psychological crime thriller film
மாலை 6.45 காட்சி. 6.42க்கு உள்ளே நுழையும் பொழுது அவ்வளவு பெரிய திரையரங்கில் நான் மட்டுமே இருந்தேன்.
படம் துவங்கியது. அந்த இருட்டான நீளமான நெடுஞ்சாலையில், இந்தி பாடல் காரில் ஒலிக்க அந்த கார் போய்க்கொண்டிருந்தது. யாருடா என அந்த இரண்டு உருவம் என உற்றுப்பார்க்கும் பொழுது… அந்த விபத்து. கார் அப்படியே தலைகீழாக தூக்கி எறியப்பட்டது.
எல்லா விளக்குகளும் எரிந்தன. படம் தூக்கி எறிந்ததோடு படம் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் எனக்கு டிக்கெட் கிழித்து கொடுத்த அந்த இளைஞர் உள்ளே வந்தார். இரண்டு டிக்கெட்டுகள் தான் விற்றிருக்கின்றன. மூன்று டிக்கெட்டுகள் விற்றால் கூட படத்தை ஓட்டிவிடுவோம். கம்பெனிக்கு இரண்டு கட்டுப்படியாகாது. ஆகையால் காட்சியை ரத்து செய்கிறோம் என வருத்தம் தெரிவித்தார்கள். ஏஜி.எஸ். போன்ற திரையரங்குகள் பத்து அல்லது அதற்கு மேலே தீர்மானித்திருக்கிறார்கள். இந்த விசயத்தில் ரோகிணி பரவாயில்லை.
படம் சராசரியான படம் தான். ஓடிடியில் பார்த்துக்கொள்ளவேண்டியது தான். 

0 பின்னூட்டங்கள்:
Post a Comment