வேடர் குலத்தைச் சார்ந்த தலைவருக்கு மகனாக பிறக்கிறான் நாயகன் திண்ணன். அவர்களிடத்தில் காளி வழிபாட்டில் பலி கொடுக்கும் வழக்கத்தில்அதில் நாயகனின் நண்பனை பலிகொடுக்கும் பொழுது, கடவுள் வழிப்பாட்டையை எதிர்க்கிறான்.
அங்கு ஒரு தனிக்காட்டில்
வாயு லிங்கத்தை வைத்து தான் மட்டும் சடங்குகள் செய்து வழிபாட்டு வருகிறார் வேதங்களைக்
கற்றுத் ”தேர்ந்த” சாஸ்திரி. வாயு லிங்கத்தைப்
பற்றி கேள்விப்பட்டு அதைக் கைப்பற்ற வருகிறான் காளா முகி என்ற பெரும் படைக்குத் தலைவன்.
பிரிந்துக் கிடக்கும்
ஐந்து வேடர் குழுக்களும் ஒன்றாய் இணையவேண்டிய நெருக்கடி வருகிறது. நாயகனின் காதலால்,
ஒற்றுமையில் குழப்பம் வருகிறது. மகனைத் தள்ளி வைக்கிறார்.
காளா முகி வந்தானா?
திண்ணன் தான் கண்ணப்பனா? என்ற கேள்விக்கு ஆக்சன், பக்தி என கலந்து கட்டி தந்திருக்கிறார்கள்.
***
சிவனின் திருவிளையாடல்களை 63 நாயன்மார்கள் கதையை விரிவாக சொல்கிறது பெரிய புராணம். அதில் ஒருவர் கண்ணப்ப நாயனார். ஆகம முறைப்படி சடங்கு சம்பிராயதங்களுடன் வழிபாடும் சிவகோசாரியார், வேடன் குலத்தைச் சேர்ந்த திண்ணன் சிவன் மீது கொண்ட பேரன்பினால், தான் சாப்பிட்டும் கறியைப் படைத்து, லிங்கத்தின் கண்ணீல் ரத்தம் வடிய, தன் கண்ணைக் கிழித்து தந்த கண்ணப்பன் கதையை கேள்விப்பட்டிருப்போம்.
கண்ணப்பர் பிறந்த
இடம் ஆந்திராவின் காளஹஸ்தி என இருப்பதால், தெலுங்குகாரர்கள் அந்த கதையை எடுத்துக்கொண்டு…. அதைச்
சுற்றியும் கற்பனையாய் கதையை அமைத்து இந்திய அளவில் அக்சய் (சிவன்) – காஜல் (பார்வதி), சரத்குமார் (நாயகனின் அப்பா),
மோகன்லால், மோகன்பாபு, பிரபாஸ் போன்ற நட்சத்திரங்களையும் நடிக்க வைத்து பான் இந்தியா
படமாக இயக்கியிருக்கிறார் முகேஷ் குமார் சிங்.
நாயகனான விஷ்ணு மன்சு கதை, திரைக்கதையும் சேர்த்து எழுதியிருக்கிறார். திருச்சியைச்
சார்ந்த ப்ரீத்தி நாயகியாக நடித்திருக்கிறார்.
எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதே போல தொழில்நுட்ப குழுவும்.
வில்வித்தையில்
வீரனான் திண்ணனை அர்ஜூனின் அடுத்தப் பிறப்பு என்கிறார்கள். அதுவும் கற்பனை தான்.
தமிழ் மொழிமாற்றம்
சிறப்பாக இருக்கிறது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் ஓடிடிக்கு வரும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment