
புது தில்லி, நவ. 26: உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நிலம் தொடர்பான அலாகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து வக்பு போர்டு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் வெள்ளிக்கிழமை விசாரித்தனர்.அப்போது அவர்கள் அலாகாபாத் நீதிமன்ற செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அலாகாபாத் நீதிமன்றத்துக்கு எதிராக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனைத் தெரிவிப்பதற்கே வருத்தமாக உள்ளது. நீதிபதிகள் பலர் நியாயமாக தீர்ப்பளிப்பதில்லை என்பதே
முக்கியமான புகாராக உள்ளது.இது தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். தங்களுக்கு வேண்டப்பட்ட வழக்கறிஞர் ஆஜராகும் போது,அவர்களுக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பளிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.நீதிபதிகளின் மகன்கள், உறவினர் பலர் அங்கு வழக்கறிஞர்களாக உள்ளனர். இவர்களில் பலர்பணியைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே, அவர்கள் விலைஉயர்ந்த கார்களில் வலம் வருகிறார்கள், பங்களாக்களை வாங்கியுள்ளனர், பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்றும் தெரிகிறது. நீதிபதிகள் பலர் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளிப்பதே இதற்குக் காரணம் என்று தெரிகிறது. இதுபோன்ற மோசமான செயல்பாடுகள் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைப்பதாக அமைகிறது. எனவே அலாகாபாத், லக்னெü உயர் நீதிமன்றங்களைச்
சீரமைப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி - 27/11/2010 - இதழிலிருந்து....
பின்குறிப்பு : மாவட்ட நீதிமன்றம் தொடங்கி, உச்ச நீதி மன்றம் வரை காசு கொடுத்தால், தமக்கு ஆதரவான "நீதி" கிடைக்கிறது என்ற உண்மையை சில ஆண்டுகளாக வரும் பத்திரிக்கை செய்திகள் நிரூபிக்கின்றன. உச்சநீதி மன்றம் அலகாபாத் நீதி மன்றம் லஞ்சத்தில் கொஞ்சம் ஓவராக போவதை கண்டித்திருக்கிறது. இன்னும் நீதித் துறையை மக்கள் 'நம்புகிறார்கள்'. அந்த நம்பிக்கையை முற்றிலுமாய் இழந்துவிடக்கூடாது என்கிற கவலை இந்த கண்டிப்பில் தெரிகிறது.
2 பின்னூட்டங்கள்:
வாய்தா தேதி சொல்றதிற்கும்,கையெழுத்து போடும் இடத்திலும் காசு வாங்குகிறார்கள்.
நீதி தேவதை கண்ணை மூடிக்கொண்டிருப்பது கூட இவர்கள் செய்யும் அட்டுழியங்களை பார்காமல் இருக்க தானோ
Post a Comment