பிஜேபி தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று பொதுவெளியில் விளம்பரம் செய்கிறது. ஆனால் உண்மை நிலையோ வேறு. பிஜேபி ஆட்சி செய்யும் அத்துனை மாநிலங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
September 7, 2022
கர்நாடகம் : கல்வித்துறையின் ஊழலில் திளைக்கும் பிஜேபி!
பிஜேபி தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று பொதுவெளியில் விளம்பரம் செய்கிறது. ஆனால் உண்மை நிலையோ வேறு. பிஜேபி ஆட்சி செய்யும் அத்துனை மாநிலங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
July 9, 2022
மோடி அரசு கேஸ் மானியத்தை நிறுத்தியதே விலை உயர்வுக்கு காரணம்! சிலிண்டர்களை கொண்டு சாலையை மறிப்போம்!
இப்பொழுது அரசு மானியம் தருவதை நிறுத்திவிட்டது என இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநர் இராம்குமார் 2021 அக்டோபர் மாதத்தில் ஊடகங்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.
****
ஒரு சிலிண்டரின் விலை ரூ. 1065.50
வீடுகளில் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் விலை வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் ரூ. 1068.50- என உயர்ந்திருக்கிறது. தில்லியில் ரூ. 1053க்கும், மும்பையில் ரூ. 1052.50க்கும் விற்கிறார்கள். கடந்த 14 மாதங்களில் 12முறை விலை ஏற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் நாம் தான் விரல்விட்டு எண்ணி நிறைய கவலைப்படுகிறோம். அவர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலையே இல்லை.
இப்படி கடுமையாக விலை ஏறியதன் விளைவாக தமிழகத்தின் கிராமப்புறங்களில் சிலிண்டர் வாங்க முடியாமல், மீண்டும் மரபு வழி எரிபொருளான விறகு, மாட்டுச்சாணத்தால் செய்யப்படும் எருவாட்டி என பயன்படுத்த துவங்கிவிட்டார்கள் என ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் இறக்கிறார்கள்
கடந்த காலங்களில் விறகு, எருவாட்டி, மண்ணெண்ணெய், மரம் அறுக்கும் தூள் என அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை எரிபொருளாக கொண்டு, சமைத்துவந்தார்கள். இப்படி சமையல் செய்வதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் வெளியேறும் புகை கார்பன் உமிழ்வை அதிகம் உண்டாக்குகிறது. இது சுற்றுப்புற சூழலை கடுமையாக மாசுப்படுத்துகிறது. இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் தான் சமைப்பதால், புகை மண்டலத்தால் நிறைய சுவாச நோய்கள் உண்டாகின்றன. சமைப்பதில் எழும் புகை ஒரு மணி நேரத்துக்கு 400 சிகரெட்டுகள் புகைப்பதற்கு இணையானது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்படி கரும்புகையோடு மல்லுக்கட்டி சமைப்பதால், ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் சுவாச நோய்களால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மரணங்களில் பெரும்பாலானவை, இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய் காரணமாக ஏற்படுபவை. சமையல் எரிவாயு என்பது மற்ற எல்லாவற்றையும் விட தூய்மையான எரிபொருள் என்கிறார்கள்.
மோடியின் உஜ்வாலா திட்டம் பல்லிளித்துவிட்டது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, ஏழைப் பெண்கள் சமைப்பதை எளிதாக்க, சுவாச நோய்களிலிந்து தப்பிக்க என உஜ்வாலா (ஒளி) என்ற திட்டத்தை 2016ல் பந்தாவாக துவங்கினார்கள். இந்த திட்டம் துவங்கப்பட்டு, சமையல் எரிவாய் பதிவு கட்டணம் இல்லாமல் இணைப்பு வழங்கினார்கள். தொடங்கியதிலிருந்து இன்றைக்கு வரை இந்த திட்டத்தில் 9 கோடி இணைப்புகள் வழங்கியுள்ளதாக சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இவ்வளவு விலை உயர்ந்துவிட்டதே! பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் வளர்ந்து நிற்கும் தமிழ்நாட்டிலேயே மக்கள் மாற்று எரிபொருளை தேட ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற மாநிலங்களின் நிலை என்னவென்று சமூக ஆர்வலர் சந்திரசேகர் உஜ்வாலா திட்டத்தின் தற்போதைய நிலை என்னவென்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு வந்த பதில். 2021 – 22 நிதியாண்டில் மட்டும் இத்திட்டத்தில் இருந்த 90 லட்சம் பயனாளிகள் தங்களுக்கு வழங்கிய சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்த பிறகு, மீண்டும் வாங்கவில்லை. குறிப்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் 65 லட்சம் சிலிண்டர்கள் வாங்கவில்லை. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் 9 லட்சம் பேர் வாங்கவில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் 16 லட்சம் பேர் வாங்கவில்லை. ஆக ஒரு ஆண்டிலேயே 90 லட்சம் பேர் வாங்கவில்லை. வாங்குவதற்கு பணமில்லை என்பதே எதார்த்த நிலைமை. உஜ்வாலா திட்டத்தின் வழங்கப்பட்ட பெரும்பாலான சிலிண்டர்கள் வீட்டில் காட்சிப்பொருளாக மாறிவிட்டன.
எரிவாயுக்கான மானியத்தை அரசு நிறுத்திவிட்டது
இவ்வளவு விலை உயர்வுக்கு என்ன காரணம். முதலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என எரிபொருளுக்கு அரசு விலை நிர்ணயம் செய்வதை தன் வசம் வைத்திருந்தது. அப்பொழுது விலை கட்டுக்குள் இருந்தது. இப்படி கட்டுக்குள் வைத்திருந்ததின் மூலம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நிறைய மானியம் கொடுத்துக்கொண்டிருந்தது. ”மக்களுக்கு மானியம் தராதே” என ஏகாதிப்பத்தியங்களும், தங்களால் ”தொழில்” செய்யமுடியவில்லை என கார்ப்பரேட்டுகளும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் ஆட்சி தானே நடக்கிறது. ஆகையால், சில ஆண்டுகளுக்கு முன்பு விலை தீர்மானிப்பதை ஆயில் நிறுவனங்களிடமே விட்டுவிட்டார்கள்.
மொத்தமாய் மானியம் தராமல் கைவிட்டுவிட்டால், மக்கள் கொந்தளிப்பார்களே என யோசித்த அரசு, நைச்சியமாய் சமையல் எரிவாயு இணைப்புடன் வங்கி, ஆதாரை இணையுங்கள். மானியத்தை வங்கிக்கணக்கில் தந்துவிடுகிறோம் என்றார்கள். பணமும் போட்டார்கள். 2018ல் அதிகப்பட்சமாக ரூ. 465 வங்கியில் மான்யமாக வரவு வைத்தார்கள். (பார்க்க படம்). கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2021ல் ரூ. 25 மட்டுமே பெயரளவில் வரவு வைக்கிறார்கள். இன்று வரைக்கும் ரூ. 25 யாக தொடர்கிறது.
இன்னொரு வாக்குமூலம் சொல்லவேண்டுமென்றால்… “இந்தியாவில் 90% பேர் சிலிண்டர் பயன்படுத்துகிறார்கள். இதில் இந்தியா 50% எரிபொருளை இறக்குமதி செய்கிறது. உலக சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியா மானியம் வழங்கிவந்தது. இப்பொழுது மானியம் தருவதை நிறுத்திவிட்டது என இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநர் இராம்குமார் 2021 அக்டோபர் மாதத்தில் ஊடகங்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.
காலி சிலிண்டர்களை கொண்டு சாலைகளை மறிப்போம்
உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு தருகிறோம் என சொன்னதின் மூலம், அரசு ரேசன் கடைகளின் மூலமாக தந்த மண்ணெண்ணெய்யும் நிறுத்திவிட்டார்கள். ஆக, பழைய நிலைமையை விட மோசமான நிலைக்கு வந்து நிற்கிறோம்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கூடிக்கொண்டே போவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாமே கணிசமாக உயர்ந்திருக்கிறது. சிலிண்டர் விலை குறித்து மக்களிடம் பேசும் பொழுது, குமுறுகிறார்கள். ஒன்றிய ஆட்சியாளர்களை திட்டித்தீர்க்கிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.
ஆக, பழைய மரபு வழி சமையலுக்கு திரும்புவதால், முன்பு வருடத்திற்கு ஐந்து லட்சம் பெண்கள் செத்துப்போனோம். உச்சத்தில் இருக்கும் இன்றைய விலையால் சாவு எண்ணிக்கை மேலும் சில லட்சங்கள் நிச்சயம் உயரத்தான்போகிறது. ”இனிமேல் மூன்று வேளை சாப்பிட முடியாது. இரண்டு வேளை தான் சாப்பிடமுடியும்” என தொலைக்காட்சியில் ஒரு அம்மா மனம் உடைந்து பேசினார்.
ஏன் இவ்வளவு மனம் உடையவேண்டும். ஏன் இத்தனை லட்சம் பேர் சாகவேண்டும். இந்த நாட்டை மலிவு விலையில் வாங்கி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகளையும், அவர்களுக்கு பாதந்தாங்கிகளாக இருக்கும் காவி ஆட்சியாளர்களையும் பணிய வைக்க, வீட்டில் காட்சிப்பொருளாய் இருக்கும் சிவப்பு காலி சிலிண்டர்களை எல்லாம் தூக்கி வந்து சாலையை மறிப்போம். சாலைகள் சிவப்பாகும். எதிரிகளை கதறவிடலாம். நம் பிரச்சனையையும் எளிதாய் தீர்த்துவிடலாம்.
July 7, 2022
ஓலா ஓட்டுநரால் கணிப்பொறியாளர் கொலை! மக்களையும் ஓட்டுநர்களையும் சுரண்டுகிறார்கள் கார்ப்பரேட்டுகள்! மக்களை மோதவிட்டு அரசு வேடிக்கைப் பார்க்கிறது!
பயணத்தை பதட்டமாகவும், சிக்கலாக்கியும் வைத்திருப்பது ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், இதை முறைப்படுத்த தவறிய ஒன்றிய அரசும் தான் காரணம்.
*****
கணிப்பொறியாளர் கொலை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி அருகே கன்னிம்பாக்கம் கிராமம். கணிப்பொறியாளர் உமேந்தர் கோயமுத்தூரில் வேலை செய்கிறார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சென்னையில் தன் சொந்த வீட்டுக்கு வருவது வழக்கம். ஞாயிறன்று தன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன், மனைவியின் தங்கை, தங்கையின் இரண்டு குழந்தைகளுடன் மொத்தம் ஏழு பேர் மாலுக்கு சென்றுள்ளனர்.
கிளம்பும்பொழுது, மனைவியின் தங்கை ஓலாவில் இன்னோவா கார் பதிவு செய்திருக்கிறார். காரும் வந்திருக்கிறது. எல்லோரும் ஏறி அமர்ந்ததும், ஓலா ஓட்டுநர் ஓடிபி கேட்டிருக்கிறார். தன் மனைவியின் தங்கை செல்போனில் பதிவு செய்ததை மறந்து, தன் செல்லில் தேடியவர். வரவில்லை என சொல்லியிருக்கிறார். “வரவில்லை என்றால் கீழே இறங்குங்கள்” என ஓட்டுநர் தெரிவித்திருக்கிறார்.
கீழே இறங்கிய பயணி, கோபத்தில் காரின் கதவை வேகத்துடன் சாத்தியிருக்கிறார். “எப்படி என் காரின் கதவை வேகமாக சாத்தலாம்?” என சண்டை தீவிரமாகியிருக்கிறது. இருவரும் கைகலப்பில் ஈடுபட்டு, பயணி கீழே விழுந்ததில் அவருக்கு அடிபட, மருத்துவமனைக்கு கொண்டு போய் சோதிக்கும் பொழுது ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இப்பொழுது ஓலா ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
டீசல், பெட்ரோல் விலை ஏற்றம்
அலுவலகத்தில் சக ஊழியருடன் பேசும் பொழுது, மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என பொதுவாக சொன்னார். உண்மை நிலவரத்தை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும். கொரானா அலைகளில் ஊரடங்கின் பொழுது கார்களை ஓட்டமுடியாமல், கடனுக்கு எடுத்த காருக்கு மாதாந்திர கடன் (Due) கட்ட முடியாமல், ஓட்டுநர்கள் மேலும் கடன் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்டினார்கள்.
ஊரடங்கிற்கு பிறகாவது நிலைமையை சமாளிக்கலாம் என நினைக்கும் பொழுது, வரலாறு காணாத விலையில் ஒன்றிய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றிக்கொண்டே வந்தது. கடந்த எட்டு ஆண்டுகளில் 26 லட்சம் கோடி ஒன்றிய அரசு, பெட்ரோல், டீசல், எரிவாயு பொருட்களில் மட்டும் வரிகளை ஏற்றி மக்களை கொள்ளையடித்திருக்கிறது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு தொழில்ரீதியாக கார் ஓட்டுபவர்களை கடுமையாக பாதித்தது.
ஓலா, ஊபர் கார்ப்பரேட்டுகள் அராஜகம்
இந்தியாவில் ஓட்டுநர்கள் ஒருங்கிணைந்த முறையில் ஒன்றிணைக்கப்படாததால், கார் ஓட்டுநர்களும், பயணம் செய்பவர்களும் தொடர்பு கொள்வதில், விலையை தீர்மானப்பதில் என நிறைய சிரமங்களை எதிர்கொண்டார்கள். இருவரையும் ஒருங்கிணைத்தால், நன்றாக சம்பாதிக்கலாம் என ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் முடிவு செய்தன. துவக்கத்தில் ஜீரோ கமிசன் என பெரும்பாலான கார் ஓட்டுநர்களை ஒன்றிணைத்தார்கள்.பிறகு 5% கமிஷன் என பிடிக்கத் துவங்கினார்கள். இப்பொழுது அதிகபட்சமாக ரூ. 1000க்கு ரூ 350 வரை கமிசனாக பிடித்துக்கொள்கிறார்கள். அதாவது 35% சதவிகிதம் வரை கமிஷன் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள்.. இந்த கமிசனுக்கு பயந்துகொண்டு தான், ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் பதிவு செய்த பயணத்தை ரத்து செய்யுங்கள், “எங்களிடம் பணமாக கொடுங்கள்” என பயணிகளை கேட்டுக்கொள்கிறார்கள். இப்படி பல ஓட்டுநர்கள் கோருவதை சமூக வலைத்தளங்களில் பலர் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
பயணிகளிடமும் கொள்ளை
ஓட்டுநர்களிடம் அதிகப்பட்சம் 35% கமிஷன் என்ற பெயரில் சுரண்டுபவர்கள் பயணிகளையும் விட்டுவைக்கவில்லை. ஓலா, ஊபர் நிறுவனங்கள் விதவிதமான வழிகளில் வசூல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். காலை, மாலை நேரங்களில் டிராபிக் அதிகம் உள்ள (Peak Hours) நேரங்களில் வழக்கமான கட்டணத்தை விட அதிகப்பட்சம் 5 மடங்கு வரை வசூலிக்கிறார்கள். பயணத்தை ரத்து செய்தால் ஒரு கட்டணம்.பாதியில் இறங்கினால் அதற்கொரு கட்டணம். இப்படி விதவிதமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள்.
ஒன்றிய அரசு தலையீடு
தொடர்ந்து புகார்கள் வருவதால், இப்பொழுது ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் வசூலிப்பதில் புதிய நடைமுறையை கொண்டுவர பரிசீலனையில் இருப்பதாக சொல்கிறார்கள். காலை, மாலை என டிராபிக் நெருக்கடி உள்ள சமயங்களில் 2 மடங்கு மட்டுமே வசூலிக்கவேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு ஓட்டுநர் புக் செய்யும் பயணங்களில் 10% மட்டுமே (பீக் அவர்) வசூலிக்கமுடியும். இப்படி இன்னும் எத்தனை கொலைகளுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவார்கள்?
மக்களுக்குள் மோதவிடுகிறார்கள்
சமீபத்தில் அண்ணா ஆர்ச் அருகே ஐம்பது வயது ஷேர் ஆட்டோ ஓட்டுநரும், 20 வயதுள்ள மருத்துவ கல்லூரி மாணவியும் சத்தமாகவும், மரியாதை இல்லாமல் தாக்கி பேசிக்கொண்டார்கள். சமாதானப்படுத்தி இருவரையும் அனுப்பிய பிறகு, எதனால் சண்டை என விசாரித்தால், ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு இதுவரை 15ரூ வாங்கிக்கொண்டிருந்தவர், விலை உயர்வை காரணம் சொல்லி கூடுதலாக ரூ5 கேட்டிருக்கிறார். அதை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தான் காரணம்.
இப்படி தினந்தோறும் மக்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் தகராறு நடந்துகொண்டே இருக்கிறது. அந்த சண்டை முற்றிப்போய், இப்பொழுது கொலை வரைக்கும் போயிருக்கிறது.
தினந்தோறும் மக்கள் பயணங்களை மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட பயணத்தை பதட்டமாகவும், சிக்கலாக்கியும் வைத்திருப்பது ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், இதை முறைப்படுத்த தவறிய ஒன்றிய அரசும் தான் காரணம்.
மக்களும் ஓட்டுநர்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து சண்டையிடவேண்டியவர்கள் ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட்டு நிறுவனங்களையும், ஒன்றிய அரசை எதிர்த்தும் தான்.
'வெற்றிகரமாக' ஆறாவது ஆண்டில் ஜி.எஸ்.டி! பரிசாக ! மக்கள் வாங்கும் மோர், தயிர்க்கு எல்லாம் வரி!
“ஒரு தேசம். ஒரு வரி” என பந்தாவாக முழங்கி, ஜி.எஸ்.டி வரிமுறையை துவங்கினார்கள். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. அரசு அதை கொண்டாடும் விதத்தில் 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சண்டிகாரில் கூடி, பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு புதிதாக வரியும், சில முக்கிய பொருட்களுக்கு கூடுதல் வரியும் போட்டிருக்கிறார்கள்.
பம்புசெட்க்கு 12% வரியிலிருந்து, 18%ஆக உயர்த்தியிருக்கிறார்கள். வரி உயர்ந்ததின் விளைவாக பம்புசெட்டின் திறனுக்கேற்ப ஏழு ஆயிரத்திற்கு மேலே விலை உயரும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இதனை கணிசமாக உற்பத்தி செய்யும் கோயமுத்தூர் உற்பத்தியாளர்கள், ‘குறைந்த விலையில் மூலப்பொருட்கள் குஜராத்தில் கிடைப்பதால் அவர்களோடு ஏற்கனவே விலையில் போட்டி போடமுடியவில்லை. அதனால் விலையைக் குறையுங்கள் என அரசுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தான் வரியை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் ‘ என்கிறார்கள்.
Fingertip. (2022) - சீசன் 2
அம்மாவும், அப்பாவும் சென்னையில் வாழ்கிறார்கள். வீடு மொத்தமும் சிசிடிவி பொருத்தப்பட்டு அமெரிக்காவில் வாழும் மகன் கண்காணிக்கிறார். இத்தனை ”டிஜிட்டல் பாதுகாப்பு” இருந்தும், பெற்றோர்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். கொலை செய்யும் பொழுது வீடியோ எடுக்கிறார்கள். ஏன்?
திரைப்படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை. அவள் படிக்கிற காலத்தில் அவள் மூக்கை தோழி ஒருத்தி கிண்டல் செய்ய, அவள் மனதில் வடுவாகப் பதிந்துவிடுகிறது. அந்த எண்ணம் நாளாக நாளாக வளர்ந்து… தன் மூக்கு லேசாக கோணலாகத்தான் இருக்கிறது என ”ஆழமாய்” நம்புகிறாள். தன் மூக்கை வெறுக்க துவங்குகிறாள். இதற்காக ஒரு சிகிச்சையில் ஈடுபட, முகத்தின் அமைப்பு வேறு மாதிரியாகிறது.
April 26, 2022
இராணுவச் செலவினத்தில் இந்தியா மூன்றாம் இடம்! ஏகாதிபத்திய ரசியாவே ஐந்தாம் இடம் தான்!
இராணுவச் செலவினத்தில் இந்தியா மூன்றாம் இடம்! ஏகாதிபத்திய ரசியாவே ஐந்தாம் இடம் தான்!
ஒருபக்கம் கல்வி, மருத்துவம், உணவு என அடிப்படையானவைகளுக்கு எல்லாம் மான்யங்களை வெட்டுகிற இவர்கள்தான், இராணுவம் போன்ற செலவினங்களுக்கு தாராளமாய் செலவழிக்கிறார்கள்.
****
இராணுவத்திற்கான செலவுகள் செய்வதில் அமெரிக்கா முதலிடம். சீனா இரண்டாமிடம். மூன்றாமிடத்தில் இந்தியா என சர்வதேச அமைதி ஆய்வுமையம் அறிவித்துள்ளது. கொரானா தொற்றிய நாடு, லட்சக்கணக்கான மக்களை பறிகொடுத்து கலகலத்த நாடுகள் என உலகம் நினைத்துகொண்டிருக்கிறது.
அமெரிக்கா ஒரு உலக ரவுடி. தன் கெத்துக்கு செலவு செய்யலைன்னா அழிஞ்சுபோவான். சீனா வளர்ந்துவரும் ரவுடி. அவன் உலகத்துக்கே பொருட்களை ஏற்றுமதி செய்றான். செலவழிக்கிறான்.
இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் நிறைந்திருக்கிறார்கள். ”ஒழுங்கான சாப்பாடு இல்லை, அடிப்படை வசதி இல்லை” என கறார் விதிகளை எல்லாம் தூரப்போட்டு, காணொளியில் எல்லையிலிருந்து கதறுவது வைரலாகிறது. ”குளிரில் விறைத்துப்போய் நிற்கும் எல்லையோர இராணுவத்தினரை நினைத்துப் பாருங்கள்!” என அடிக்கடி சங்கிகள் கண்ணீர் வடிப்பார்களே! அவர்களின் வாழ்வை எல்லாம் உயர்த்திவிட்டார்களா? என நினைத்தீர்கள் என்றால் நாமெல்லாம் அப்பாவி!
சில அமெரிக்க பத்திரிக்கைகள், சில இந்திய பத்திரிக்கைகள் அவ்வப்பொழுது இந்திய இராணுவத்தின் ஏவுகணைகள், போர்விமானங்களின் நிலையை பக்கத்தில் இருக்கும் சீனாவுடனும், பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு, ஒப்பிட்டு உசுப்பேற்றுகிறார்கள். இராணுவ கொள்முதலில் நன்றாக காசு பார்க்கலாம் என முடிவு செய்து, ஏகாதிப்பத்திய ஆயத உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, கார்ப்பரேட்டுகளையும் கூட்டு சேர்ந்துகொண்டு, வகை தொகையில்லாமல் களவாடுகிறார்கள்.
மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி எட்டு ஆண்டுகளில் பக்கத்து பக்கத்து நாடுகளில் எல்லாம் வம்பிழுத்து நல்லா இருந்த உறவை கூட கெடுத்துதான் வைத்திருக்கிறார்கள்.
ஒருபக்கம் கல்வி, மருத்துவம், உணவு என அடிப்படையானவைகளுக்கு எல்லாம் மான்யங்களை வெட்டுகிற இவர்கள்தான், இராணுவம் போன்ற செலவினங்களுக்கு தாராளமாய் செலவழிக்கிறார்கள். நேரடியாக பாதிக்கப்படும் நாம் தாம் விழிப்புணர்வுடன் இருந்து கேள்வி கேட்கவேண்டும். தொடர்ந்து கேட்போம்.













