
கூடங்குளத்திலுள்ள இரண்டு அணு உலைகளை இயக்க ஆரம்பித்தால், தமிழகம் இருளிலிருந்து மீண்டுவிடுமென அணு உலைஅதிகாரிகள் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
இதை கொஞ்சம் பார்க்கலாம்.
இரண்டு அணு உலைகளை இயக்க ஆரம்பித்தால், கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 2000 மெகாவாட் தான்.
சொல்வது 100% என்றால், எப்பொழுதும் அணு உலையில் கிடைப்பது 60% தான். அப்ப 1080 மெகாவாட்.
அணு உலை இருக்கும் மாநிலத்திற்கு மத்திய அரசு ஒதுக்கப்படுவது 30% தான். தொடர் போராட்டத்தினால், பெருந்தன்மையுடன் 50% தருவதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்ப 540 மெகாவாட்.
இதில், மின்சாரத்தை கடத்துவதில் இழப்பு 25%.அதையும் கழித்தால் 405 மெகாவாட். இறுதியில், பயன்படுத்துவோருக்கு கிடைக்கும் வரை இழப்பு 20% ஆக தமிழகத்திற்கு கிடைப்பது 305 மெகாவாட் தான்.
தமிழகத்தின் பற்றாக்குறையோ 2500 லிருந்து 4000 மெகாவாட் என அரசு தரப்பு அறிக்கை சொல்கிறது. பிறகெப்படி, இருளிலிருந்து மீள்வது?
விரிவாக கட்டுரையை படிக்க : பூவுலகின் நண்பர்கள்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment