> குருத்து: ஜோசியர் சொந்த வீட்டில்! ஜோசியம் பார்த்தவர் வாடகை வீட்டில்!

August 19, 2025

ஜோசியர் சொந்த வீட்டில்! ஜோசியம் பார்த்தவர் வாடகை வீட்டில்!


சென்னையில் இருக்கும் வரை எதுவும் தெரிவதில்லை. ஆனால், சொந்த ஊருக்கு போனால், வெளிநாடு போகலாமா, தொழில் துவங்கனுமா, சொந்த வீடு கட்டலாமா, வரன் பொருத்தம் பார்க்கனுமா என சகலத்துக்கும் ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோசியம் பார்க்கிறார்கள்.

கடவுள், பேய், பூதம் நம்பிக்கையில்லாமல் இருந்தால் தான் இதில் இருந்து தப்பிக்க முடியும். இல்லையெனில், மண்டையை நிச்சயம் குழப்பிவிடுவார்கள்.

சொந்தத்தில் ஒரு பையனுக்கு பெண் அமையவில்லை என ஒரு ஜோசியக்காரரிடம் செல்ல, ரூ. 30000 க்கு பெரிய பில்லை போட்டு பூஜை ஒன்றை அந்த ஜோசியக்காரன் நடத்தினாராம். டேய்! சம காலத்தில் பொண்ணு கிடைக்கவில்லைன்னு சொல்றது எல்லா ஊரிலும் உள்ள பிரச்சனைடா!

”நீ பிறந்த பொழுது பெரிய வறுமைடா!” என சின்ன வயதில் சொல்லிக்கொண்டே குற்ற உணர்ச்சியை உருவாக்குவார்கள். கொஞ்சம் வளர்ந்த பிறகு தான் தெரிந்தது. நான் பிறந்த வருடத்தில், தமிழ்நாடு முழுவதுமே பெரிய பஞ்சமாக இருந்திருக்கிறது என அறியும் பொழுது... வந்ததே கோபம்!

அறிவியலின் கைப்பிடித்து... இன்னும் நாம் நெடுந்தூரம் பயணிக்கவேண்டும். தமிழகமே இப்படி இருக்கிறது என்றால்... வட மாநிலங்களை நினைத்துப் பார்க்கவே பகீரென்று இருக்கிறது. இன்னும் கோயில், கும்பாபிசேகம், கலவரம் என பின்னுக்கு இழுத்துக்கொண்டே செல்கிறார்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்.

0 பின்னூட்டங்கள்: