> குருத்து: பின்தொடரும் நினைவுகள்

May 21, 2023

பின்தொடரும் நினைவுகள்


அழுது அஞ்சலி செலுத்தி

மாதங்கள் கடந்த பின்பும்
நண்பர்கள் குழு வாட்சப்பில்
'அவரும்' இருக்கிறார்.
பதிவைப் படித்தவர்களில்
'அவரும்' இருக்கிறார்.

பேஸ்புக்கில் என்றோ எழுதிய பதிவுக்கு
யாரோ எழுதிய பின்னூட்டத்தால்..
திடீரென மேலெழும்பி
கண்ணில்படுகிறார்.

இறப்பதற்கு முன்பை விட
இப்பொழுது அடிக்கடி
கனவில் வந்துபோகிறார்.

பதட்டமாய்
'அவருடைய' எண்ணை
என் செல்போனில் இருந்து அழிக்கிறேன்.
திடீரென ஒருநாள் அழைத்துவிடுவாரோ என
பயமாக இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: