> குருத்து: ஒரு மரணம் - சில குறிப்புகள்

October 25, 2020

ஒரு மரணம் - சில குறிப்புகள்


தொன்னுறை தொட்ட
ஆலமரம் போல
நிறைய கிளைகள் விரித்து...
நிறைய பிள்ளைகள்,
நிறைய பேரப்பிள்ளைகள் என
முழுமையாய் வாழ்ந்த மனுசி அவள்.

பிள்ளைகளில் பலர்
நன்றாக படித்து
நல்ல பதவிகளில் இருக்கிறார்கள்.

காலையில் இருந்து
யார் வந்தாலும்
அரற்றிக்கொண்டே வருகிறார்கள்.
அந்த அறையில் இருக்கும்
பெண்கள் ஒவ்வொரு முறையும்
கண் கலங்குகிறார்கள்.
ஆண்கள் வெளியே அமர்ந்து
செய்தித்தாள்களை
படித்து கொண்டிருக்கிறார்கள்.

மேளக்காரர்கள்
சோகப்பாடல்களை
இசைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நோயில் வாடாமல்
மருத்துவமனையில் சிக்காமல்
சாவு கூட
அந்த மனுசியை
ஆசிர்வதித்து இருக்கிறது.

இந்த சாவு துக்கமல்ல!
எல்லா சொந்தங்களும்
மகிழ்வோடு
அந்த மனுசியை
அனுப்பியிருக்கவேண்டும்.

இழப்பு துயரம் தான்!
எல்லா இழப்புகளும்
துயரம் மட்டும் தானா?

0 பின்னூட்டங்கள்: