> குருத்து: சுட்டுப் பிடிக்க உத்தரவு (2019)

November 25, 2019

சுட்டுப் பிடிக்க உத்தரவு (2019)


கதை. காது கேட்காத, வாய் பேசமுடியாத குட்டிப் பொண்ணை காப்பாற்ற நிறைய பணம் தேவை.

அந்த குழந்தையின் அப்பா, இன்னும் மூவரை சேர்த்துக்கொண்டு, நகரின் மத்தியில் பரபரப்பான மாலில் உள்ள வங்கியை கொள்ளையடிக்கிறார்கள்.
போலீசுடன் மோதியதில் ஒருவன் சுட்டுகொல்லப்படுகிறான். தப்பிக்கும் பொழுது போலீசு, பொதுமக்கள் என சிலரை போட்டு தள்ளிவிடுகிறார்கள். மற்ற மூவரும் மக்கள் நெருக்கமாக வாழும் ஒரு காலனிக்குள் நுழைந்துவிடுகிறார்கள். போலீசு எல்லா வழிகளையும் சுற்றி வளைத்துவிடுகிறது.

குழந்தைக்கு என்ன ஆனது? மக்களுக்கு என்ன ஆனது? மூவரும் அங்கிருந்து தப்பித்தார்களா என்பதை பரபரப்பாக சொல்லி முடிக்கிறார்கள்.

****
மாலில் உள்ள வங்கியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? கமிசனரே களத்தில் இறங்கி சண்டையிடுவது, நால்வரில் ஒருவரிடம் மெசின் துப்பாக்கி வைத்திருப்பது என எல்லாவற்றிருக்கும் இறுதியில் பதில் சொல்லியிருப்பதால் பெருந்தன்மையாய் மன்னித்துவிட முடிகிறது.

'அதே கண்கள்' என ரவிச்சந்திரன் நடித்த ஈஸ்ட்மேன் வண்ணப்படம். படத்தின் துவக்கத்தில் இந்த படத்தின் முடிவை யாரிடமும் சொல்லாதீர்கள் என தயாரிப்பாளர் கெஞ்சுவார். அது இந்த படத்திற்கும் பொருந்தும். 🙂

இடைக்கதையில் ஒரு பயங்கரவாத குழு வந்து போகிறது. முசுலீம்கள் போல காட்டியிருக்கிறார். இயக்குநர் இன்னும் அப்டேட் ஆகவில்லை. பிரக்யாசிங், அசீமானந்தா போன்ற ஆட்களை போல காட்டியிருந்தால், இன்னும் எதார்த்தமாக இருந்திருக்கும்.

மற்றபடி மிஷ்கின், விக்ராந்த், அறிமுகம் இயக்குனர் சுசீந்திரன், குட்டிப்பெண் அசுவதி (?) எல்லோரும் நன்றாக பொருந்தியிருக்கிறார்கள்.
கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். படம் இன்னும் செழுமையாக வந்திருக்கும்.

0 பின்னூட்டங்கள்: