> குருத்து: கோவில்-நிலம்-சாதி - புத்தக அறிமுகம்!

January 12, 2011

கோவில்-நிலம்-சாதி - புத்தக அறிமுகம்!


முன்குறிப்பு : ஞாயிறு ஒரு மணி நேரம் சுற்றியதில், சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் ஒன்று இரண்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவு. நீங்களும் வாங்கியதை இப்படி அறிமுகப்படுத்துங்கள். இந்த புத்தகத்தைப் பற்றி படித்துவிட்டு பிறகு எழுதலாம் என உத்தேசம்.

*****


பின் அட்டையிலிருந்து....

கோவில்களைப் பக்தியின் இருப்பிடமாகப் பார்ப்பது தான் இயல்பாகதாக நம் பொதுமனதில் பதிந்து உள்ளது. கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாகவும், அரசர்களின் வணிகர்களின் சாதனைகளாகவும் மட்டுமே வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் வளமான நிலங்கள், இலட்கணக்கான ஏக்கர்கள் கோவில்களுக்கு உடமையாக இருந்தன என்பதையும், தமிழ்நாட்டுக் கிராமங்களின் நிர்வாகத்தைக் கோவில் சபைகளே நடத்தி வந்தன என்பதையும் பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

இவற்றின் அடிப்படையில் ஆராயும்போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர் தான் மொத்தத் தமிழ்ச் சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகின்றது. ஆகவே கோவிலுக்கும் நில உடைமைக்கும் அவற்றை நிர்வகித்த சாதிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்வதன் மூலம்தான் தமிழக வரலாற்றை விளக்க முடியும். அந்தப் பணியை இந்நூலின் மூலம் பொ. வேல்சாமி தொடங்கி வைத்துள்ளார்.

ஆசிரியர் : பொ. வேல்சாமி, (1951)

விலை : ரூ. 90 பக்கங்கள் : 135

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001.

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test