> குருத்து: தீபாவளிக்கு 16895 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - செய்தியும் கேள்வியும்!

October 31, 2023

தீபாவளிக்கு 16895 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - செய்தியும் கேள்வியும்!


தினசரி சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன், 3167 சிறப்பு பேருந்துகளுடன் சேர்த்து 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 9467 பேருந்துகள் இயக்க இருக்கிறார்கள் என சொல்லிக்கொண்டே போகிறார்கள்.


கூடுதலாக இயக்குகிற பேருந்துகள் பண்டிகைகளுக்கு மட்டும் எங்கிருந்து திடீரென வானத்தில் இருந்து குதிக்கின்றன என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பேருந்து டிப்போவில் நிறுத்தி வைத்திருந்து, பண்டிகைகளுக்கு மட்டும் இயக்குவது என்பது சாத்தியமாகாது. வண்டி கெட்டுப்போகும்.

தனியார் பேருந்துகளை அதிகமாக்க வாய்ப்பில்லை. அவர்களும் அளவாகத்தான் வைத்து ஓட்டுவார்கள். கூடுதலாக வைத்திருக்கும் பேருந்துகளை ஆன்மீக சுற்றுலா, பிற சுற்றுலாவிற்கு அனுப்புவார்கள். அந்த பேருந்துகளின் ஆரோக்கியமும் பலவீனமாக தான் இருக்கும். சமீபத்தில் குன்னூர் மலையில் தொழில்நுட்ப பிரச்சனையால் ஒரு பேருந்து கீழே விழுந்தது, பலர் பலியானதை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள்.

வேலூர், பாண்டிச்சேரி என நான்கு, ஐந்து மணி நேரத்திற்குள் போய்ச்சேரும் பேருந்துகளை கூடுதலாக இன்னொரு பயணம் போய்வரச்செய்யலாம். ஆனால், திருச்சியைத் தாண்டி விட்டால், போக ஒருமுறை, வர ஒருமுறைக்கே 20 மணி நேரம் தாண்டிவிடும். சாத்தியமில்லை. நகர் பேருந்துகளை தூரமாய் ஓட்டுவதற்கு அனுப்புவதற்கும் வாய்ப்பில்லை. அந்த பேருந்துகளின் ஆரோக்கியம் நாம் அறிந்தததே!

ஆக, இந்த அறிவிப்பில் பாதி பொய் இருக்கிறது. இல்லையெனில் ஏதோ மேஜிக் செய்தால் மட்டுமே இத்தனை கூடுதலான பேருந்துகளை இயக்குவது சாத்தியம்.

நீங்கள் இதுப்பற்றி சிந்தித்து இருக்கிறீர்களா? அல்லது இது உண்மை தான் என்றால், அதற்கான விளக்கத்தை கொடுத்தால் நல்லது. இல்லையெனில் விக்கிரமாதித்தன் கதையில் வேதாளம் சொல்வது போல உண்மை தெரிந்தும் சொல்லாமல், அமைதியாக கடந்து சென்றால், உங்கள் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும். :)

0 பின்னூட்டங்கள்: