
ஒரு கிராமத்திற்குள் புகுந்து, குழந்தைகள், வயதானவர்கள் என பாராமல், அரசின் அடியாட்படைகளான காவல்துறை, வனத்துறை மற்றும் அதிகார வர்க்கங்களான வருவாய்த்துறை அதிகாரிகளும், கிராம நிர்வாக அலுவலர்களும் கொடூரமாக தாக்கி, கிராமத்தையே சூறையாடி இருக்கிறார்கள். பல பெண்களை பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள். எப்பேர்பட்ட அநியாயம் இது!
அந்த பழங்குடி மக்களின் விடாப்பிடியான, நெஞ்சுறுதி மிக்க போராட்டம் 19 வருடங்களுக்கு பிறகு, இன்று அனைவரும் குற்றவாளிகள் என தண்டனை வழங்கி தந்திருக்கிறது.
ஒரு கிராமத்திற்கு நேர்ந்த அநியாயத்திற்கே தீர்ப்பு வழங்க 19 வருடங்கள் போராட வேண்டுமென்றால், ஒர் தனிநபருக்கு இந்த கதி ஏற்பட்டால், தண்டனை வழங்க எவ்வளவு காலம் இழுத்தடிப்பார்கள். அதற்கு நல்லகாமனின் போராட்ட கதை வரலாற்று உதாரணம். (கீழே சுட்டி உள்ளது)
போராட்டம் இல்லையெனில், சுயமரியாதையான வாழ்வு இல்லை என மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகிறார்கள்!
தொடர்புடைய சுட்டிகள் :
வாச்சாத்தி தீர்ப்பு விவரம் - தினமணி - 30/09/2011
வாச்சாத்தி சம்பவம்
தோல்வி நிலையென நினைத்தால்! - புதிய கலாச்சாரம்
1 பின்னூட்டங்கள்:
பயனுள்ள பதிவு.
Post a Comment