
எங்கெங்கோ தொலைவில் கிடக்கும் 'கனவு கன்னிகளின்' 'நல்ல' படங்களை சிரமப்பட்டு தேடி, வாசகர்களுக்கு தருவதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். விமர்சனத்தில் அந்த அக்கறையை கொஞ்சம் காட்டலாம்.
திரைப்படம் பற்றி எப்படி எழுதினாலும், படிப்பதற்கு ஆள்கள் கிடைக்கிறார்கள் என அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள்.
பத்திரிக்கை உலகில் 'கவர் பண்பாடு" உண்டு. பதிவர்கள் காசு வாங்காமலே, வாங்கியது போல எழுதுகிறார்கள்.
விமர்சனம் என்கிறார்கள். போகிற போக்கில் அசிரத்தையாக வேடிக்கைப் பார்த்தவனின் குறிப்புகளாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றன.
படத்தின் சாரம் எதைப்பற்றி விவாதிக்கிறது! என்ன விசயத்தை பார்வையாளின் மூளையில் பதிக்கிறது என கவலை கொள்ளாமல், படம் கல்லா கட்டுமா! என தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் போல மிகுந்த கவலையுடன் பேசுகிறார்கள்.
மழையில் நனைந்து, வெயிலில் வாடி, பணத்தையும் தொலைத்து, மூன்று மணி நேரம் தங்கள் அருமையான காலத்தையும் துறந்து படம் பார்க்கிறார்கள். ஆனால், பதிவை பத்து நிமிடத்தில் எழுதி, படிப்பவர்களின் தலையில் கட்டிவிடுகிறார்கள்.
யாராவது வாசகர்களின், ரசிகர்களின் மீது அக்கறை கொண்டு, படத்தைப் பற்றி ஆழ்ந்து நான்கு பக்கத்திற்கு எழுதினால், திட்டுகிறார்கள்; எதிர்மறையாக சிந்திக்கிறார்கள் என தங்களை 'நேர்மறையின்' ஆதரவாளர்களாக பறைசாற்றி கொள்கிறார்கள்.
வாசகர்கள் தங்கள் விமர்சனத்திற்காக காத்துக்கொண்டிருப்பார்கள் என பதட்டத்தில், பதிவர்கள் பல மோசமான படங்களில் சிக்கி கொள்கிறார்கள். அவர்களின் மீதான அக்கறை தான் இந்த பதிவு.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment