்தை இன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பலர் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். நன்றாக படிக்கட்டும்.

இனி மார்க்சியம் தான் உலகை ஆளும்.


October 20, 2008
Banking crisis gives added capital to Karl Marx’s writings
Roger Boyes in Berlin


Bankers of the world, unite! You have nothing to lose but your bonuses, houses in Esher, holidays in the Caribbean and your Jermyn Street shirts. The upside is that you have the time, at last, to read the complete works of Karl Marx.
The prophet of revolutionaries everywhere, the scourge of capitalism, is enjoying a comeback.
In Germany Das Kapital, which for the past decade has been used mainly as a doorstop, is flying off the shelves as the newly disenfranchised business class tries to work out the root of the present crisis.
“Marx is fashionable again,” declares Jörn Schütrumpf, head of the Berlin publishing house Dietz, which brings out the works of Marx and his collaborator Friedrich Engels. Sales have trebled – albeit from a pretty low level – since 2005 and have soared since the summer.... continues.
http://business.timesonline.co.uk/tol/business/economics/article4974912.ece
****
ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (பு.ஜ.வில் வெளிவந்த கட்டுரையின் இறுதிப் பகுதி தொடர்கிறது)

மார்க்சியமே உரைகல்


"முதலாளித்துவ உற்பத்தி முறையில், ஒரு நெருடிக்கடிக்கான தீர்வு இன்னொரு நெருக்கடிக்குத் தான் இட்டுச் செல்லும்; நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை விழுங்கி, தமது ஏகபோக ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும்; நாடாளுமன்ற என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடி மறைக்கும் திரை'' என மார்க்சியம் முன்னறிந்து கூறிய பல உண்மைகளை இந்த "நெருக்கடி'' உலக மக்களின் முன்னே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது.

முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்ற சோசலிசம்தான் தீர்வு; உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு என்கிறது மார்க்சியம்.

ஆனால், முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களில் ஒரு சாரர், பங்குச் சந்தை சூதாட்டத்தைச் சட்டம் போட்டுக் கண்காணிக்க வேண்டும்; கள்ளனை விடக் காப்பாளன் திறமைசாலியாக இருக்க வேண்டும் எனத் தீர்ப்பு சொல்கிறார்கள். காகிதச் சட்டங்களின் மூலம் முதலாளித்துவத்தின் ஊழலையும், மோசடித்தனத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என நம்புவது கடவுள் நம்பிக்கையைவிட மூடத்தனமானது. முதலாளித்துவச் சட்டங்கள், சுண்டெலியை வேண்டுமானால் பிடிக்குமேயொழிய, பெருச்சாளிகள் தப்பிப் போவதைக் கண்டு கொள்ளாது.

பங்குச் சந்தை சூதாடிகளும், வங்கிகளும் 1930இல் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, கண்காணிப்புச் சட்டங்கள் போடப்பட்டன. 1990இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தடுக்க, பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் சட்டங்கள் நீக்கப்பட்டன. இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க, ""மீண்டும் சட்டம்கண்காணிப்பு'' என்பது கிழடு தட்டிப் போன தீர்வாகும்.

இன்னொரு பிரிவினரோ, "சந்தை தவறு செய்யாது; பேராசையால் தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக''க் கண்டுபிடித்து, "நிதி நிறுவனங்கள் பேராசையைத் துறக்க வேண்டும்'' என உபதேசித்து வருகிறார்கள். இந்த அறிவுரைக்கு முதலாளிகளின் பதில் என்ன தெரியுமா?

அமெரிக்காவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான "ஏ.ஐ.ஜி''க்கு, 8,500 கோடி
டாலர்களைக் கொடுத்து, அந்நிறுவனம் திவாலாகிவிடாமல் கை தூக்கி விட்டது, அமெரிக்க அரசு. இந்தப் பணம் கைக்குக் கிடைத்த மறுநிமிடமே, அந்நிறுவனம் முகவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில், கலிபோர்னியா மாநிலத்தில் மொனார்க் கடற்கரையில் உள்ள ஆடம்பரமான செயிண்ட் ரேகிஸ் உல்லாச விடுதியில் 4,43,000 டாலர் செலவில் களிவெறியாட்டக் கூத்தை நடத்தியது. ஏ.ஐ.ஜி. அதிகாரிகள் மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பது வெளியே கசிந்தவுடன், அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதனால், ஏ.ஐ.ஜி. மற்றொரு களியாட்டக் கூத்தை நடத்த முடியாமல் கைகழுவியது; எனினும், ""நிகழ்ச்சி ரத்தானது தங்களைச் சோர்வடையச் செய்துவிட்டதாக''க் குறைபட்டுக் கொண்டார்கள், அதன் அதிகாரிகள்.

ஊதாரித்தனத்தையும், ஒட்டுண்ணித்தனத்தையும் கைவிட மறுக்கும் இக்கும்பலை, "சீட்டுக்
கத்தரித்து வாழும் சுகஜீவிகள்'' என அடையாளம் காட்டினார், லெனின். இச்சமூக விரோதக் கும்பலைப் போதனைகளால் திருத்திவிட முடியாது. இவர்களையும், இவர்களைப் பாதுகாக்கும் ஏகாதிபத்திய சமூகக் கட்டமைப்பையும் தூக்கியெறியும் போராட்டமே தீர்வாகும்!

• செல்வம்

நன்றி :
புதிய ஜனநாயகம் – நவம். 2008

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

//"சீட்டுக்
கத்தரித்து வாழும் சுகஜீவிகள்'' //

இந்த கோமான்களை கம்பியெண்ணவிட்டால்தான் மக்களுக்கு விடிவு

புரச்சி