
நன்றி : தினமணி - நூல் மதிப்புரை
நூல் ஆசிரியர் : சுதீப் சக்கரவர்த்தி,
தமிழில் : அ. இந்திராகாந்தி
*****
பத்திரிக்கையாளரான நூலாசிரியர் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதாக கூறப்படும் பகுதிகளில் பயணம் செய்து பலரைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு எழுதப்பட்டுள்ள நூல். மாவோயிஸ்டுகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அவர்களின் இன்றைய நிலையையும் மிக துல்லியமாக நூல் படம்பிடித்து காட்டுகிறது.
"மாவோயிசம் நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்சனை அல்ல; மாறாக ஏழ்மை, சரியான ஆட்சியின்மை, மோசமான நீதி மற்றும் ஊழல் தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் ஆகும். ஒருநாடாக இந்திய அரசு செய்வதற்குத் தவறியவற்றைப் பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி மட்டும் தான் இந்திய மாவோயிஸ்டுகள்" என்ற அடிப்படையில் பல விவரங்களை நூல் தருகிறது.
சம காலத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்சனைப் பற்றிய விரிவான ஆய்வாக, தகவல் களஞ்சியமாகத் திகழும் குறிப்பிடத்தக்க நூல்.
பக்கம் : 424 விலை : ரூ. 250/-
வெளியீடு : எதிர் வெளியீடு, பொள்ளாச்சி - 1.
04259 - 226012
***
சென்னையில் புத்தகம் கிடைக்குமிடங்கள் :
கீழைக்காற்று பதிப்பகம், 10, ஔலியா சாகிப் தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 தொலைபேசி – 044 2841 23677
நியூ புக் லேண்ட், 52சி, வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர் சென்னை - 600017.
தொலைபேசி - 044 -2815 6006
0 பின்னூட்டங்கள்:
Post a Comment