> குருத்து: ஆன்லைன் ரம்மியால் இதோ இன்னுமொரு (தற்)கொலை

June 8, 2022

ஆன்லைன் ரம்மியால் இதோ இன்னுமொரு (தற்)கொலை

 



மணலியைச் சேர்ந்த பவானி (வயது 29). கணவன், இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக‌ ரம்மி விளையாட ஆரம்பித்து தன் சகோதரிகளிடம் கடன் வாங்கி, மொத்தம் 20 லட்சம் வரை தொலைத்துள்ளார். குடும்ப உறவுகள் அறிவுரை கூற, இழந்த பணம் மன உளைச்சலை தர தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
 
கடந்த இரண்டு நாட்களாக எல்லா செய்தி தாள்களிலும் ஆன் லைன் ரம்மி விளையாடுங்கள் முழுப்பக்கத்தில் விளம்பரம் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன! காசு கொட்டுவதால், நிறைய விளம்பரம் தருகிறார்கள். பத்திரிக்கைகளும் உடன் சேர்ந்து கொண்டு கல்லா கட்டுகிறார்கள். இந்திய பிரபலங்களும், சினிமா பிரபலங்களுகும் ரம்மி விளம்பரங்களில் நடிக்கிறார்கள். "ரம்மி விளையாடதீர்கள்" என உள்ளூர் உயர் போலீசு அதிகாரிகள் கடைசிப் பக்கத்தில் மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.
 
இன்னும் எத்தனை மனிதர்களை காவு வாங்க காத்திருக்கிற்தோ! ஆன் லைன் ரம்மியை உடனே தடை செய்யவேண்டும். இந்த குரல் இந்தியா எங்கும் ஓங்கி ஒலித்திட வேண்டும்.

0 பின்னூட்டங்கள்: