> குருத்து: இன்றைய அமெரிக்காவின் நிலை!

December 30, 2008

இன்றைய அமெரிக்காவின் நிலை!


இதுவரை 1 கோடியே 3 லட்சம் அமெரிக்கர்கள் வேலையை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறார்கள். நவம்பரில் மட்டும் 5 லட்சத்து 33 ஆயிரம் பேர்.

(டிசம்பர் 6ந்தேதி நிலவரப்படி)

America isn't working: jobless total rockets to a 34-year peak
• In one month, 533,000 people join unemployed
• Wall Street pins its hopes on more Fed intervention


“Yesterday's announcement brings the jobless total to 10.3 million people out of a workforce of 154.6 million”

from :

http://www.guardian.co.uk/business/2008/dec/06/usemployment-useconomy

ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தாலே பதட்டமாய் மாறும் அமெரிக்கனின் வாழ்வில் ஜனவரி 2008ல் துவங்கிய இந்த வேலை இழப்பு, தொடர்கதையாகி வருகிறது.

பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பொழுதே, தற்கொலைகள் அதிகமாய் நடக்கும் தேசம் அமெரிக்கா! இனி கண்ணீர் கதைகள் வந்து கொண்டேயிருக்கும்.

இப்படி பொருளாதார சுனாமியில் சிக்கித் தவிக்கிற மக்களை காப்பாற்றாமல், தனது தில்லுமுல்லுகளால் இந்த் சுனாமியை உருவாக்கிய முதலாளிகளை காப்பாற்ற துடிக்கிறது அமெரிக்க நாடாளுமன்றம். ஏனென்றால், செனட்டில் இருப்பவர்கள், மாகாண கவர்னர்களாய் அமர்ந்திருப்பவர்கள் பலர் முன்னாள் சூதாடிகள்.

தொடந்து வரும் கட்டுரையை படியுங்கள். உண்மை புரியும்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த ட்கட்டுரையின் 4-ம்பகுதி (பிற 3 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)

அமெரிக்க நாடாளுமன்றத்தின் வேசித்தனம்

இக்கேடுகெட்ட கிரிமினல்தனத்தையும், ஒட்டுண்ணித்தனமான சுரண்டலையும் தட்டிக் கேட்க
வக்கற்ற அமெரிக்க நாடாளுமன்றம், இந்த ஊதாரித்தனத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு இச்சமூக விரோதக் கும்பலிடம் கெஞ்சுகிறது. உலகத்தில் எந்த மூலையில் ""தவறு'' நடந்தாலும் சண்டப் பிரசண்டம் செய்யும் பெரியண்ணன் ஜார்ஜ் புஷ், இச்சூதாடிக் கும்பலிடம் மண்டியிட்டுக் கிடக்கும் மர்மம் என்ன?

அமெரிக்காவின் அதிபர், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டு அமெரிக்க ஆளும் கும்பலின் நுனி முதல் அடி வரையிலான அதிகார அங்கங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட் சூதாட்டக் கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு தான் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். தற்பொழுது நிதி மந்திரியாக இருக்கும் பால்சன், கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது, 1998 தொடங்கி 2006 முடியவுள்ள எட்டாண்டுகளில் குடியரசுக் கட்சிக்கு மட்டும் தனது சொந்தப் பணத்தில் இருந்து 3,36,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

பால்சன் கும்பல் தயாரித்த 70,000 கோடி அமெரிக்க டாலர் மானியத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஹிலாரி கிளிண்டனுக்கு 4,68,200 அமெரிக்க டாலர்; ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமாவிற்கு 6,91,930 அமெரிக்க டாலர்; குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 2,08,395 அமெரிக்க டாலர் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ""நன்கொடை'' கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

""வால்ஸ்ட்ரீட்'' சூதாடிகள் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம், நன்கொடை கொடுப்பது ஒருபுறமிருக்க, அவர்களே தேர்தலில் நின்று வென்று நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர், மேயர் பதவிகளைப் பிடித்து விடுகிறார்கள். அரசுப் பதவிகளை விலைக்கு வாங்குவதிலும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்தான் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன் முன்னாள் தலைவர் கோர்ஸைன் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் இருந்து செனட் சபைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, தற்பொழுது அம்மாநில ஆளுநராகவும் இருக்கிறார். அந்நிறுவனத்தின் தலைவர்களாகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃப்ரைடுமேன், ராபர்ட் ருபின், ஜோஸுவா போல்டன் உள்ளிட்ட பலர் கிளிண்டன், புஷ் நிர்வாகங்களில் அதிகாரமிக்க பசையுள்ள பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்களால், மக்களுக்காக... என நீட்டிமுழக்கப்படும் மக்களாட்சியின் தத்துவம், அதன் பிறப்பிடமான அமெரிக்காவில் சூதாடிகளால், சூதாடிகளுக்காக, சூதாடிகளின் ஆட்சியாகவே இருக்கிறது.

உண்மை இப்படியிருக்க, அமர்த்யா சென் போன்ற அறிஞர்கள் கூட பாராக் ஒபாமா ஆட்சியைப்
பிடித்தால், அமெரிக்க மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒபாமாவோ தனது ஆலோசகராக ராபர்ட் ருபினை வைத்துக் கொண்டிருக்கிறார்.
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ருபின், சப்பிரைம் லோன் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்த தளபதிகளுள் ஒருவர்; இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு இலாபமடைந்துள்ள ""சிட்டி குரூப்'' வங்கியின் தற்போதைய தலைவர். எனவே, அமர்த்யா சென் போன்ற அறிஞர்களின் ஜோசியம், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் முட்டாள்தனத்தைப் போன்றதுதான்!

• செல்வம்

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

1 பின்னூட்டங்கள்:

குருத்து said...

அடுத்த இரண்டாண்டுகளில் 30 லட்சம் வேலைகளை உருவாக்கும் திட்டத்தை பாரக் ஒபாமா செய்தாலும் கடந்த 2 ஆண்டுகளில் இழந் தவற்றை மீட்க முடியாது என்பதுதான் உண்மை.

- பத்த்ரிக்கையாளர் சாய்நாத் அவர்களுடைய கட்டுரையிலிருந்ந்து