> குருத்து: விநாயகர் வருகிறார்!

August 25, 2009

விநாயகர் வருகிறார்!


கொஞ்சம் கொஞ்சமாய்
பகுதிகளில் - சிறிதும் பெரிதுமாய்
பிள்ளையார்கள்
பெருகி கொண்டிருக்கிறார்கள்.

தொந்தியும் தொப்பையுமாய்
பிள்ளையாருக்கு தம்பியாய்
தூங்கி வழிந்தபடி
ஒரு காவலர் காவல் இருக்கிறார்.
பிள்ளையாருக்கு காவலா?
மக்களுக்கு காவலா?

பிள்ளையாரின் அமைதியான முகம்
ஆண்டுக்கொருமுறை - மெல்ல மெல்ல
ஆக்ரோஷமாய் மாறிக்கொண்டிருக்கிறது.













ஆண்டுக்கு
இரண்டு புதிய ஆயுதங்கள்
பிள்ளையார் கையில் அதிகரிக்கிறது.

பிள்ளையார் கொட்டகையில்
இரண்டு காவிக்கொடி
பறந்து கொண்டிருக்கிறது.

நேற்றிரவு - கனவில்
பிள்ளையாரின் ஆயுதங்களில்
ரத்தம் வழிந்தது.

எல்லா தெருக்களிலும்
வலம் வர இருக்கிறாராம்!
கவலையாய் இருக்கிறது.

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சோதனை