> குருத்து: ரயில் நிலையங்கள்

April 20, 2024

ரயில் நிலையங்கள்


ரயில் நிலையங்கள் எப்பொழுதும் பிடித்தமானவை.

பேருந்து நிலையங்களில் டீசலின் மணமும், வெட்கையும் எப்பொழுதும் சூழ்ந்து நிற்கும்.

தொலைதூரம் காற்றோட்டமாய் அழைத்து செல்வதால் ரயிலின் மீதும், காற்றோட்டமான நிலையங்களின் மீதும் அலாதி பிரியமுண்டு.
புத்தகம் படிப்பதற்கு நல்ல சூழலைத் தருபவை.

ஏதாவது ரயில் பயணம் என்றால்... முன்கூட்டியே போய்விடுகிற வழக்கமுண்டு. காத்திருப்பதில் ஏதும் சலிப்பு தட்டுவதில்லை.

ரயில்வே நிலையங்கள் வடிவத்தில் ஒன்று போல கட்டப்பட்டிருந்தாலும்... அந்த ஊரின் நினைவுகளோடு கலந்திருப்பதால் ஒவ்வொரு நிலையமும் தனித்த தன்மையுடையவை.

ரயில் எப்பொழுதும் கூடுதல் நேரம் ஓய்வெடுக்கும் இரவு வேளைகளில் ரயில் நிலையங்களின் அமைதியும், அழகும் நிறைந்து இருக்கும்.

தொடர்ச்சியாக ஒலிக்கும் அறிவிப்புகள் அசரீரி போல கேட்டுக்கொண்டே இருக்கும். தேநீர்காரர்கள் மட்டும் அந்த சுமாரான தேநீரோடு வேகவேகமாக அங்கும் இங்கும் அலைந்து திரிவார்கள்.

கேரளா போன்ற ஈரம் அதிகமுள்ள ஊர்களில் இப்படி நிலையங்கள் மரம், செடி, கொடி படர்ந்திருக்கும் நிலையங்களில் குளிர்ச்சியும் கூடி நிற்கும்.

இந்த நிலையமும் கேரளாவின் ஒரு நிலையம் தான்.

இந்தியா முழுவதும் ரயிலில் பயணம் செய்யவேண்டும். அதே போல எல்லா ரயில் நிலையங்களிலும் அமர்ந்து புத்தகமும் வாசிக்கவேண்டும்.

0 பின்னூட்டங்கள்: