> குருத்து: பங்குச் சந்தை
Showing posts with label பங்குச் சந்தை. Show all posts
Showing posts with label பங்குச் சந்தை. Show all posts

October 19, 2010

தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை சூறையாட துடிக்கும் "மக்கள் நல அரசு"!



தொழிலாளர்களின் சேமிப்பு பணமான வருங்கால வைப்பு நிதியின் (Provident Fund - PF) இன்றைய கையிருப்பு ரூ. 5 லட்சம் கோடிகள். இந்த பணத்தை பங்கு சந்தை சூதாட்டத்தில் இறைக்க சொல்லி, மத்திய அரசு தனது நிதி அமைச்சகம் மூலமாக வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை வற்புறுத்துகிறது.

கடந்த 58 ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி பணத்தை அரசு வங்கியான எஸ்.பி.ஐ. தான் நிர்வகித்து வந்தது. இவ்வளவு பணமும் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறதே என நினைத்த மன்மோகன்சிங் அரசு, 2008ல் முதன்முறையாக பி.எப். பணத்திலிருந்து 2.5 லட்சம் கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல், ஐசிஐசிஐ புரூடன்சியல், HSBC போன்ற தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தூக்கி தந்தது. அந்த பணத்தின் கதியே இன்றைக்கு என்ன நிலை என்று தெரியவில்லை.

அந்த சமயத்தில், நாடு முழுவதும், தொழிற்சங்கங்கள் தனது எதிர்ப்பை காட்டின. இப்பொழுது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மீதியுள்ள பணத்தையும் பங்கு சந்தையில் கொட்ட காய் நகர்த்துகிறது. இதற்காக சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், "பங்குச் சந்தையில் போடலாம்! ஆனால், அப்படி போடுகிற பணத்திற்கு அரசு உத்திரவாதம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காத பட்சத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது" என்று பி.எப். நிதியை நிர்வாகம் செய்யும் மத்திய அறங்காவலர் வாரியம் அரசுக்கு தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் நிதி மூலதன சூதாடிகள் பந்தய ஒப்பந்தங்கள் மூலமாகவும் பல்வேறு வகைகளில் விளையாடி தான், உலகமே நிதி நெருக்கடிக்குள் சிக்கியது. அதிலிருந்தே முதலாளித்துவ உலகம் மீளமுடியாமல் சிக்கி திணறிக்கொண்டிருக்கிறது. சீட்டு விளையாடுபவன் விளையாடி கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் கை நடுங்கும் அல்லவா! அது போல உலகம் முழுவதுமே நிதி மூலதன சூதாடிகள் எங்கெல்லாம் பாதுகாப்பாக பணம் இருக்கிறதே அதையெல்லாம் பங்குச்சந்தையில் கொட்டு என எல்லா அரசுகளையும் மிரட்டி வருகிறார்கள். இந்தியாவில், மன்மோகன் சிங் தான் நிதிமூலதன சூதாடிகளுக்கு நல்ல விசுவாசமான ஆள் அல்லவா! அதனால், பி.எப். நிதியை சூறையாட துடியாய் துடிக்கிறார்.

இதன் அபாயத்தை தொழிலாளர்கள் உணர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். ஏற்கனவே நடத்திய போராட்டங்களின் விளைவாக தான் "உத்திரவாதம் தா!" என பேச வைத்திருக்கிறது. ஆகையால் தொழிலாளர்கள் இறுதிவரை தொடர்ந்து போராட வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள் :

அரசு உறுதி அளிக்காதவரை பி.எஃப். பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது: மத்திய தொழிலாளர் நலத்துறை

December 4, 2009

பரஸ்பர நிதிகள் - ஒரு அறிமுகம்!



முன்குறிப்பு : பரஸ்பர நிதிகள் - இது குறித்து அடிக்கடி பத்திரிக்கைகளில் விளம்பரம் பார்க்கிறோம். பரஸ்பர நிதிகள் என்னவென்றும், அதன் பயன்கள் மற்றும் குறைபாடுகள் பற்றி ஒரு அறிமுகத்தை பாலகார்த்திகா அவர்கள் எழுதிய இந்த கட்டுரை விளக்குகிறது.

மற்றபடி, மூழ்காது (risks) என்று சொல்வது, பொருளாதார நெருக்கடியின் பொழுது பரஸ்பர நிதிகளின் கதி என்னவாயிற்று என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

******

பரஸ்பர நிதிகள் என்றால் என்பது ஒரு வித முதலீட்டு நிறுவனங்களே! 'சிறு துளி பெருவெள்ளம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவன இந்தப் பரஸ்பர நிதிகள். நீங்கள் எத்தகைய முதலீடு செய்யவேண்டும் என்று விரும்பினாலும் அதற்கேற்ற ஒரு முதலீட்டுத் திட்டத்தை(Investment Scheme), பரஸ்பர நிதியங்கள் வழங்குகின்றன.ஏறத்தாழ இருபது வருடங்களாகப் பிரபலமாக இருக்கும் இந்தப் பரஸ்பர நிதியங்களுக்கான தொடக்கம் 1774ம் ஆண்டே ஹாலந்து நாட்டில் ஏற்பட்டது. இன்று பங்குச்சந்தைக்கு இணையாக பரஸ்பர நிதியங்கள் பல வந்துவிட்டன.

பரஸ்பர நிதியங்கள் எப்படிச் செயல்படுகின்றன?

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட லட்சக்கணக்கான தொகையை, பங்கு நிறுவனங்களில் உள்ள நிதி நிர்வாகிகள் பல விதமான பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றனர். பங்குகளுக்குக் கிடைக்கும் பங்காதாயமும், கடன் பத்திரங்களில் கிடைக்கும் வட்டியும் முதலீடு செய்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. அது மட்டுமின்றி, நிதியங்கள் தம்மிடம் இருக்கும் பங்குகளை விற்பதால் கிடைக்கும் லாபம், முதலீட்டாளர்கள் தங்கள் பரஸ்பர நிதி முதலீடுகளை நிகர சொத்து மதிப்பினை(Net Asset Value-NAV) விடக் குறைவான விலையில் (Discount) செய்வதால் கிடைக்கும் லாபம் இவையும் பரஸ்பர நிதியங்களில் செய்யும் முதலீடுகளை கவர்ச்சிகரமாக மாற்றுகின்றன.

பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதால் என்ன பயன்?

சாதாரணமாக நாமே நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதால் கீழ்க்கண்ட பயன்கள் விளைகின்றன.


பயன் ஒன்று:
அபாயக்குறைவு. எந்த முதலீடாக இருந்தாலும் அதில் கொஞ்சம் ஆபத்து (Risk) இருக்கத்தான் செய்யும். ரிஸ்க் என்பதே இல்லாத முதலீடு எதுவுமே கிடையாது. ஆனால், நீங்கள் பங்குகளில் முதலீடு செய்கையில் பல்வேறு விதமான பங்குகளில் உங்களால்
ஈடுபட முடியாது. அதாவது பரவல் (Diversification) குறைவு. அது ரிஸ்க்கை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் பரஸ்பர நிதியங்களில் நீங்கள் முதலீடு செய்யும்பொழுது, உங்கள் பணமும், உங்களைப் போன்ற பல முதலீட்டாளர்களின் பணத்துடன் சேர்ந்து பல வகை நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இதன் காரணமாக உங்கள் பணத்தின் மீதான ரிஸ்க் குறைகிறது

பயன் இரண்டு: திறமையும் அனுபவமும் மிக்க நிதி நிர்வாகம். நீங்கள் உங்கள் பணத்தை எந்தப் பங்கில் முதலீடு செய்வது என்று தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணத்தை சிறந்த, லாபம் தரக்கூடிய, நம்பிக்கைக்குரிய பங்குகளில் முதலீடு செய்வது பரஸ்பர நிதி நிறுவனங்களில் உள்ள நிதி நிர்வாகிகளின் பொறுப்பாகி விடுகிறது.

பயன் மூன்று: சிறிய அளவு முதலீடுகள். சிறிய முதலீடாக இருப்பின் பல விதமான பங்குகளில், பல நிறுவனங்களில் முதலீடு செய்ய இயலாது. அதற்கு நிறையப் பணம் தேவைப்படும். பரஸ்பர நிதியங்களில் நீங்கள் எவ்வளவு சிறிய அளவு தொகையையும் முதலீடு செய்ய இயலும். அத்துடன் சில பரஸ்பர நிதி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது

பரஸ்பர முதலீடுகளின் வகைகள்:

பரஸ்பர நிதியில் செய்யப்படும் முதலீடுகளைப் பொதுவாக இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை - சமபங்கு நிதி (Equity Share Funds), நிலையான வருமானம் தருபவை (Fixed Income Funds)
சமபங்கு நிதி என்பது பல நிறுவனங்களில் பங்குகளில் முதலீடு செய்யப்படுவது. இப்பங்குகள் கொஞ்சம் அபாயகரமானவை எனினும், இதன் பரவல் (Diversification) காரணமாக, பொதுவாக நல்ல இலாபமீட்டக் கூடியவையாகவே திகழ்கின்றன. இவற்றின் இரண்டு உட்பிரிவுகள் சமநிலைப்பங்கு (Balance Fund) மற்றும் சிறப்பம்சப் பங்குகள் (Speciality Fund). சமநிலைப்பங்கு என்பது, சரியான விகிதத்தில் பங்குகளிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வதாகும். சிறப்பம்சப் பங்குகள் என்பது ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கில் மட்டும் முதலீடு செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது. சில பரஸ்பர முதலீடு நிறுவனங்கள், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் மட்டும் முதலீடு செய்வது, புகையிலை, மது முதலியவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் இருப்பது என்று சமூக உணர்வுடன் இணைந்த முதலீடுகளை மேற்கொள்கின்றன.

நிலையான வருமானம் தரும் பரஸ்பர நிதி முதலீடுகள்: பங்குகளில் முதலீடு செய்யாமல், திரட்டிய நிதியை அரசு மற்றும் தரமான நிறுவனங்களில் கடன் பத்திரங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. இதனால் கிடைக்கும் வட்டியானது மாதாமாதம் இத்தகைய முதலீடுகளில் பணம் போட்ட முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது.

இவை தவிர, குறுகிய கால கருவூல வரைவு (Treasury Bill), பணச்சந்தை முதலீடுகள் (Money Market Instruments) குறியீட்டு நிதி (Index Fund ) என்று மேலும் வகைகள் உள்ளன.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் குறைபாடுகள்:

கட்டணங்கள்: நேரடியாக நாமே முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கையில் லாபம் குறைவது உண்டு. ஏனெனில், நாம் பலவிதமான கட்டணங்களைச் செலுத்த நேரிடுகிறது.
நிதி நிறுவனங்களில் உண்மையாகவே அனுபவமும் திறனும் நிறைந்த நிதி நிர்வாகிகள்தான் இருக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது.சரியான முறையில் நிர்வகிக்கப் படாத பரஸ்பர நிதிகளில் செய்யப்படும் முதலீடுகள் சரியான அளவு லாபத்தைக் கொடுப்பதில்லை. எனவே நல்ல தரமான, அனுபவமுள்ள நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்வது அவசியம். பரஸ்பர நிதிகள் குறித்து மேலும் சில தகவல்களைத் தொடரும் கட்டுரைகளில் காண்போம்.

- பாலகார்த்திகா

நன்றி : ஈழநேசன்

November 22, 2009

பொருளாதாரம் - சில குறிப்புகள்

பொருளாதார சமச்சாரங்கள் மற்ற துறை சமாச்சாரங்களை போல நாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பொருளாதார சமச்சாரங்கள் தான் நாட்டின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கின்றன.

பொருளாதார செய்திகளை பல தளங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பொருளாதார விசயங்களை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ள கூடிய கட்டுரைகள் தமிழில் கிடைப்பது அரிதாக தான் இருக்கிறது.

இதற்கு முன்பாக பொருளாதாரம் தொடர்பாக, கட்டுரைகள் எழுதப்பட்ட பொழுதும், வேறு சில பதிவர்கள் எழுதிய கட்டுரைகளையும் நன்றி சொல்லி வெளியிட்ட பொழுதும், எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாகவும் நண்பர்களும், தோழர்களும் தெரிவித்திருந்தார்கள்.

குருத்து தளத்தில் அரசியல், திரைப்படம், பண்பாடு என தலைப்புகளில் எழுதினாலும், கூடுதலாக பொருளாதார விசயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன். (நமக்கு எது உருப்படியாக வருகிறதோ அதையே செய்வோம் என்ற நல்லெண்ணம் தான்) உங்கள் கருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள். முடிந்தமட்டிலும் சுவாரசியமாக படிக்கும் விதங்களில் எழுத முயற்சிக்கிறேன்.

கட்டுரைகளின் தலைப்புகளை கிளிக்கினால், அந்தந்த கட்டுரைகளுக்கு இட்டுச்செல்லும்.

கடந்த பதிவுகளில்... எழுதப்பட்ட பொருளாதார கட்டுரைகள்:

* பணவீக்கம் என்றால் என்ன? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

* வறுமைக்கோடு என்றால்? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

* அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி - புதிய ஜனநாயகம்

* முதலாளித்துவ பொருளாதாரம்

* பங்குச்சந்தை சூதாட்டம்

* பங்கு சந்தையும் குரங்கு கதையும்

* டாலர் யானை புகுந்தாலும் நட்டம்; வெளியேறினாலும் நட்டம்

* ஊக வணிகம் - பந்தய ஒப்பந்தங்கள் என்றால்?

* கொள்ளையடிப்பது நிதிமூலதன கும்பல்கள்! பரிதவிப்பது தொழிலாளர்கள்!

* பந்தய ஒப்பந்தங்கள் - சில குறிப்புகள்

* பெட்ரோலில் முடிந்தமட்டும் கொள்ளையடி! - பதிவர் லைட்ங்க்

* என்ரான் ஊழல் - அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்!

* பந்தய ஒப்பந்தங்களின் தன்மை

* இந்திய வளர்ச்சியின் உண்மைநிலை - டாக்டர் அர்ஜூன் சென்குப்தா - மொழிபெயர்ப்பு - லைட்ங்க்

*. அந்நிய முதலீடு - சில குறிப்புகள் - பதிவர் லைட்ங்க்

* அமெரிக்க திவால் - பொன் முட்டை இடும் வாத்து" திட்ட ஊழல்

* அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் - புதிய ஜனநாயகம்

* முதலாளித்துவம் ஆளும் தகுதியை இழந்துவிட்டது.

* அமெரிக்க திவால் - மார்க்சியமே உரைகல் - புதிய ஜனநாயகம்

* சத்யம் கம்யூட்டர்ஸ் - இன்னொரு என்ரான் ஊழல்

* கார்ப்பரேட் கிரிமினல்கள் - பதிவர் லைட்ங்க்

* பற்றி பரவுகிறது வர்க்கப் போராட்டம், அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்.

* நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால் - தட்ஸ்தமிழ்

* காங்கிரசு அரசின் புள்ளிவிவர பித்தலாட்டங்கள் - பதிவர் லைட்ங்க்

* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும்

* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும் - பாகம் 2

* தங்கம் விலை எகிறுவது ஏன்? -பாகம் 1 - டிமேட் அக்கவுன்ட் என்றால்? - தினமணிக்கதிர்

* தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 2 - தங்கம் எதற்காக? - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை

* தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 3 - தங்கம் எதற்காக? கட்டுரையின் தொடர்ச்சி - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை

January 16, 2009

கார்ப்பரேட் கிரிமினல்கள்


நன்றி : லைட்ங்க்

நீங்கள் துப்பாக்கி முனையில் யாரை யாவது மிரட்டி சில ஆயிரம் ரூபாய்களை கொள்ளையடித்தீர்களானால் இந்த நாட்டில் உங்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி. ஆனால் உங்கள் மீது நம்பிக்கை வைத்து மற்றவர்கள் கொடுக்கிற பெருவாரியான பணத்தை வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டால் உங்களுக்கு அவ்வளவு பெரிய தண்டனை கிடைக்காது. ஓராண்டோ அல்லது அதிகபட்சமாக மூன்றாண்டோ சிறைவாசம் மட்டுமே.

பசியால் துடிக்கிற ஒருவர் ஒரு கடையில் உணவுபொருளை திருடிவிட்டால் அவரை பல ஆண்டுகள் சிறைக்குள் தள்ள முடியும். ஆனால் இந்திய பங்குச் சந்தை, மையம் கொண்டிருக்கிற மும்பை தலால் தெருவில் உட்கார்ந்து கொண்டு, நீங்கள் வாழ்க்கை முழுவதும் சேமித்த பணத்தை சூறையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. இதுதான், பெரும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் செய்யும் கடும் குற்றங்கள் மீதான இந்திய சட்ட நடைமுறையின் அதிகபட்ச பிரதிபலிப்பு.

பெரும் நிறுவன கிரிமினல்கள் மீது மிகவும் சாதுவான முறையில் நடந்து கொள்ளும் விதத்திலேயே இந்திய சட்ட அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது.

கடந்த புதன்கிழமை புத்தாண்டு கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. சில மணி நேரங்களிலேயே, இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்களில் ஒன்றான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில், தாங்கள் முதலீடு செய்திருந்த பணம் பங்குச்சந்தையில் காணாமல் போய்விட்டதை, ஆயிரக்கணக்கான இந்திய முதலீட்டாளர்கள் அறிந்து பதறினர்.
சத்யம் நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்று. உலகம் முழுவதும் பெரும் நிறுவனங்கள் என்று பட்டியலிடப் பட்ட 500 கம்பெனிகளில் இதுவும் ஒன்று.

இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக பங்குதாரர்களின் பணத்தை சூறையாடிய அதன் தலைவர் ராமலிங்க ராஜூ, தற்போது சட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார். நேற்றுவரைக்கும் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து எதையும் செய்யாத இந்த கார்ப்பரேட் பிசினஸ் மேக்னட், இன்று சட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறுவது விந்தையானது.

ராஜூவுக்கு தெரியும், இந்திய சட்ட அமைப்புமுறை தன்னைப்போன்ற பெரும் பணக்காரர்களுக்கு உதவியாகவே இருக்கிறது என்று. தான் சிறைக்கு செல்லப் போவதில்லை என்றும் அவருக்குத் தெரியும். ஒருவேளை அப்படி நடந்தாலும், முதலீட்டாளர்களிடம் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஏராளமான வழக்கறிஞர்களை விலைக்கு வாங்கி ஓரிரு நாட்களிலேயே அவரால் பெயிலில் வரமுடியும்.

சத்யம் நிறுவன ஊழல் இந்த நாட்டில் நடக்கிற முதல் ஊழல் அல்ல. ஹர்சத் மேத்தாவில்
துவங்கி, கேதன் பரேக் முதல் சி.ஆர்.பன்சாலி (பார்க்க: படம்) வரை நம்மிடம் ஏராளமான மோசடிப் பேர்வழிகளின் பட்டியல் இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்த 5,651 கம்பெனிகளில், 2,750 கம்பெனிகள் மாயமாய் மறைந்து போய்விட்டன; சும்மா போகவில்லை, தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் பொது மக்களின் பணத்தை பல நூறு கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டு காணாமல் போய்விட்டன.

ஆனால் இவர்களுக்கெல்லாம் சட்ட ரீதியான தண்டனை கிடைத்ததா?

இந்த பெரும் ஊழல்களின் விளைவாக, அந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனார்கள். ஆயிரக்கணக்கானோர், தங்களது வாழ் நாள் சேமிப்பை இழந்தார்கள். ஆனால் குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப் படவில்லை.

உலகம் முழுவதும் பொதுவாக ஊழல் பேர்வழிகள் என்று வெறுப்புணர்வு உண்டாக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளை விட, இந்த கார்ப்பரேட் கிரிமினல்கள் ஆபத்தானவர்கள். ஊழல்செய்த அரசியல்வாதிகள் கூட, சில பல ஆண்டுகள் சிறையில் கழிக்கிறார்கள்.

இங்கு நடப்பதற்கு மாறாக சில வளர்ந்த நாடுகளில் கார்ப்பரேட் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படு கிறது. 2006ல் அமெரிக்காவில் நிதி நிறுவன ஊழல் செய்து மாட்டிக்கொண்ட ஜெப்ரி கே ஸ்கில்லிங்கிற்கு 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் சிறையில் இருக்கிறார். மிகப்பெரும் ஊழலில் சிக்கிய என்ரான் நிறுவனத்தின் தலைவர் கென்னத் லே-க்கு
(பார்க்க: படம்) 20 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசம் துவங்குவதற்கு முன்னரே அவர் இறந்துபோனார். அந்த நிறுவனத்தின் ஊழலுக்கு உதவிய தணிக்கையாளர் ஆர்தர் ஆண்டர்சனின் நிறுவனம் மூடப்பட்டது.

நிதி முறைகேடு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்ட வேர்ல்டு காம் நிறுவனர்களில் ஒருவரான பெர்னார்டு எப்பர்ஸ் 25 ஆண்டு சிறைதண்டனையை அனுபவித்து வருகிறார்.

சத்யம் நிறுவனத்தில் ராமலிங்க ராஜூவும் அவரது கூட்டாளிகளும் நிதி கணக்குகளை கள்ளத்தனமாக மாற்றி எழுதியுள்ளனர். மேலே குறிப்பிடப்பட்ட தண்டனைகளைப் போல இவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்று சத்யம் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்க முடியுமா? இவர்கள் மேற்கொண்ட மோசடி கணக்குகளுக்கு சான்றிதழ் கொடுத்த ஆடிட்டர்களுக்கு சிறைவாசம் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? இதற்கு, ‘இல்லை’ என்று ஒரே பதில்தான் இருக்கிறது.

இந்திய தண்டனைச்சட்டம் 1860ல் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தை உருவாக்கிய தாமஸ்
பாபிங்டன் மெக்காலே, (பார்க்க: படம்) முற்றிலும் இன ரீதியான மற்றும் வர்க்க ரீதியான பாகுபாட்டோடுதான் இச்சட்டத்தை வடிவமைத்தார். இச்சட்டம் அப்போதைய பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும், அவர்களது இந்திய கூட்டாளிகளுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய நிதிக்குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட தண்டனை அளிக்கவில்லை.

பிரிட்டிஷ் இந்தியாவில், நிர்வாகத்திலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் பிரிட்டிஷ்காரர்களே உயர்அதிகாரிகளாக இருந்தனர். இவர்கள் நிதி தொடர்பான குற்றங்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிந்தும், அவர்களது உள்ளூர் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ஜமீன்தார்கள், ஏழை மக்களின் நிலங்களை மோசடி செய்து அபகரித்த போதிலும் அவர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காதவிதத்தில் இந்திய தண்டனைச்சட்டம் வடிவமைக்கப்பட்டது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்கு உடல் ரீதியாக போலீசாரால் தண்டனை ஏதும் தரப்படாதவிதத்தில் இந்த சட்டம் அமலாக்கப்பட்டது.

பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டை விட்டு போனபின்னரும், இந்த சட்டங்களில் சில, ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவானதாக இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய தண்டனைச்சட்டம் மட்டுமல்ல, வேறு சில நிதிச்சட்டங்களும் கூட இந்த வகைப்பட்டவையே. இப்படித்தான், பெரு மளவு வருமான வரி ஏய்ப்பு செய்தாலும் கூட வெகுசில மாதங்கள் மட்டுமே தண்டனை அளிக்கிற வருமான வரிச்சட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம். வருமானவரி சட்டத்தில், பெரும்பாலான குற்றங்களுக்கு அபராதம் செலுத்தினால் போதும் என்றே விதிகள் உள்ளன.

இதனால்தான் வரி ஏய்ப்பும் மோசடியும் ஊக்குவிக்கப்படுகிறது. சிறிய வணிகர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை வரி ஏய்ப்பு எளிதாக செய்ய முடிகிறது. பலவீனமான சட்டங்கள் இருப்பது அவர்களுக்கு தெரியும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படித்தான் மெகா மோசடிகளை செய்ய அச்சமின்றி துணிந்துள்ளன. இவற்றை தண்டிக்க வலுவான சட்டங்கள் மட்டுமின்றி அரசியல் உறுதியும் தேவை. போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். மிகப்பெரிய பேரழிவு அது. ஆனால் இந்த நிறுவனத்தின் தலைவர் வாரன்
ஆண்டர்சன் (பார்க்க: படம்) கைது செய்யப்பட்ட அடுத்த நாளே வெளியில் வந்துவிட்டார். இந்திய தொழில் நிறுவனங்களின் வரலாற்றில் மிகப் பெரும் குற்றம் இழைத்த இந்த நிறுவனத்தின் தலைவரை, இந்த குற்றத்திற்கு எப்படி பொறுப்பாக்குவது என்று சட்டத்திற்கு தெரியவில்லை.

இந்தியாவில் புதிய பயங்கரவாத ஒழிப்பு சட்டங்கள், பழைய சட்டங்களில் திருத்தங்கள், நீதித்துறை ஆணையம் ஆகியவற்றை பற்றி தீவிரமாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன மோசடி வெளியாகியுள்ளது. இந்த மிகப்பெரும் கார்ப்பரேட் குற்றத்தை இந்திய சட்டம் எப்படி கையாளுகிறது என்பதை பார்ப்போம்.

நன்றி : http://lightink.wordpress.com

January 6, 2009

அமெரிக்க திவால் – “மார்க்சியமே உரைகல்”


இன்றைக்கு அமெரிக்க பொருளாதார திவாலுக்கு பிறகு, பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. எல்லாம் ஏற்கனவே பலமுறை பேசி, பேசி ஓய்ந்து புளித்துப்போன விசயங்கள். முதலாளித்துவம் அதன் தலை முதல் வால் வரை அனைத்தும் அழுகிவிட்டது.

மீண்டும் மீண்டும் எழும் பொருளாதார சுனாமியைத் தவிர்க்க இதோ மார்க்சியம் தீர்வு சொல்கிறது.

"உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு".

மார்க்சின் மூலதனத்தை இன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பலர் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். நன்றாக படிக்கட்டும்.

இனி மார்க்சியம் தான் உலகை ஆளும்.


October 20, 2008
Banking crisis gives added capital to Karl Marx’s writings
Roger Boyes in Berlin


Bankers of the world, unite! You have nothing to lose but your bonuses, houses in Esher, holidays in the Caribbean and your Jermyn Street shirts. The upside is that you have the time, at last, to read the complete works of Karl Marx.
The prophet of revolutionaries everywhere, the scourge of capitalism, is enjoying a comeback.
In Germany Das Kapital, which for the past decade has been used mainly as a doorstop, is flying off the shelves as the newly disenfranchised business class tries to work out the root of the present crisis.
“Marx is fashionable again,” declares Jörn Schütrumpf, head of the Berlin publishing house Dietz, which brings out the works of Marx and his collaborator Friedrich Engels. Sales have trebled – albeit from a pretty low level – since 2005 and have soared since the summer.... continues.
http://business.timesonline.co.uk/tol/business/economics/article4974912.ece
****
ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (பு.ஜ.வில் வெளிவந்த கட்டுரையின் இறுதிப் பகுதி தொடர்கிறது)

மார்க்சியமே உரைகல்


"முதலாளித்துவ உற்பத்தி முறையில், ஒரு நெருடிக்கடிக்கான தீர்வு இன்னொரு நெருக்கடிக்குத் தான் இட்டுச் செல்லும்; நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை விழுங்கி, தமது ஏகபோக ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும்; நாடாளுமன்ற என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடி மறைக்கும் திரை'' என மார்க்சியம் முன்னறிந்து கூறிய பல உண்மைகளை இந்த "நெருக்கடி'' உலக மக்களின் முன்னே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது.

முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்ற சோசலிசம்தான் தீர்வு; உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு என்கிறது மார்க்சியம்.

ஆனால், முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களில் ஒரு சாரர், பங்குச் சந்தை சூதாட்டத்தைச் சட்டம் போட்டுக் கண்காணிக்க வேண்டும்; கள்ளனை விடக் காப்பாளன் திறமைசாலியாக இருக்க வேண்டும் எனத் தீர்ப்பு சொல்கிறார்கள். காகிதச் சட்டங்களின் மூலம் முதலாளித்துவத்தின் ஊழலையும், மோசடித்தனத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என நம்புவது கடவுள் நம்பிக்கையைவிட மூடத்தனமானது. முதலாளித்துவச் சட்டங்கள், சுண்டெலியை வேண்டுமானால் பிடிக்குமேயொழிய, பெருச்சாளிகள் தப்பிப் போவதைக் கண்டு கொள்ளாது.

பங்குச் சந்தை சூதாடிகளும், வங்கிகளும் 1930இல் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, கண்காணிப்புச் சட்டங்கள் போடப்பட்டன. 1990இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தடுக்க, பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் சட்டங்கள் நீக்கப்பட்டன. இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க, ""மீண்டும் சட்டம்கண்காணிப்பு'' என்பது கிழடு தட்டிப் போன தீர்வாகும்.

இன்னொரு பிரிவினரோ, "சந்தை தவறு செய்யாது; பேராசையால் தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக''க் கண்டுபிடித்து, "நிதி நிறுவனங்கள் பேராசையைத் துறக்க வேண்டும்'' என உபதேசித்து வருகிறார்கள். இந்த அறிவுரைக்கு முதலாளிகளின் பதில் என்ன தெரியுமா?

அமெரிக்காவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான "ஏ.ஐ.ஜி''க்கு, 8,500 கோடி
டாலர்களைக் கொடுத்து, அந்நிறுவனம் திவாலாகிவிடாமல் கை தூக்கி விட்டது, அமெரிக்க அரசு. இந்தப் பணம் கைக்குக் கிடைத்த மறுநிமிடமே, அந்நிறுவனம் முகவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில், கலிபோர்னியா மாநிலத்தில் மொனார்க் கடற்கரையில் உள்ள ஆடம்பரமான செயிண்ட் ரேகிஸ் உல்லாச விடுதியில் 4,43,000 டாலர் செலவில் களிவெறியாட்டக் கூத்தை நடத்தியது. ஏ.ஐ.ஜி. அதிகாரிகள் மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பது வெளியே கசிந்தவுடன், அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதனால், ஏ.ஐ.ஜி. மற்றொரு களியாட்டக் கூத்தை நடத்த முடியாமல் கைகழுவியது; எனினும், ""நிகழ்ச்சி ரத்தானது தங்களைச் சோர்வடையச் செய்துவிட்டதாக''க் குறைபட்டுக் கொண்டார்கள், அதன் அதிகாரிகள்.

ஊதாரித்தனத்தையும், ஒட்டுண்ணித்தனத்தையும் கைவிட மறுக்கும் இக்கும்பலை, "சீட்டுக்
கத்தரித்து வாழும் சுகஜீவிகள்'' என அடையாளம் காட்டினார், லெனின். இச்சமூக விரோதக் கும்பலைப் போதனைகளால் திருத்திவிட முடியாது. இவர்களையும், இவர்களைப் பாதுகாக்கும் ஏகாதிபத்திய சமூகக் கட்டமைப்பையும் தூக்கியெறியும் போராட்டமே தீர்வாகும்!

• செல்வம்

நன்றி :
புதிய ஜனநாயகம் – நவம். 2008

December 30, 2008

இன்றைய அமெரிக்காவின் நிலை!


இதுவரை 1 கோடியே 3 லட்சம் அமெரிக்கர்கள் வேலையை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறார்கள். நவம்பரில் மட்டும் 5 லட்சத்து 33 ஆயிரம் பேர்.

(டிசம்பர் 6ந்தேதி நிலவரப்படி)

America isn't working: jobless total rockets to a 34-year peak
• In one month, 533,000 people join unemployed
• Wall Street pins its hopes on more Fed intervention


“Yesterday's announcement brings the jobless total to 10.3 million people out of a workforce of 154.6 million”

from :

http://www.guardian.co.uk/business/2008/dec/06/usemployment-useconomy

ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தாலே பதட்டமாய் மாறும் அமெரிக்கனின் வாழ்வில் ஜனவரி 2008ல் துவங்கிய இந்த வேலை இழப்பு, தொடர்கதையாகி வருகிறது.

பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பொழுதே, தற்கொலைகள் அதிகமாய் நடக்கும் தேசம் அமெரிக்கா! இனி கண்ணீர் கதைகள் வந்து கொண்டேயிருக்கும்.

இப்படி பொருளாதார சுனாமியில் சிக்கித் தவிக்கிற மக்களை காப்பாற்றாமல், தனது தில்லுமுல்லுகளால் இந்த் சுனாமியை உருவாக்கிய முதலாளிகளை காப்பாற்ற துடிக்கிறது அமெரிக்க நாடாளுமன்றம். ஏனென்றால், செனட்டில் இருப்பவர்கள், மாகாண கவர்னர்களாய் அமர்ந்திருப்பவர்கள் பலர் முன்னாள் சூதாடிகள்.

தொடந்து வரும் கட்டுரையை படியுங்கள். உண்மை புரியும்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த ட்கட்டுரையின் 4-ம்பகுதி (பிற 3 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)

அமெரிக்க நாடாளுமன்றத்தின் வேசித்தனம்

இக்கேடுகெட்ட கிரிமினல்தனத்தையும், ஒட்டுண்ணித்தனமான சுரண்டலையும் தட்டிக் கேட்க
வக்கற்ற அமெரிக்க நாடாளுமன்றம், இந்த ஊதாரித்தனத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு இச்சமூக விரோதக் கும்பலிடம் கெஞ்சுகிறது. உலகத்தில் எந்த மூலையில் ""தவறு'' நடந்தாலும் சண்டப் பிரசண்டம் செய்யும் பெரியண்ணன் ஜார்ஜ் புஷ், இச்சூதாடிக் கும்பலிடம் மண்டியிட்டுக் கிடக்கும் மர்மம் என்ன?

அமெரிக்காவின் அதிபர், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டு அமெரிக்க ஆளும் கும்பலின் நுனி முதல் அடி வரையிலான அதிகார அங்கங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட் சூதாட்டக் கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு தான் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். தற்பொழுது நிதி மந்திரியாக இருக்கும் பால்சன், கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது, 1998 தொடங்கி 2006 முடியவுள்ள எட்டாண்டுகளில் குடியரசுக் கட்சிக்கு மட்டும் தனது சொந்தப் பணத்தில் இருந்து 3,36,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

பால்சன் கும்பல் தயாரித்த 70,000 கோடி அமெரிக்க டாலர் மானியத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஹிலாரி கிளிண்டனுக்கு 4,68,200 அமெரிக்க டாலர்; ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமாவிற்கு 6,91,930 அமெரிக்க டாலர்; குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 2,08,395 அமெரிக்க டாலர் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ""நன்கொடை'' கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

""வால்ஸ்ட்ரீட்'' சூதாடிகள் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம், நன்கொடை கொடுப்பது ஒருபுறமிருக்க, அவர்களே தேர்தலில் நின்று வென்று நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர், மேயர் பதவிகளைப் பிடித்து விடுகிறார்கள். அரசுப் பதவிகளை விலைக்கு வாங்குவதிலும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்தான் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன் முன்னாள் தலைவர் கோர்ஸைன் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் இருந்து செனட் சபைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, தற்பொழுது அம்மாநில ஆளுநராகவும் இருக்கிறார். அந்நிறுவனத்தின் தலைவர்களாகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃப்ரைடுமேன், ராபர்ட் ருபின், ஜோஸுவா போல்டன் உள்ளிட்ட பலர் கிளிண்டன், புஷ் நிர்வாகங்களில் அதிகாரமிக்க பசையுள்ள பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்களால், மக்களுக்காக... என நீட்டிமுழக்கப்படும் மக்களாட்சியின் தத்துவம், அதன் பிறப்பிடமான அமெரிக்காவில் சூதாடிகளால், சூதாடிகளுக்காக, சூதாடிகளின் ஆட்சியாகவே இருக்கிறது.

உண்மை இப்படியிருக்க, அமர்த்யா சென் போன்ற அறிஞர்கள் கூட பாராக் ஒபாமா ஆட்சியைப்
பிடித்தால், அமெரிக்க மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒபாமாவோ தனது ஆலோசகராக ராபர்ட் ருபினை வைத்துக் கொண்டிருக்கிறார்.
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ருபின், சப்பிரைம் லோன் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்த தளபதிகளுள் ஒருவர்; இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு இலாபமடைந்துள்ள ""சிட்டி குரூப்'' வங்கியின் தற்போதைய தலைவர். எனவே, அமர்த்யா சென் போன்ற அறிஞர்களின் ஜோசியம், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் முட்டாள்தனத்தைப் போன்றதுதான்!

• செல்வம்

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

December 29, 2008

அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்!

மருத்துவரை சந்திக்க காத்திருந்த வேளையில் என்னருகே நடுத்தர வயதில் ஒருவரும் காத்திருந்தார். நிறைய செய்திதாள்கள், நிறைய சங்கதிகள் கொண்ட தாள்களைப் புரட்டிக்கொண்டேயிருந்தார். பேச்சுக்கொடுத்தேன்.

‘நீங்கள் பங்குச்சந்தை முகவரா?’

‘ஆம்’ என்றார்.

'அமெரிக்கா - மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதே! என்ன காரணம் சார்?'

‘சப் பிரைம் லோன்’ தான் காரணம். வங்கிகள் கடனைக் கட்ட வசதியில்லாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்தது தான் காரணம்’ என்றார்.

‘இதை பொதுவாக எல்லோரும் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு இதுதான் உண்மையான காரணமா சார்? ’

‘நீங்கள் சொல்வது சரி தான். இதையும் மீறி அங்கு என்னவோ நடந்திருக்கு. ஆனால் உண்மையை மறைக்கிறார்கள்” என்றார்.

****

இந்த மாபெரும் நெருக்கடிக்கு திரைமறைவில் நடந்த விவகாரங்களை ஒவ்வொன்றாக அலசிக் கொண்டே வருகிறோம்.

திவாலான மற்றும் திவால் நிலையில் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்த நெருக்கடிக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்கள். என்ரான் விசயத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் துணை நிர்வாகிகள் எப்படி கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள் என ஏற்கனவே பார்த்தோம்.

மக்கள் தங்களுடைய சேமிப்பு பணங்களை மிகப்பெரிய நிறுவனங்களில் போட்ட பணம் எல்லாம் செல்லாக்காசுகளாக மாறிப்போய்விட்டன. ஆனால், அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் எப்படி லாபம் சம்பாதித்தார்கள் என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது. படியுங்கள்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. – புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரையின் 3ம்பகுதி (2 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)

நிதி நிறுவன அதிபர்களின் ஒட்டுண்ணித்தனம்

லேமேன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், பியர் ஸ்டெர்ன்ஸ் உள்ளிட்டுப் பல நிதி நிறுவனங்களும்,
வங்கிகளும் திவாலாகிப் போனதால், அந்நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் போண்டியாகிப் போனார்கள் எனக் கருத முடியாது. இச்சூதாடிகள் எரிகிற வீட்டில் இருந்து பிடுங்குவதில் கில்லாடிகள் என்பதால், நிதி நிறுவனங்கள் திவால் நிலையை நோக்கி நகர நகர, இவர்களின் சம்பளமும் போனசும் எகிறிக் கொண்டே போயின.

உலகெங்கிலும் 60,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை வாங்கிப் போட்டுத்
திவாலாகி விட்ட லேமேன் பிரதர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் ஃபல்ட், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டாண்டுகளில் எடுத்துக் கொண்ட சம்பளம் மட்டும் 48 கோடி அமெரிக்க டாலர்கள்.

மெரில் லிஞ்ச் நிறுவனம் திவாலாகிக் கொண்டிருந்த சமயத்தில், அதன் தலைமை நிர்வாக
அதிகாரியாக இருந்த ஜான் தாய்ன், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டுஒன்பது மாதங்களுக்குள் எடுத்துக் கொண்ட சம்பளம் 85 கோடி அமெரிக்க டாலர்கள்.

இந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மட்டும்தான் கொழுத்த சம்பளம் பெற்றார்கள் என்பதில்லை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்து நிதி நிறுவனங்களைச் (அதில் மூன்று திவாலாகி விட்டன) சேர்ந்த 1,85,000 ஊழியர்களுக்கு 2007இல் மட்டும் சம்பளம் மற்றும் போனசாகச் சேர்த்து 6,600 கோடி அமெரிக்க டாலர்கள் கொட்டப்பட்டுள்ளது.

இத்தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாக்கி நடத்திய சூதாட்டம்தான் இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும், இக்கிரிமில் குற்றத்திற்காக எந்தவொரு தலைமை நிர்வாக அதிகாரி மீதும் வழக்குத் தொடரப்படவில்லை; இதைவிடக் கேவலமானது, அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகக்கூட நிர்பந்திக்கப்படவில்லை என்பதுதான்.

என்ரான் திவாலானதற்கு நிர்வாகத்தின் மோசடித்தனங்கள்தான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தற்பொழுது அமெரிக்க நிறுவனங்களில் சேரும் சூதாடிகள், ""தங்களின் நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்குத் தங்களைப் பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது'' என ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சேருகிறார்கள்.

- செல்வம்

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

December 26, 2008

இன்றைய அமெரிக்காவின் நிலை – பங்கு பிரிப்பதில் ஊழல்!

அமெரிக்காவில் ஆதரவற்றவர்களுக்கு, அனாதைகளுக்கென்று இலவச உணவு தரும் ஒரு விடுதி இருக்கிறது. தினமும் 1250 நபர்களுக்கு மட்டும் உணவு தருகிறது.

அமெரிக்க திவாலுக்கு பிறகு இன்றைக்கு அந்த விடுதியில் கூட்டம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம் . தினமும் 1600 பேருக்கு மேலாக குவிகிறார்களாம். சமாளிக்கமுடியவில்லை என அந்த விடுதியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

- நன்றி - ‘மக்கள் செய்திகள் – 26.12.2008

****

அமெரிக்க மக்களின் நிலை இப்படி பரிதாபமாய் இருக்கிறது. இவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாத அமெரிக்க அரசு, பல தில்லுமுல்லுகளால் திவாலாகிப் போன அல்லது திவால் நோட்டீஸ் கொடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்து அரசிடம் (மக்களின் வரிப் பணத்தை) நிதி கேட்கும் பல்வேறு முதலீட்டு வங்கிகள், வங்கிகள், நிதி நிறுவனங்களளை கை தூக்கி விடுவதற்காக 70000 கோடி அமெரிக்க டாலர்களை அள்ளித்தர முடிவு செய்திருக்கிறது.

அதில் நடக்கும் தில்லு முல்லுகளை பின்வரும் கட்டுரை விவரிக்கிறது. முதல் பாதி ஏற்கனவே பதிவில் போட்டாயிற்று. இரண்டாம் பகுதி தொடர்கிறது.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது.

பேய் அரசாண்டால்...


இந்த "நெருக்கடி''யின் இரண்டாவது அத்தியாயம் நிதி ஆதிக்கக் கும்பலைக் கைதூக்கி விடும் படலம், முதல் அத்தியாயத்தைவிட மிகவும் சுவையானது. மிரட்டல், கூட இருந்தே குழி பறித்தல், கழுத்தறுப்புப் போட்டியில் ஒரு நிறுவனம் இன்னொன்றை விழுங்குதல், அரசு தூக்கியெறிந்த எலும்புத் துண்டைக் கவ்விக் கொள்ள நாய்ச் சண்டை போடுதல் என்ற முதலாளித்துவத்தின் நவரச "நற்குணங்களையும்' இதில் காண முடிந்தது.

"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சமயத்தில்தான் 2006இல் ஹென்றி ஜெ.பால்சன் என்பவர் அமெரிக்காவின் நிதி மந்திரியாக (Treasury Secretary)
நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனின் காலத்தில் நடந்த "வாட்டர் கேட்'' ஊழலின் முக்கியப் பங்காளியாக இருந்து தண்டிக்கப்பெற்ற ஜான் எர்லிச்மேன் என்ற அதிகாரியின் கீழ் நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டவர்தான் நிதி மந்திரி பால்சன். (படத்தில் புஷ்யுடன் இருப்பவர்)

1974இல் கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியில் நுழைந்த பால்சன், 1998இல் ஒரு
அதிரடிக் கவிழ்ப்பின் மூலம், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியைக் கைப்பற்றினார். ஏறத்தாழ 53 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான கோல்டன் சாக்ஸ் நிறுவனப் பங்குகள் பால்சனிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. "முதலீடு செய்வதில் துணிந்து சவால்களைச் சந்திக்கக் கூடியவர்'' என முதலாளித்துவப் பத்திரிகைகள் பால்சனைப் புகழ்ந்து தள்ளுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், நிதி மந்திரி பால்சன் கைதேர்ந்த சூதாடி.

பால்சன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து
கோல்டுமேன் சாக்ஸையும், அந்நிறுவனத்தில் இருந்த தனது முதலீட்டையும் பாதுகாத்துக் கொண்டதோடு, கோல்டுமேன் சாக்ஸுக்கு எதிரான முதலீட்டு வங்கிகளை ஒழித்தும் கட்டினார். லேமேன் பிரதர்ஸ் என்ற முதலீட்டு வங்கி திவாலாகவும்; ஜே.பி.மார்கன்சேஸ், பியர் ஸ்டெர்ன்ஸ் நிறுவனத்தையும்; பாங்க் ஆஃப் அமெரிக்கா, மெரில் லிஞ்ச் நிறுவனத்தைக் கையகப்படுத்தவும் அனுமதித்த பால்சன், இதன் மூலம் கோல்டுமேன் சாக்ஸை அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளுள் ஒன்றாக மாற்றினார்.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க அரசின் ஆதரவோடு பல நிறுவனங்களை விழுங்கிய பாங்க் ஆப் அமெரிக்கா, ஜே.பி.மார்கன் சேஸ், சிட்டி குரூப் ஆகிய மூன்று வங்கிகளும், அமெரிக்காவின் மொத்த வங்கி சேமிப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. நெருக்கடிக்கு முன்பாக 21.4 சதவீதமாக இருந்த இம்மூன்று வங்கிகளின் சேமிப்பு, இன்று 30 சதவீதத்தை நெருங்கி விட்டது.

வங்கி முதலாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அமெரிக்க மக்கள் நடுத்தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûம், நிதி மந்திரி பால்சனும் அம்முதலாளிகளைக் கரையேற்ற 70,000 கோடி அமெரிக்க டாலர்களை அவர்களுக்கு மானியமாக வாரிக் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றம், மக்களின் போராட்டத்தால் இந்த மானியத்திற்கு ஒப்புதல் கொடுக்கத் தயங்கிய பொழுது, நிதி மந்திரி பால்சன், "பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்'' என்ற தொனியில் மிரட்டியிருக்கிறார். பால்சன் மிரட்டலாகச் சொன்னதை, வங்கி முதலாளிகள் பங்குச் சந்தையைக் கவிழ்த்துச் செய்து காட்டினார்கள்.


அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ""வால் ஸ்ட்ரீட்'' சூதாடிகள் வீசி எறியும் எலும்புத் துண்டுக்குக் காத்துக் கிடக்கும் நாய்கள் என்பதால், தங்களின் முனகலைக் குறைத்துக் கொண்டு, சூதாடிகளுக்கு மானியம் வழங்கும் இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு, அதற்காகத் தனிச் சட்டத்தையும் உருவாக்கினார்கள்.

இந்தச் சட்டம், "மதிப்பிழந்து கிடக்கும் சொத்துக்களை, எந்த வங்கியிடமிருந்தும், என்ன விலை கொடுத்தும் வாங்குவதற்கான அதிகாரத்தை'' நிதி மந்திரி பால்சனுக்கு அளிக்கிறது. மேலும், "பொருளாதாரச் சரிவைத் தடுக்கும் நோக்கங்கொண்ட'' பால்சனின் இந்த முடிவுகளை, எந்தவொரு நீதிமன்றமோ, அரசின் வேறெந்தப் பிரிவோ கேள்வி கேட்கவோ, அதனை மறுபரிசீலனை செய்யவோ உரிமை கிடையாது என்ற உள்விதியும் இச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை "பொருளாதாரப் பொடா'' எனலாம். பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய அதிகாரிகளைத் தண்டிக்க முடியாது என்பது போல, இந்த மானியத் திட்டத்தை பால்சன் உள்நோக்கத்தோடு தவறாகப் பயன்படுத்தியிருந்தாலும், அவரை எதிர்காலத்தில் கூடத் தண்டித்துவிட முடியாது. ஊழலுக்கு, இதைவிட அதிகபட்ச சட்டபூர்வ பதுகாப்பை ஏற்படுத்தித் தந்துவிட முடியாது.

இந்த 70,000 கோடி டாலர் பெறுமான மானியத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அமெரிக்க வங்கிகளுக்கிடையே நாய் சண்டையே நடந்து வருகிறது. நிதிமந்திரி பால்சன், தான் பங்குதாரராக உள்ள கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மற்றவர்களை விட முந்திக் கொள்ள வேண்டும் என்ற விதத்தில் காய்களை நகர்த்தி வருகிறார். இப்பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்காக,
நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய துறைக்கு நீல் கஷ்காரி என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மந்திரி பால்சன், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்தபொழுது, அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து, பால்சனின் கையாளாகச் செயல்பட்டவர்தான் நீல் கஷ்காரி.(படத்தில் இருப்பவர்)

அமெரிக்க வங்கிகளிடம் அடமானமாகக் கிடக்கும் சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்காக நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள துறைக்கு வில்லியம் கிராஸ் என்பவர் நியமிக்கப்படலாம் என்ற வதந்தி அடிபடுகிறது. வில்லியம் கிராஸ், பால்சனின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, திவாலாகிப் போன ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு அடமான நிறுவனங்களை அமெரிக்க அரசு தேசியமயமாக்கியபொழுது, அதன் மூலம் 1,700 கோடி அமெரிக்க டாலர்களை இலாபமாகச் சுருட்டிக் கொண்டத் திருட்டுப் பேர்வழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

December 24, 2008

அமெரிக்க திவால் – “பொன்முட்டை இடும் வாத்து” திட்ட ஊழல்

தில்லி அருகே நொய்டாவில் சாக்கடையை கிளற கிளற கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் மண்டையோடுகள் வந்து கொண்டிருந்தது போல.... அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடியை கிளற கிளற புதிய புதிய வகையிலான ஊழல்கள் வெளிவருகின்றன. புகழ்பெற்ற நிறுவனங்கள் தாங்கள் செய்த தில்லுமுல்லுகளால் திவாலாகி விழுந்து கொண்டேயிருக்கின்றன.

சமீபத்தில், ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் தில்லுமுல்லு கதை இதோ!

***

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, திடீர் திடீரென நிதி நிறுவனங்கள் தோன்றி... மக்கள் கொடுக்கும் பணத்திற்கு வருட வட்டியாக 36% வரை தருவதாக வாக்கு கொடுத்து, சேமிப்புகளை பெற ஆரம்பித்தன. அப்பொழுது தேசிய வங்கிகள் 12% வரை வட்டியாக அளித்துகொண்டிருந்தன.

சொன்னபடி 1 ஆண்டுக்கு மேலாக கொடுக்கவும் செய்தன. மக்கள் அலை அலையாய் போய் முதலீடு செய்தார்கள். இரண்டாவது ஆண்டின் முடிவில்... இப்படி வாக்கு கொடுத்த எல்லா நிறுவனங்களும் இழுத்து மூடி, மக்கள் தலையில் பெரிய்ய துண்டை போட்டார்கள்.

இதே முறையில் அமெரிக்காவில் ‘பெர்னார்ட் எல். மேட்ஆப் இன்ஸ்வெஸ்ட்மென்ட் செக்யூரிட்டீஸ்’என்ற நிறுவனம் 2 லட்சத்து 45 ஆயிரம் கோடிக்கு மக்கள் தலையில் துண்டை போட்டிருக்கிறது. இந்தியாவின் இந்த ஆண்டு பட்ஜெட் தொகையே 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்தான். மூன்றில் ஒரு பங்கு.


பெர்னார்ட் மேடாப் தன்னுடைய 22 வயதில் 1960ல் இந்த பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசனை
நிறுவனத்தை நியூயார்க்கில் துவங்கினார்.

பணம் வைத்திருக்கும் நபர்களை பிடித்து மற்றவர்கள் முதலீட்டுக்கு 3% அல்லது 5 % தந்த நிலையில் 10% தருவதாக சொல்லி, கோடிக்கணக்கில் வாங்கினார். சொன்னபடியே தரவும் செய்தார். அவர் புகழ் பரவ ஆரம்பித்து, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் நிறுவனத்தின் கிளைகள் பரவத் தொடங்கின. அமெரிக்க மக்கள், மற்றும் பிரபலங்களும் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு பணத்தைக் கோடி கோடியாய் கொட்டினார்கள்.


ஸ்டெர்லிங் ஈக்யுட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரெட் வில்போன், ஹாலிவுட் நடிகர் ராபர்ட் லோகியா, யூதர்கள் அமைப்பான யேஷிவா பல்கலை, அரசு வக்கீல் ஜெர்ரி ரேஸ்மென் போன்ற பிரபலங்கள் இதில் முதலீடு செய்ததில் முதன்மையானவர்கள்.

அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கி... உலகப் புகழ்பெற்ற வால் ஸ்டீரிட் ஸ்தம்பித்த நிலையில் மக்கள் போட்டிருந்த முதலீடுகள் எல்லாம் மதிப்பிழந்து குப்பைக் காகிதங்களாக மாறிவிட்ட நிலையில்... மக்கள் தாமதமாய் சுதாரித்து தாங்கள் போட்டிருந்த முதலீடுகளை எல்லா இடங்களிலும் இருந்தும் திரும்ப பெற தொடங்கினர்.

இந்த நிலையில் பெர்னார்ட் மேடாப்-பிடம் கேட்டார்கள். அப்பொழுது, சகலரும் அதிரும்படி ஒரு உண்மையை சொன்னார்.

‘‘இத்தனை நாள் நான் நடத்தியது போலி நிறுவனம்தான். என்னிடம் எந்த சொத்தும் கிடையாது. நிறுவனம் திவாலாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது”

பிறகு, எப்படி தன் நிறுவனத்தை நடத்தி வந்தார் என விளக்கமாய் சொன்னார்.

முதலில் பணம் கொடுத்தவர்களுக்கு அடுத்து வருபவர்களிடம் பணம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுத்தார். அவர்களுக்கு அடுத்தடுத்து பணம் தருபவர்களிடம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுத்தார். இந்த திட்டத்திற்கு அவர் வைத்த பெயர் “பொன் முட்டையிடும் வாத்து”
இப்பொழுது பெர்னார்ட் சிறையில் கம்பி எண்ணுகிறார். அவருக்கு வயது 70. 1990, 1991, 1993ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான ‘நாஸ்டாக்’கின் தலைவராக இருந்தவர்.

முதல்கட்ட விசாரணையில் 83,300 கோடி ரூபாய் அளவுக்கு பெர்னார்டுக்கு சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடந்து நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு டுபாக்கர் நிறுவனத்தை 48 ஆண்டுகளாக புகழ்பெற்ற நிறுவனமாக பல தில்லுமுல்லுகளோடு அமெரிக்காவில் நடத்த முடிந்திருக்கிறது என்றால்... அமெரிக்க அரசு பற்றி, அதன் பொருளாதார கட்டமைப்பு பற்றி நாம் நன்றாக புரிந்து கொள்ளமுடிகிறது.

முதலாளித்துவத்தின் அடிப்படை மூலதனமே தொழிலாளர்களின் உழைப்பில் எழுந்த சுரண்டல் தானே! அடிப்படையே சுரண்டலாய் இருக்கும் பொழுது, அதன் மீது எழுப்பப்படுகிற எல்லாமே நேர்மையானதாகவா இருக்க முடியும்.

***

நன்றி :
தகவல்களுக்கு ஜே.எஸ்.கே.பாலகுமார், தமிழ் வணிகம்.

மேலும் படிக்க...

Madoff Hedge Fund Considered A Giant Ponzi Scheme Where Investors Lost 50 Billion Madoff Arrested

Bernard Madoff, the former NASDAQ Stock Market chairman faced charges of organizing a ponzi scheme that biked away $50 billion from the investors and consequently he was arrested. It has been discovered that the scheme, which has been running for years, has made use of new investors’ money to pay returns to the other investors. In this way, the founder of Bernard L. Madoff Investment Securities managed to keep up the reputation of the scheme.

Thanks :

http://www.encyclocentral.com/32466-Related-Bernard_L._Madoff_Investment_Securities_LIc_Charged_Arrested_For_Fraud_Ponzi_Scheme.html

Invest Big ‘fesses to $50B ‘Fraud’

A Wall Street legend was busted yesterday on charges of running a scam investment business for the super rich after telling his sons it was just "a big lie" - losing a whopping $50 billion.
Bernard L. Madoff, 70, a former Nasdaq chairman, was arrested a day after his sons Andrew and Mark, both senior employees, turned him in for running a business that had been insolvent for years, prosecutors said
Thanks : New york post … also read. Click below

http://www.nypost.com/seven/12122008/news/regionalnews/invest_big_fesses_to_50b_fraud_143843.htm

December 21, 2008

அமெரிக்க திவால் - இன்றைய அமெரிக்காவின் நிலை!

நிதிமூலதன கும்பல்கள் விளையாடி, தங்களுடைய சேமிப்பை எல்லாம் பங்கு பத்திரங்களாக வாங்கி வைத்திருந்து.. இப்பொழுது மதிப்பிழந்து குப்பை காகித பத்திரங்களாக மாற்றப்பட்டு ஏமாந்து நிற்கும் அமெரிக்க நடுத்தர வர்க்கம், பல்வேறு தில்லுமுல்லுகளால் செயற்கையாக விலை பன்மடங்கு ஏற்றப்பட்டு, வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் வீட்டை விட்டு துரத்தப்பட்ட அமெரிக்க அடித்தட்டு மக்களின் இன்றைய யதார்த்த நிலை என்ன வென்று தெரியுமா?

ஜெயமங்கலம், வெள்ளக்கோவில் பகுதிகளில் நெசவுத் தொழிலை நம்பி இருந்த நெசவாளிகள் வேலையிழந்து வாழ்வதற்காக தன்னுடைய கிட்னியை விற்று பிழைத்தார்களே! அதே போல், அமெரிக்கர்கள் தங்களுடைய ரத்த பிளாஸ்மா, தலைமுடி, உடலில் சுரக்கும் சில மருத்துவ திரவங்கள், டிஷ்யூக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்கள் தங்கள் உயிரணுக்களை விற்கிறார்கள். 100 டாலர் கிடைக்கிறதாம். சியாட்டிலில் உள்ள ஒரு உயிரணு வங்கியில் முன்பெல்லாம் 50 பேர் விண்ணப்பித்த நிலையில், இன்றைக்கு 150 விண்ணப்பங்கள் வருகின்றனாம்.

பெண்கள் தங்களுடைய கருமுட்டைகளை விற்கிறார்கள். அதற்கும் 100 டாலர் கிடைக்கிறதாம். நன்கு செழிப்பான கருமுட்டை 7000 டாலர்கள் விலை கிடைக்கிறதாம். முன்பு, நாளொன்றுக்கு இரண்டு முதல் ஐந்து பெண்கள் வந்தவர்கள்... இப்பொழுது, இருபது பேர் வருகிறார்களாம்.

(நன்றி – தினமணி கதிர் - 21.12.2008)

ஆனால் இந்த கொள்ளையை அடித்த கும்பல்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா? மேலே படியுங்கள்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது.


நேற்று வரை, புகழ் பெற்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (C.E.O.) அறியப்பட்டவர்கள், இன்று அமெரிக்க மக்களால் கொள்ளைக்காரர்களாகக் காறி உமிழப்படுகிறார்கள். "வீடிழந்து, கடனாளியாகித் தெருவில் நிற்கும் மக்களைக் கைதூக்கி விடு; இந்தக் கொள்ளைக் கும்பலைச் சிறையில் தள்ளு'' என்ற முழக்கங்கள் அமெரிக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றன.

செத்துப் போன பங்குச் சந்தை சூதாட்டப் பேர்வழி அர்சத் மேத்தாதான் இந்தியாவின் நிதி மந்திரி; இன்னொரு சூதாட்டப் பேர்வழியான கேதான் பாரேக்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர்; தமிழக மக்களின் சேமிப்பையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிப் போன "பிளேடு'' கம்பெனி அதிபர்கள்தான் நிதி ஆலோசகர்கள் இப்படிப்பட்ட நிலைமையைக் கற்பனை செய்து பார்ப்பது கூட நமக்கு அச்சமூட்டுவதாக இருக்கும். ஆனால், அமெரிக்காவிலோ அர்சத் மேத்தாக்களுக்கெல்லாம் அப்பனான நிதிச் சந்தை சூதாடிகள்தான் நாகரிகமாகச் சொல்வதென்றால் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருந்தவர்கள்தான் அந்நாட்டின் நிதியமைச்சராக, நிதித்துறை ஆலோசகர்களாகப் பதவி ஏற்கிறார்கள். இந்தச் சூதாடிகள் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவையே சூதாட்ட விடுதியாக மாற்றி விட்டதோடு, பல்வேறு நாடுகளையும் இச்சூதாட்டத்தில் இழுத்துப் போட்டு விட்டார்கள் என்பதும்தான் இந்த ""நெருக்கடி'' உணர்த்தும் உண்மை.


அமெரிக்க ஜனநாயகம்: சூதாடிகளின் ஏஜெண்ட்

1930ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் இந்த நெருக்கடியைப் போன்றதொரு வீழ்ச்சியைச் சந்தித்தபொழுது, கிளாஸ்ஸ்டீகல் சட்டம் உருவாக்கப்பட்டு, வர்த்தக வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. 1930க்கு முன்பு வங்கிகளே பங்குச் சந்தை தரகு நிறுவனங்களையும் நடத்தி வந்ததால், வர்த்தக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் சேமிப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இச்சட்டம் உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் சேமிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீடு நிறுவனமும் அமைக்கப்பட்டது. இச்சட்டம், 1999ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த சமயத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதற்கு அடுத்த ஆண்டு, நிதிச் சந்தையில் நடைபெறும் சூதாட்டங்களுள் ஒன்றான "டெரிவேட்டிவ்'' (பங்குகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீது நடைபெறும் சூதாட்டத்தின் மீது நடக்கும் சூதாட்டம்) மற்றும் வாராக் கடன்களைக் கைமாற்றிக் கொண்டே போகும் சூதாட்ட வர்த்தகம் ஆகிய இரண்டும், பங்கு பரிமாற்றக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

அமெரிக்க முதலீட்டு வங்கிகள், தாங்கள் செய்யும் முதலீடுகள் நட்டமடைந்தால், அதனை ஈடு
செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்து வந்தது. 2004ஆம் ஆண்டில், இந்த விதி நீக்கப்பட்டு, முதலீட்டு வங்கிகள் இருப்பு வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற சலுகை நடைமுறைக்கு வந்தது. 2004ஆம் ஆண்டு கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹென்றி ஜெ.பால்சன்தான் இவர்தான் இப்பொழுது அமெரிக்க அரசின் நிதியமைச்சர் இச்சலுகையை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் ஊதிப் பெருத்ததற்கும் இந்த மூன்று சலுகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதேசமயம், இச்சலுகைகள் நடைமுறையில் இல்லாத காலத்தில், அமெரிக்க நிதிச் சந்தை கட்டுப்பாடோடு, நாணயமாக நடந்து கொண்டதாகக் கற்பனை செய்து
கொள்ளக் கூடாது. குறிப்பாக, இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் இருந்த சமயத்தில்தான் "லாங்டெர்ம் கேப்பிடல் மேனேஜ்மெண்ட்'' என்ற முதலீட்டு நிறுவனமும், என்ரானும் குப்புறக் கவிழ்ந்தன. நியாயமாகப் பார்த்தால், இந்த நிறுவனங்கள் திவாலான பிறகு, கட்டுப்பாடும், கண்காணிப்பும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்; ஆனால், நடந்ததோ அதற்கு நேர் எதிரானது.


அமெரிக்காவில் வங்கிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி (Federal Reserve) அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை. வங்கி முதலாளிகளின் சங்கம்தான், அதற்குத் தலையாக இருந்து இயக்கி வருகிறது. கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் "எல்லாம் நானே'' என உரைத்தது போல, அமெரிக்காவில் பங்குச் சந்தை சூதாடியே வங்கி முதலாளியாக இருக்கிறார்; அவரே போலீசாக (கண்காணிப்பாளராக) இருக்கிறார். அவரே நீதிபதியாகவும் (திவாலான பொருளாதாரத்தை மீட்கும் பொறுப்பு) இருக்கிறார்.

அமெரிக்க அரசு, சூதாடிகளின் மீது இருந்த அற்பமான கண்காணிப்புகளை விலக்கிக் கொண்டதோடு, சூதாட்டம் சூடாக நடைபெறுவதற்குத் தேவையான பணத்தையும் வாரிக் கொடுத்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான் அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதமாகக் குறைத்ததன் மூலம் டாலர் புழக்கத்தைத் தாராளமாக்கினார்.

இதேபொழுதில், அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியத்தின் வாராக் கடன்களைக் கண்காணிக்கும் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை 100இல் இருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டது; ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்து 146 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சூதாடிகளுக்கு வழங்கப்பட்ட இச்சலுகைகளை நியாயப்படுத்துவதற்காக, ""அனைவருக்கும் வீடு'' என்ற கவர்ச்சி முழக்கம் அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு பக்கம் பணத்தோடு சூதாடிகள்; இன்னொருபுறம் கடன் வாங்கி செலவு செய்யும் நாகரீகத்துக்கு ஆட்பட்டுப் போன மக்கள் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்ட பின்னணி இதுதான்.

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

பின்குறிப்பு : இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் இடப்படும்.

December 17, 2008

அந்நிய முதலீடு – சில குறிப்புகள்!



முன்குறிப்பு:

அமெரிக்க திவால் தொடர்பான தேடலில் இந்த கட்டுரை ‘அந்நிய முதலீடு’ பற்றிய சிறு புரிதலை தருகிறது. படியுங்கள்.
***

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகள் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன.

இந்த கொள்கைகளின் அடிப்படையில்.. அந்நிய முதலீடுகளை இந்தியாவில் எல்லா மாநிலங்களும் பல ஆண்டுகளாக வரவேற்று கொண்டிருக்கிறார்கள். இப்படி உள்ளே வருகிற அந்நிய முதலீடுகள் பல்வேறு வழிகளில் தங்களுடைய முதலீட்டை விட அதிகமாய் நாட்டை விட்டு கடத்திவிடுகின்றன.

பல நாடுகளில் இப்படி நிகழ்ந்திருப்பதை, தரவுகளுடன் தொடர்கிற கட்டுரை விளக்குகிறது.

****
இந்த கட்டுரையை லைட்லிங்க் என்ற பதிவர் எழுதியுள்ளார்.
***

நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறிய வல்லரசாக வேண்டுமா? வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? தொழில் நுட்பம் தரமாக வேண்டுமா? பொருளாதார முன்னேற்றம் வேண்டுமா? வேண்டும் என்றால் நீங்கள் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த வாசகத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள்.

முதலில் அன்னிய நேரடி முதலீடு பற்றி பார்ப்போம். ஒரு அந்நிய நிறுவனம், நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெரு முதலாளிகளை பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கினால், அது அன்னிய நேரடி முதலீடு (FDI ) எனப்படுகிறது. இதற்கு அந்த அன்னிய நிறுவனம் தனது சொந்த பணத்தை முதலீடு செய்வதில்லை.

எந்த நாட்டில் முதலீடு செய்ய விரும்புகின்றனவோ, அந்த நாட்டில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று முதலீடு செய்கின்றன.ஆனால், ஒரு தொழிலில் நுழையும் அன்னிய நேரடி முதலீடானது காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் என பல்வேறு வடிவங்களில் அரசு அந்த நிறுவனத்திற்கு மாத மாதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதனால் உள் நாட்டில் உள்ள அன்னிய செலாவணி வெகுவாக விரைவில் கரைந்து போய்விடும். இவ்வாறு அன்னிய நேரடி முதலீட்டை காலியாக்கப்படும் அன்னிய செலாவணியின் மதிப்பு, அன்னிய நேரடி முதலீட்டை விட அதிகமகா இருந்தால் அது நாட்டின் வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா?

1995-2003 ஆப்பிரிக்க நாடுகளில் நுழைந்த அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 4243 கோடி ரூபாய். ஆனால், காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் முதலிய வடிவங்களில் அன்னிய செலாவணியாக வெளியேறிய மூலதனமோ ஏறத்தாழ 25,294 கோடி ரூபாய்!

காங்கோ நாட்டில் அதே காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 7,303 கோடி ரூபாய். வெளியேறிய மூலதனமோ 12,478 கோடி ரூபாய். தென் அமெரிக்க நாடான பிரேசிலும் இது தான் நடந்தது. அன்னிய நேரடி முதலீடு பெருக பெருக, நாட்டின் அன்னிய செலாவனி இருப்பும் கரைந்து கொண்டே போனது. 1993-இல் பிரேசிலை விட்டு வெளியேறிய உள்நாட்டு மூலதனம் ஏறத்தாழ ரூ.148 கொடியாக இருந்தது. 1998-இல் இது ரூ.28,000 கோடியாக உயர்ந்தது.

(ஆதாரம்: UNCTAD அறிக்கை,2005)



அமெரிக்க என்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்க இந்திய வங்கிகளில் கடன் வாங்கியது. மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையம் தொடங்க 40% மூலதனத்தை இந்திய வங்கிகளில் கடனை வாங்கியது. அமெரிக்க பங்கு சந்தையில் நடத்திய மோசடி காரணமாக அந்த நிறுவனம் திவாலாகி போனது, அந்த நிறுவனம் இந்தியாவில் வாங்கிய கடன் இந்திய மக்களின் தலையில் விழுந்தது.

அது மட்டுமல்ல இந்த நிறுவனம் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பே காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் என பல்வேறு வடிவங்களில் அந்த நிறுவனம் மாதம் தோறும் ரூ. 95 கோடியை விழுங்கியது.

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்பபடி, ஏறத்தாழ 300 அன்னிய நேரடி முதலீடு நிறுவனங்களால் கிடைத்த தொகையை விட அந் நிறுவங்களுக்கு இந்திய அரசு கொடுத்த காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் அன்னிய செலவாணியே அதிகமாக உள்ளது.

அன்னிய நேரடி முதலீடுகள் இதோடு நின்று விடுவதில்லை. மோசடிக் கணக்கு வழக்குகள் மூலம் ஒரு நாட்டின் முதலீடு செய்த மூலதனத்தையே படிப் படியாக கடத்திச் சென்று விடுகின்றன.
பன்னாட்டு கம்பெனிகளால் ஆண்டு ஒன்றுக்கு அமெரிக்காவுக்கு 1,20,000 கோடிக்கு மேல் வரி இழப்பு ஏற்படுகிறது.

உலகின் மிகப் பெரிய எண்ணை நிறுவனமான எக்சான் தென் அமெரிக்க
நாடான சிலி நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வரியே செலுத்தியதில்லை. ஏனென்றால், அந்த நிறுவனம் இன்றைக்கும் லாபம் இட்டவில்லையாம் அப்புறம் எதற்காக எக்சான் நிறுவனம் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து தொழில் நடத்துகிறது என்ற கேள்வியெல்லாம் நீங்கள் கேட்க கூடாது.

அன்னிய முதலீடுகள் வேலை வாய்ப்பு பெருகும் என்கிறார்கள். இதுவும் அப்பட்டமான புளுகு. இவ்வகை முதலீடுகள் பெரும்பாலும் நிதி நிறுவனங்கள் முதலீடுகளாகவும் - பங்கு சந்தை முதலீடுகளாகவும் இருப்பதால் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. சேவை துறையிலும், உற்பத்தி துறையிலும் கணிசமாக நுழைந்துள்ள அன்னிய முதலீடுகள் நேரடி வேலை வாய்ப்பை உருவாக்காமல், ஒப்பந்த தொழிலாளர்கள் மூலமே தங்கள் வேலையை முடித்து கொள்கின்றன.

இவ்வகை அன்னிய முதலீடுகள் பங்கு சந்தையில் புள்ளிகளை ஏற்றினாலும் திடீர் ஒருநாள் சரிவதும் பின்பு ஏறுவதும் (அப்பட்டமான) சூதாட்டம் தான் என மீண்டும் மீண்டும் நமக்கு நினைவு படுத்துகிறது. இதையும் மீறி சிலர் உடல் உழைப்பை நம்பாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தங்கள் வாழ்க்கையை (சேமிப்பைத்) தொலைத்து விடுகின்றனர். மும்பை பங்கு சந்தை அமைந்துள்ள அதே மகாராஷ்டிராவில் விதார்பா மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்த உண்மை நிலவரங்ளையெல்லாம் மூடிமறைத்து விட்டு, நமது அரசுகள் கண்ணை மூடிக்கொண்டு அந்நிய முதலீட்டை ஆதரிக்கின்றன.

நன்றி :

from : http://lightlink.wordpress.com

December 3, 2008

என்ரான் திவால் –அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்



ஒரு மாபெரும் குண்டு வெடிப்பை நிகழ்த்த குண்டுகள் தயாரிக்கும் பொழுது, தவறுதலாய் ஒரு குண்டு வெடிக்கும் அல்லவா!

அதுபோல, மாபெரும் பொருளாதார நெருக்கடியின் ஒரு வெள்ளோட்டமாக இருந்தது என்ரான் திவால்.

****

அமெரிக்காவில், இன்றைக்கு பல முதலீட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய வங்கிகள் உட்பட பல நிறுவனங்கள் திவலாகி விட்டன. மேலும், பல நிறுவனங்கள் மஞ்சள் கடிதாசி கொடுக்க தீவிரமாய் பரிசீலித்து வருகின்றன.

அமெரிக்க “தேசிய பொருளாதார குழு” நிலைமையை ஆய்வு செய்து, இரண்டாம் உலகப்போருக்கு பின், 70, 80 களில் இருமுறை (சமாளிக்க கூடிய) நெருக்கடியை அமெரிக்கா சந்தித்தது. இப்பொழுது நிகழ்ந்திருக்கிற சரிவு மிகப்பெரிய சரிவு. இப்பொழுது தொடர்கிற மந்தநிலை அடுத்த ஆண்டு (2009 ) மத்தியில் வரை நீடிக்கும் என அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.

இந்த அறிக்கையை வெள்ளை மாளிகையும் ஒப்புக்கொண்டு இருக்கிறது. (2, டிசம். 2008)

இந்த அறிக்கை பங்குதாரர்களுக்கு ஒரு ஆறுதல் அளிப்பதற்காக தான். அடித்த கொள்ளை கொஞ்சமா! இன்னும் பல மாதங்கள் நீடிக்கும்.

****

இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? என தேடுகிற பொழுது, 2001-2002ல் நிகழ்ந்த உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘என்ரான் திவால்’ பின்னணி இன்றைய நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.

என்ரான் நிறுவனத்தின் நிர்வாகிகளும், கணக்கீட்டு நிறுவனம் மற்றும் முதலீட்டு வங்கிகளும் கூட்டுச் சேர்ந்து பல சித்து வேலைகள் செய்து நிறைய கொள்ளையடித்து தான் திவாலாக்கியிருக்கிறார்கள்.

தில்லுமுல்லு வேலைகள்

என்ரானின் நிர்வாகிகள் தங்களது துணைக் கம்பெனிகளின் வரவு செலவு அறிக்கைகளை, அடுத்தடுத்து என்ரானின் வரவு-செலவு அறிக்கையிலிருந்து நீக்கினார்கள். இதன் மூலமாக தமது பிரமாண்டமான கடன் பொறுப்புகளை மூடி மறைத்து, தமது வருவாய்களை ஊதிப் பெருக்கி காட்டினார்கள்.


அமெரிக்காவில் முதன்மையான கணக்கீட்டு (ஆடிட்டர்) நிறுவனமான ஆர்தர் ஆண்டர்சன் என்ற நிறுவனம் இந்த மோசடிகளை கணக்கு புத்தகங்களில் இருந்து மறைத்து சான்றிதழ் வழங்கியது. இதற்காக இவர்கள் பெற்று கொண்ட வருமானம் – வாரத்திற்கு பத்து இலட்சம் டாலர்கள்.



லாபத்தில் இயங்குவதாய் காண்பித்ததால், இதை நம்பி பலர் வாங்கியதால், பங்குகளின் மதிப்பு உயந்து கொண்டே சென்றது. இந்த சமயத்தில் இதன் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் தாங்கள் வைத்திருந்த பங்குகளை விற்று சம்பாதித்த பணம் 100 கோடி டாலர்கள். என்ரானின் தலைமை நிர்வாகி சம்பாதித்தது. 22.13 கோடி டாலர்கள். அதன் தலைவர் ஜெப்ரே ஸ்கில்லிங் சம்பாதித்தது 7.07 கோடி டாலர்கள்.



அமெரிக்காவின் நம்பர் ஒன் என அழைக்கப்படும் சிட்டி குரூப், நம்பர் 2 யாய் திகழ்ந்த ஜே.பி. மார்கன் சேஸ் மற்றும் மெரில் லின்ச் இந்த நிறுவனத்திற்கு கொடுத்த கடன்கள் 800 கோடி டாலர்கள். இந்த மிகப்பெரிய கடனை தனது கணக்கேடுகளில் கடனாக காட்டாமல் கொள்முதலாக காட்டினார்கள்.

இந்த முதலீட்டு வங்கிகள் இப்படி பல கூட்டு சதி வேலைகளை செய்ததற்காக இவர்கள் பெற்ற ‘சன்மானம்’ ரூ. 20 கோடி டாலர்கள்.

இவர்கள் செய்தது மோசடி. இதை விட மோசடி என்னவென்றால், என்ரான் வீழப்போவது மற்றவர்கள் அறிவதற்கு முன்னரே இவர்கள் அறிந்திருந்தால், கையில் வைத்திருந்த என்ரானின் கடன் பத்திரங்களை பெருமளவில் நல்ல விலைக்கு விற்று தள்ளிவிட்டார்கள்.

இவர்களால் இப்படி ஏமாற்றப்பட்ட பல ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் இந்த மூன்று முதலீட்டு வங்கிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றக் குழு மற்றும் நியூயார்க் அட்டர்னி ஜெனரலின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

இப்படியாக 7000 கோடி டாலர் சொத்து மதிப்பு கொண்டிருந்த என்ரான் என்ற நிறுவனத்தை பூஜ்ய நிலைக்கு கொண்டுவந்து கவிழ்த்துவிட்டார்கள். இதில் பல கோடி கொள்ளையடித்தவர்கள் – என்ரானின் முதன்மை நிர்வாகிகள், கணக்கீட்டு நிறுவனம், முதலீட்டு நிறுவனங்கள்.

பணத்தை இழந்து போண்டியானவர்கள் - தனது சேமிப்பு பணம், ஓய்வூதிய பணத்தையெல்லாம் பங்குகளாய் வைத்திருந்த தொழிலாளர்கள் (என்ரான் இல்லாமல் போனதால், வேலையும் இல்லை) மற்றும் இதன் பங்குகளை நம்பி வாங்கி ஏமாந்து போன பொதுமக்கள்.

இந்த மோசடிக்கு நீதி கிடைக்க வேண்டும் அல்லவா! கிடைத்தது! எப்படி?

என்ரான் மோசடியில் ஈடுபட்டு பல கோடி சுருட்டிய நிர்வாகிகள் வேறு நிறுவனங்களுக்கு தாவிவிட்டார்கள்.

பல கோடி வருவாய் அடைந்த ஆர்தர் ஆண்டர்சன் கணக்கீட்டு நிறுவனத்தை ஊத்தி மூடிவிட்டார்கள். வேறு பெயரில் அவர்கள் புதிய நிறுவனத்தை தொடங்கி விட்டார்கள்.



பல கோடி லாபம் பார்த்த முதலீட்டு வங்கிகள் தான் இன்றைக்கு மஞ்சள் கடிதாசி கொடுத்து இருக்கின்றன. இப்படிபட்ட “நல்ல” நிறுவனங்களை கைதூக்கி விடுவதற்காக தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து 70000 கோடி டாலர் கொடுக்க ‘மக்கள் பிரதிகள்” ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அமுல்படுத்தியும் வருகிறார்கள்.

(முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக்கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன? என்று கேட்டார் மார்க்ஸ்.
மார்க்ஸின் கூற்றை நீருபித்துவிட்டார்கள்)

உண்மையில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் பெரும்பான்மை மக்களுக்கு.... பட்டை நாமம்.

இது அநீதி என்கிறீர்களா?

இது தான் முதலாளித்துவ நீதி.


ஆதாரம் :

ராபர்ட் பிரென்னர் – “அகெய்ன்ஸ்ட் த கரண்ட்” என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் எழுதிய “ஊதிப் பெருக்கப்பட்ட என்ரான்: ஊழல்களும் பொருளாதாரமும்” கட்டுரையிலிருந்து.

நன்றி :

“இந்திய பொருளாதாரத்தின் கூறுகள்” என்ற பத்திரிக்கை வெளியிடும் “அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வுக்குழு, மும்பை.

தமிழாக்கம் – புதிய ஜனநாயகம்.

November 30, 2008

பந்தய ஒப்பந்தங்கள் – சில குறிப்புகள்


//புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த ‘அபரிதமான பொருளாதார வளர்ச்சி’-யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்பொழுது வந்திருப்பது மாரடைப்பு// - புதிய கலாச்சாரம், அக். 2008.***

பந்தய ஒப்பந்தங்களைத் தான் “நிதி உலகின் பேரழிவு ஆயுதங்கள்” என்கிறார்கள் இதன் பாதிப்பை ஆழமாய் உணர்ந்த பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும். அதில் ஒருவர் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட்.

பேரழிவு ஆயுதங்கள் மட்டுமில்லை. இவைகள் “கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்” என்கிறார் குருமூர்த்தி.

****

இன்று நிதி மூலதன உலகத்தை ஆட்டி வைப்பவை பந்தய ஒப்பந்தங்கள் (Derivatives) தான். பல நிதிக் கருவிகளில் ஒன்றான இந்த பந்தய ஒப்பந்தங்கள் தங்களது மதிப்பை தமது சொந்த, உண்மையான மதிப்பிலிருந்து பெறுவதில்லை; எந்த சொத்து அல்லது தொழில் நடவடிக்கையை (Transaction) வைத்து ஒப்பந்தம் போடப்படுகிறதோ, அதிலிருந்து தனது மதிப்பைப் பெறுகிறது.

எவைகள் மீதெல்லாம் இந்த பந்தய ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன? சில உதாரணங்களை பார்க்கலாம்.

• சரக்குகள்
• பங்குகள்
• கடன் பத்திரங்கள்
• வட்டி விகிதங்கள்
• அன்னிய செலாவணி மாற்று விகிதங்கள்
• பங்குச் சந்தை குறியீட்டு எண்
• பணவீக்க விகிதங்கள்
• தட்பவெட்ப நிலைக் குறியீட்டு எண்கள்

ஒரு உதாரணம் மூலம், இதை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

பங்குகள் மீதான பந்தய ஒப்பந்தம்

டி.வி.எஸ்-ஸின் பங்குகளின் உண்மை விலை ரூ. 10. கடந்த பல ஆண்டுகளில் உற்பத்தியில் ஈடுபட்டு, லாபம் பிரித்து கொடுத்ததில், அதன் இன்றைய மதிப்பு ரூ. 300 என வைத்துக் கொள்வோம்.

டி.வி.எஸ்-ஸின் பங்கு கடந்த மாதத்தில் அதன் மதிப்பு ரூ. 300. இந்த மாதத்தில் அதன் மதிப்பு ரூ. 350 என விற்கிறது. இப்பொழுது பந்தய ஒப்பந்தம் தொடங்குகிறது. அடுத்த மாதம் இதன் விலை ரூ. 400 வரைக்கும் உயரும். எவ்வளவு பந்தயம் என்கிறேன்? நீங்கள் ரூ. 350-ல் தான் நிற்கும். நீங்கள் உயராது என்கிறீர்கள். இருவருக்கும் பந்தயம் ரூ. 1 லட்சம். ரூ. 350-ஐ தாண்டினால், எனக்கு லாபம். உயராமல் அப்படியோ நின்றால், உங்களுக்கு லாபம்.

தள்ளி நின்று தானே, பந்தய ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன? இவைகள் எப்படி அந்த சரக்கைப் பாதிக்கும் என நமக்கு சந்தேகம் வருகிறது. பாதிக்கும். எப்படி என்கிறீர்களா?



நான்கு நாட்களுக்கு முன்பு, இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி கட்டாக்கில் நடந்தது. 10 நாட்களுக்கு முன்பு, இந்த போட்டியின் மீது, ஊக வாணிகத்தில் பந்தய ஒப்பந்தம் போடப்படுகிறது (என வைத்துக்கொள்வோம்.) எப்படி? இந்தியா ஜெயிக்கும். இங்கிலாந்து ஜெயிக்கும் – என இரண்டு தரப்பிலும் சில நூறு கோடிகள் புரள்கிறது.

இந்தியா ஜெயித்தால் சில கோடிகளை இழக்கப் போகும் தரப்பு, இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தியாவில் நன்றாக பந்து வீசக்கூடிய ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, முனாப் படேலை அணுகி ஒரு கோடி தருகிறோம் பவுலிங்கைச் சொதப்புங்கள் என்கிறது. ஒருவரோ அல்லது இருவரோ இதில் சிக்கி சொதப்புவார்களா இல்லையா?

இந்த ஊக வணிகத்தில் பலர் சிக்கியிருக்கிறார்கள். கிரிக்கெட்டின் வரலாறு நமக்கு ஏற்கனவே நிரூபித்து இருக்கிறது.

இப்பொழுது சொல்லுங்கள். தள்ளி நின்று போடப்பட்டாலும், பந்தய ஒப்பந்தங்கள் சரக்கைப் பாதிக்கிறதா இல்லையா?

பின்குறிப்பு : ஏகாதிப்பத்திய நாடுகளில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி உலகத்தில் 1930 காலகட்டத்தில் வந்த பொருளாதார நெருக்கடியை விட பல மடங்கு பெரிதாக இருக்கிறது. இந்தியாவில் இன்னும் இந்த பாதிப்புகள் தொடக்க அளவில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. தொடக்க விளைவுகளே நமக்கு பயம் ஏற்படுத்துகின்றன.

இவ்வளவு பெரிய நெருக்கடி எப்படி ஏற்பட்டது? எல்லோருடைய மனதிலும் இந்த கேள்வி திரும்ப திரும்ப அலை அலையாய் எழுந்து கொண்டேயிருக்கின்றன.

ஊக வணிகம், பங்குச் சந்தை சூதாட்டம், பந்தய ஒப்பந்தங்கள், நிதி மூலதனத்தின் வளர்ச்சி – இதை எதைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சிக்காத அரை வேக்காட்டு பேர்வழிகள் இந்த பொருளாதார நெருக்கடி வழக்கமானது தான். கடந்த காலங்களில் சின்ன அளவில் இருந்தது. இப்பொழுது கொஞ்சம் பெரியது. விரைவில் சரியாகிவிடும் என்கிறார்கள்.

தனிநபர்களை விடுங்கள். பத்திரிக்கைகள் கூட இதனை ஆய்ந்து எழுதுவதில்லை. குரு பெயர்ச்சிக்காக புத்தகம் போட்டு விற்பதில் எல்லா பத்திரிக்கைகளும் கவனமாய் இருக்கின்றன.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் இந்த நெருக்கடியின் தீவிரத்தை புரிந்துகொள்வதும், முதலாளித்துவத்தின் கோரத்தை, அதன் சித்து வேலைகளை, அதனால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை சக நண்பர்களிடம், உறவுகளிடம் பகிர்ந்து கொள்வது மிக அவசியம்.

இது தொடர்பாக தேடும் பொழுது செய்திகள் குறைவாக கிடைக்கின்றன. கிடைக்கின்ற தகவல்களைத் திரட்டி தான் பதிவுகள் எழுதப்படுகின்றன. இப்பொழுது, பணிச்சூழலில் தேடுவது சிரமமாக இருக்கிறது. பல சமயங்களில் மின்சாரம் இல்லாமல் வலையில் உலாவ முடியவில்லை. ஆகையால், வாய்ப்பு உள்ளவர்கள் தேடி, பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி.

americadhival@gmail.com

November 22, 2008

ஊகவணிகம் – பந்தய ஒப்பந்தங்கள் என்றால்?



மீண்டும் பங்குச் சந்தைக்கு வருவோம். பங்கு, பங்குச்சந்தை, பங்குச் சந்தை சூதாட்டம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்த பதிவில் ஊக வணிகம் பற்றிப் பார்க்கலாம்.

//ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.// - புதிய கலாச்சாரம்.

பங்குச் சந்தைச் சூதாட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த காலங்களிலும் நெருக்கடி இருந்திருக்கின்றன. இப்பொழுது இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி ஏன்? காரணம் இருக்கிறது. நிதி மூலதன கும்பல்கள் நடத்திய ஊக வாணிகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிதான் காரணம்.

முதலில் உண்மை வணிகம், ஊக வணிகம் என்றால் என்னவென்று பார்க்கலாம்.

உண்மை வணிகம்

என்னிடம் 100 கிலோ கடலை இருக்கிறது. இன்னொருவருக்கு கடலையின் தேவை இருக்கிறது. நான் அதன் விலை ரூ. 1000 என்கிறேன். இருவரும் பேரம் பேசி ரூ. 900 என முடிவுக்கு வந்து, நான் பணம் பெற்றுக் கொள்கிறேன். இது உண்மை வணிகம்.

ஊக வணிகம்

சரக்கு இல்லாமலே சூதாடுவது. கடலையை கண்ணில் பார்க்காமாலே சூதாடுவது. ‘அ’ என்பவர் கடலை இன்னும் ஒரு மாதத்தில் ரூ. 1500 விற்கும் என்பார். “ஆ” என்பவர் ரூ. 800 க்கு தான் விற்கும். என்பார். இருவரும் பந்தயம் கட்டிக்கொள்வார்கள். ஒரு மாதத்தில் என்ன நிலையோ அதற்கு தகுந்தபடி பந்தயப்பணம் கைக்கு மாறும்.


இந்த ஊக வணிகத்தின் அளவு எவ்வளவு என பார்த்தால் ...

உலகம் முழுவதிலும் நடக்கும் நிதி பரிவர்த்தனையில் உண்மை வணிகம் 2 %. மீதி 98% ஊக வணிகம் தான்.

உலக நிதிச் சந்தையில், இன்றைய நிலையில் ஓராண்டு காலத்திற்குள் நடக்கும் அன்னிய செலாவணி கைமாற்றுகளின் அளவு 10,00,00,000 கோடி டாலர்கள்! இதில் உற்பத்தியோடு தொடர்புடையது 2% மட்டுமே. மொத்த உலகத்தின் உள்நாட்டு உற்பத்தி அளவு இதில் 4% மட்டுமே! (Red Star – Oct 2006)

ஆச்சரியமாய் இருக்கிறதா!

ஊகவணிகத்தில் பந்தய ஒப்பந்த வகைகள் (deraivatives) இருக்கின்றன. நிதி மூலதன வங்கிகள் இந்த பந்தய வகையறாக்களில் விளையாடி கொள்ளையடித்தது தான் இவ்வளவு பெரிய நெருக்கடி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவைகள் கிடையாது. இதன் தன்மை, வகைகள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். அதைப் பற்றி சில தகவல்கள்.

பந்தய ஒப்பந்தங்களைத் தான் “நிதி உலகின் பேரழிவு ஆயுதங்கள்” என்கிறார்கள் இதன் பாதிப்பை ஆழமாய் உணர்ந்த பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும். அதில் ஒருவர் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட்.

பேரழிவு ஆயுதங்கள் மட்டுமில்லை. இவைகள் “கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்” என்கிறார் குருமூர்த்தி.

பழைய நினைவுகளில் கிளறிப் பார்த்தால்...


பந்தய ஒப்பந்த வகையறாக்களில் கொடிகட்டிப் பறந்து, பிறகு அவைகளினாலேயே என்ரான் குழுமம் நொறுங்கி விழுந்து திவாலானது. இந்த நிறுவனத்திற்குத் தான், மின் உற்பத்தியிலேயே ஈடுபடாமல், மகாராஷ்டிரா அரசு மாதம் 85 கோடி கட்டி, அதன் மின்சார வாரியம் திவாலானது. பிறகு, என்ரான் திவாலானதால், மகாராஷ்டிரா அரசு தப்பித்தது.




பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற் இரு மேதைகளால் நடத்தப்பெற்ற நீண்டகால முதலீட்டு நிர்வாகம் (LTCM) என்ற நிறுவனம் 1998ல் நொறுங்கியது இதற்கு இன்னுமொரு உதாரணம். இதன் கணக்குப் புத்தகங்களில் காணப்பட்ட பந்தய ஒப்பந்தங்களின் பண மதிப்பு 1,40,000 கோடி டாலர்களாகும்.

November 18, 2008

டாலர் யானை! புகுந்தாலும் நட்டம்! வெளியேறினாலும் நட்டம்!



ஒரு நாடு கடும் பொருளாதார சுனாமியில் சிக்கி, திவலாகிவிட்டது. ஆனால், மூன்றே மாதங்களில் உலக நாடுகளில் அதன் நாணய மதிப்பு உயருகிறது. இது உலக அதிசயம் அல்லவா!

இந்த அதிசயம் உலகத்தில் வேறு எந்த நாட்டிற்கும் நடக்க வாய்ப்பேயில்லை. அமெரிக்காவிற்கு மட்டுமே அந்த வாய்ப்பு. டாலரில் இருக்கிறது அதன் சூட்சுமம்.

இதே பொருளாதார நிலைமையில் இந்தியா சிக்கியிருந்தால், இந்தியா இன்னொரு சோமாலியா-வாக சில ஆண்டுகளில் உருமாறியிருக்கும்.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகளை கைவிடாத வரை இந்தியாவிற்கு அந்த நாள் வெகு தூரமில்லை.

****

‘லைட்லிங்க்’ என்ற பதிவர் டாலரில் உள்ள சூட்சுமத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறார். படியுங்கள்.

\\எப்பொழுதெல்லாம், அமெரிக்கா மட்டும் தனியாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறதோ, அப்பொழுதெல்லாம், டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும். ஆனால், அது உலக நாடுகளின் பொது நெருக்கடியாக விரைவில் மாற்றப்படும்.//

//உலக அந்நியச் செலாவணியில் மிகப்பெரும் பங்கு டாலர்களிலேயே சேமிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் கூட டாலரின் சரிவை விரும்புவதில்லை.//

***

உயர்கின்ற டாலர் உணர்த்துகின்ற பாடம்

கடந்த ஆறு வருடங்களாக, உலக நாடுகளின் சில முக்கியமான நாணயங்களுக்குக்கெதிராக டாலர் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது. இந்தக் காலத்தில் பின்னடவை சந்தித்த அமெரிக்கப் பொருளாதாரம், கடந்த ஓராண்டுக்காலமாக மேலும் கடுமையான நெருக்கடிக்குள்ளானது.

டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்புயர்வு சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதியை பெருமளவு பாதித்தது. ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால், இந்திய ஏற்றுமதிப் பொருட்களின் விலை உயர்ந்ததே அதற்கு காரணம். தமிழ்நாட்டில் திருப்பூர் பின்னலாடைகள், கோவையின் என்ஜீனியரிங் பொருட்கள் உட்பட ஏற்றுமதி நெருக்கடிக்குள்ளானதும் அண்மைக்கால அனுபவம்.

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டாலர் ரூ. 35 என்ற அளவில் மேலும் வீழ்ச்சியடையும் என்றெல்லாம் சென்ற ஆண்டு கணிக்கப்பட்டது. ஆனால், இன்று நேர்மாறாக, டாலர் மதிப்பு ரூ. 50-ஐத் தொட்டு உயர்ந்து நிற்பதை பார்க்கிறோம். ஜப்பானின் யென்னைத் தவிர்த்து, மற்ற உலகின் அனைத்து முக்கிய கரன்சிக்களுக்கெதிராகவும் டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. அதுவும் அமெரிக்காவின் நிதிச்சந்தை நெருக்கடி கடுமையாகவுள்ள காலத்தில் இது நிகழ்ந்து வருகிறது.

ஒருநாடு கடுமையான நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும்போது, அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு எவ்வாறு உயர முடியும் என்று எழும் இயல்பான கேள்விக்கான காரணங்களை தேடுவதும், பாடங்களை கற்றுக் கொள்வதுமே இக்கட்டுரையின் நோக்கம். முதலில், டாலர் மதிப்பு ஏன் வீழ்ச்சியடைந்தது என பார்ப்போம்.

அடுத்தவன் தலையில் மிளகாய் அரைத்தே...

அமெரிக்கா நீண்ட காலமாகவே, பிற நாடுகளிடம் கடன் வாங்கி தனது சொந்த நாட்டு செலவுகளை சமாளிக்கும் நடைமுறையைக் கொண்ட ஒரு நாடு. அதனுடைய வெளிநாட்டுக் கடன் 9.4 டிரில்லியன் (9.4 இலட்சம் கோடி டாலர்) என்பது அரசாங்கக் கணக்கு. இது 12 டிரில்லியன் டாலர் வ்ரை இருக்குமென “ஐரோப்பிய யூனியன் டைஜஸ்ட்” தெரிவிக்கிறது. மேலும், தனது உள்நாட்டு, வெளிநாட்டு பற்றாக்குறைகளையும், வெளிநாட்டு முதலீடுகளையும் சமாளிப்பதற்காக, வேலை நாள் ஒன்றுக்கு 4 பில்லியன் (400 கோடி) டாலர் வீதம் ஆண்டு முழுவதும் கடன் வாங்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருப்பதாகவும் அது தெரிவிக்கிறது. அமெரிக்காவின் கடன்களில், ஏறக்குறைய 75 சதவிகிதம் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிடமிருந்து பெறப்பட்டதே என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், அதனுடைய நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏறக்குறைய 800 பில்லியன் டாலர் அளவை நெருங்கியிருக்கிறது. இது அமெரிக்கா உள்நாட்டு மதிப்பில் 7 சதவிகிதம் ஆகும். இது தவிர, 2007-ல் வெடித்த சப்-பிரைம் நெருக்கடி, பணவீக்கம் என பல பிரச்சனைகள். இயல்பாக இவையெல்லாம் டாலரின் மதிப்பினை வீழ்ச்சியடையச் செய்தன. அமெரிக்க நாட்டில் பொருளாதார நெருக்கடி. எனவே, அதன் நாணயம் மதிப்பிழக்கிறது. இதுவரை, சூழ்நிலையை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முதல், டாலர் மதிப்பு உயரத் தொடங்கியிருக்கிறது. இது எப்படி என்ற நமது கேள்வியும் இங்கிருந்து தான் தொட்ங்குகிறது.

சாதகங்களும், சாகசங்களும்

எப்பொழுதெல்லாம், அமெரிக்கா மட்டும் தனியாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறதோ, அப்பொழுதெல்லாம், டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும். ஆனால், அது உலக நாடுகளின் பொது நெருக்கடியாக விரைவில் மாற்றப்படும். (தனது நெருக்கடியை உலக நெருக்கடியாக மாற்றுவதில் அமெரிக்க் ஏகாதிப்பத்தியதிற்கு உள்ள சாதகங்களையும், அதன் கடந்த கால சாகசங்களையும் நினைவில் நிறுத்திக்கொண்டால், புரிதல் எளிதாகும்) அடுத்த கட்டத்தில் அமெரிக்காவின் கை ஓங்கும். அத்துடன், டாலரின் மதிப்பும் மீண்டும் உயரும். இது இன்றைய உலக பொருளாதாரத்தின் எழுதப்படாத விதி. இதற்கு அடிப்படையான காரணம் 1973ல் டாலருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னர், சட்டரீதியாக இல்லாவிட்டாலும், நடைமுறையில் அது உலக பரிவர்த்தனை நாணயமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதே காரணம். அதன் அரசியல், இராணுவப் பின்னணி என்பதெல்லாம் தனிக்கதை.



1999ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பொது நாணயமாக யூரோ அறிமுகமானபொழுது, டாலருக்கு போட்டியாக அது உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நாணயம் என்ற வகையில் பொருளாதார ரீதியாக அது வலிமை பெற்றாலும், இன்றுவரை அரசியல் ரீதியாக டாலரின் இடத்தை யூரோவால் அடைய முடியவில்லை. எண்ணெய் ஏற்றுமதியில் யூரோவிற்கு மாறுவது என்ற சதாம் ஹீசேனின் முடிவு ஈராக் போருக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? இன்றைக்கும் கூட ஈரான், வெனிசுலா போன்ற நாடுகள் தவிர உலக எண்ணெய் வர்த்தகத்தில், வேறு எந்த நாடும் யூரோவை பரிவர்த்தனை நாணயமாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

உலக அந்நியச் செலாவணியில் மிகப்பெரும் பங்கு டாலர்களிலேயே சேமிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் கூட டாலரின் சரிவை விரும்புவதில்லை. சீனாவின் 2 டிரில்லியன் (2 லட்சம் கோடி) டாலர் அந்நியச் செலாவணியின் ஆகப்பெரும் பங்கு டாலர்களிலேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 300 பில்லியன் (30,000 கோடி) டாலர் சேமிப்பும் இத்தகையதே. அரபு நாடுகளின் பெட்ரோ டாலர்கள், லண்டன், பாரீஸ், ஜீரிச் (சுவிட்சர்லாந்து) மையங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் யூரோ டாலர்கள் (யூரோ நாணயம் அல்ல) அனைத்துமே இவ்வகைப்பட்டவையே.

உலக எண்ணெய் வர்த்தகத்தில் டாலரே இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறது. தவிர, உலக உற்பத்தியில், அமெரிக்காவின் பங்கு 25 சதவீதம். ஏற்றுமதியை சார்ந்தே நிற்கும் நாடுகள் பல பொருளாதார ரீதியாக அமெரிக்கச் சந்தையை நம்பியிருக்கும் நிலை தொடர்கிறது.

டாலர் யானை

உலகமயமாக்கல் என்ற பெயரால், உலக நாடுகளின் பொருளாதாரங்கள் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதால், அமெரிக்க நிதிச்சந்தை நெருக்கடி மிக விரைவில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் நெருக்கடியாக மாற்றப்பட்டது. அமெரிக்காவின் நிதிச்சந்தை நெருக்கடியை தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து டாலர்கள் வெளியேறின. ஓரிரு வாரங்களுக்குள்ளேயே 13 பில்லியன் (1300 கோடி) டாலர்களை அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றிவிட்டனர். இதனால் ஒரு பக்கம் பங்குச் சந்தை வீழ்ந்தது. மறுபக்கம் டாலருக்கு ஏற்பட்ட கிராக்கியால், டாலர் மதிப்பு உயரத் தொடங்கியது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.



இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதெல்லாம் பதறாத நிதியமைச்சர் சிதம்பரம், பங்குச் சந்தை சிதறிய பொழுது பதறிப்போனார். பங்குச் சந்தை முதலீடுகளுக்கு நிதி தாராளமாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் வரை வங்கிகளின் கையிருப்பை பெருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இங்கு சற்று பின்னோக்கி பாருங்கள். இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னால், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வங்கிகளிலிருந்து இருப்பைக் குறைத்ததும் இவர்கள் தானே? அப்படியானால் பணவீக்கம் தீர்ந்துவிட்டதா?

அந்நிய மூலதனம் அதிகமாய் நுழைந்ததால் பணப்புழக்கம் அதிகரித்தது. அது பணவீக்கத்திற்கு இட்டுச் சென்றது. விலைவாசி எகிறியது. அதற்காக வங்கிகளின் கையிருப்பை குறைத்தார்கள். இப்பொழுது, அதே மூலதனம் வெளியேறும் பொழுது பணவீக்க நிலைமைகளில் மாற்றம் ஏதுமில்லாத போதும் கூட எதிர்த் திசையில் வேறு ஒரு நடவடிக்கை.
ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது. டாலர் யானை புகுந்தாலும் நஷ்டம். வெளியேறினாலும் நஷ்டம்.

உண்மைப் பொருளாதாரத்தை அதாவது பொருளுற்பத்தியை நம்பாமல், நிதி மூலதனத்தை மட்டும் பயன்படுத்தி ஊக நடவடிக்கைகள் மூலமே எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. நெருக்கடியிலும் தனது டாலர் மதிப்பினை உயர்த்திக் கொள்ளும் சாதகமும், சாமர்த்தியமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமே உண்டு. உலகின் முதல் பெருங்கடனாளியான அமெரிக்கா, அதே வேளையில் நிகர மூலதன ஏற்றுமதியிலும் உலகில் முதலிடத்தை வகிக்கிறது. ஏகாதிபத்திய புலியைப் பார்த்து இந்தியப் பூனை கற்றுக்கொள்வதற்கு பாடங்களே இல்லையா?

உண்மை பொருளாதாரம் குறித்த அக்கறையை விட ஊகப் பொருளாதாரத்தின் மீது அரசு அதிக அக்கறை காட்டுகிறது. அதற்காக மாய்ந்து மாய்ந்து எடுக்கும் நடவடிக்கைகளிலும், காட்டும் அக்கறையிலும் அரை மடங்காவது பொருளுற்பத்திகாகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் காட்டினால், அதுவே உண்மையான சீர்திருத்தமாக இருக்கும். நாய் வாலை ஆட்டலாம். வால் நாயை ஆட்டலாமா?

(அனுமதியுடன்)

நன்றி - From : lightlink.wordpress.com