> குருத்து: அணு உலை எதிர்ப்பிலும் வெற்று சவடால் அரசியல்!

October 3, 2012

அணு உலை எதிர்ப்பிலும் வெற்று சவடால் அரசியல்!

சீமான், வைகோ, திருமா இன்னபிற தலைவர்கள் எல்லாம் இடிந்தகரைக்கு போய், ஒரு கால இடைவெளியில் ஆளாளுக்கு 20 நிமிடம் ஆவேசமான, நெகழ்ச்சியான‌ உரை நிகழ்த்திவிட்டு வருகிறார்கள். யூடியூப்பில் அவ்வப்பொழுது பார்க்கமுடிகிறது.

அதை தவிர்த்து அவர்களுடைய ஆயிர
க்கணக்கான அணிகளை கொண்டு பொதுக்கூட்டமோ, மக்களிடம் பிரச்சாரமோ செய்வதை கேள்விப்படவே முடியவில்லை. போய் பேசிவிட்டு வந்துவிட்டால் போதும் என நினைக்கிறார்களா?

அணு உலை முற்றுகை போராட்டத்தின் பொழுதும் அதற்கு பிறகு காவல்துறை வெறிநாய்கள் இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் மீது பாய்ந்து கடித்த பொழுதும், களத்தில் எந்த வாக்கு வங்கி தலைவர்களும், அணிகளும், தமிழின அமைப்புகளும், அணிகளும் யாரும் இல்லை. மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் தான் அம்மக்களோடு நின்றார்கள். ஆதாரங்களை சேகரித்து நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அம்பலப்படுத்தினார்கள்.

வெற்று சவடால் அரசியலை அணு உலை விசயத்திலும் அமுல்படுத்துகிறார்கள். அதுதான் கவலையாக இருக்கிறது!

0 பின்னூட்டங்கள்: