> குருத்து: The Last Samurai (2003)

November 25, 2019

The Last Samurai (2003)


கதை. செவ்விந்தியர்களை வேட்டையாடிய படையில் நாயகன் முக்கிய பங்கு வகிக்கிறான்.

ஆக்கிரமிப்பு படைகள் குழந்தைகளை எல்லாம் ஈவிரக்கமின்றி கொன்றதில், கடும் மன உளைச்சலுக்குள்ளாகிறான். நிம்மதியாக தூங்க முடியவில்லை. பெருங்குடிகாரனாகிறான்.

சாமுராய் வீரர்கள் ஜப்பான் மன்னனின் முதன்மை படை வீரர்கள். பேரரசு என்றால் ஒடுக்குவதற்கு நவீன படை வேண்டுமல்லவா! நிறைய துப்பாக்கிகள் வாங்குகிறான். பீரங்கிகள் வாங்குகிறான். நவீனம் வேண்டாம் என்கிறார்கள் சாமுராய்கள்.

ஒப்புக்கொள்ளாத சாமுராய் வீரர்களை பணிய வைக்க, ஜப்பான் படைகளுக்கு பயிற்சி தர நாயகன் பெருந்தொகை கொடுத்து வரவழைக்கப்படுகிறான்.

இன்னமும் ஜப்பான் படைகளுக்கு பயிற்சி தேவைப்படுகிற பொழுதே, நாயகனை சாமுராய் வீரர்களோடு மோத அனுப்புகிறார்கள்.
சாமுராய் வீரர்கள் துவம்சம் செய்துவிடுகிறார்கள். நாயகனை கொல்லாமல், அவர்களுடன் அழைத்து சென்றுவிடுகிறார்கள்.

நாயகனுக்கு என்ன ஆனது? ஜப்பான் மன்னன் சாமுராய் வீரர்களை என்ன செய்தான்? என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

****

எதிரே பீரங்கி. துளிகூட பயமில்லாமல் குதிரையில் சாமுராய்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி உணர்ச்சிமிக்கது.

மன அமைதியில்லாமல் இருக்கும் நாயகன், சாமுராய்களின் நிதானம், தியாகம், ஒரு ஒழுங்கான வாழ்க்கைமுறையை புரிந்துகொண்டு மனம் மாறுவதை இயல்பாக காட்டியிருக்கிறார்கள்.

கதை 19 ம் நூற்றாண்டில் நடக்கிறது. இதற்கு பிறகு சாமுராய்கள் வேறு வேறு வேலைக்கு மாறிவிட்டதாக சொல்கிறார்கள்.

படத்தில் நடித்த நாயகன் டாம் குரூஸ், சாமுராய் வீரர்களுக்கு தலைமை தாங்கியவர், அவருடைய தங்கை, சாமுராய் வீரர்களில் தளபதி என பலரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

எப்பொழுதும் ஒரு படத்தைப் பற்றி எழுதுகிற பொழுது, குறைந்தப்பட்ச திருப்தி இருக்கும். இந்த படம் பற்றி மிக குறைவாக எழுதியிருக்கிறேன் என உணர்வதால் அது இல்லை.

தமிழிலும் கிடைக்கிறது. பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: