> குருத்து: தில்லை இந்துத்துவம்
Showing posts with label தில்லை இந்துத்துவம். Show all posts
Showing posts with label தில்லை இந்துத்துவம். Show all posts

April 10, 2012

பெண்ணுரிமைப் போராளி!


"மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர் " என்று ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் படித்த ஞாபகம் எனக்கு.

தேவதாசி முறை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை (இசை வேளார்கள்) கோவிலுக்கு நேர்ந்து, பொட்டுக்கட்டும் முறையாகும். அதாவது இச்சமூகப் பெண்களை ஒரு குறிப்பிட்ட வயதில் கோயிலுக்கு நேர்ந்து விடுவதால், இவர்கள் தேவர்களுக்கு அடியார் (தேவரடியார். அதாவது பெரியாரைப் போல் பச்சையாகச் சொல்வதென்றால் 'இறைவனின் வைப்பாட்டி'கள் (தேவதாசி), இப்பெண்கள் கடவுளின் பெயரால் கோவில் சார்ந்த பூசாரிகள் மற்றும் அந்தந்த ஊர் சார்ந்த பணக்கார ஆண்களுக்கு ஆசைநாயகியாக வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டவர்கள். இப்பெண்கள் திருமணம் செய்து கணவரோடு வாழும் உரிமை மறுக்கபப்ட்டவர்கள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும் ஆரம்பத்தில் தேவதாசியாக ஆக்கப்பட்டவர் தான்.

தோழர் ஜீவசுந்தரியின் தேடுதலிலும், கடும் முயற்சியாலும் உருவான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வரலாற்றைக் கூறும் இந்த நூல் அம்மையாரைப் பற்றி பல அரிய தகவல்களைத் தரும் அற்புத தகவல் களஞ்சியம் என்றால் அது மிகையல்ல.

பெரியார் நடத்திய சுயமரியாதை திருமணங்களுக்கும் முன்னோடியாக ராமாமிர்தம் ‍- சுயம்புபிள்ளை திருமணம் கோவிலில் நெய் விளக்கேற்றி சத்தியம் செய்ததோடு மிக எளிமையாக நடந்தேறி இருக்கிறது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தனது பெயரை ஆ. இராமமிர்தம் என தனது வளர்ப்புத்தாயின் (ஆச்சிக்கண்ணு) முதல் எழுத்தையே பயன்படுத்தி உள்ளார்.

1938ல் நடைபெற்ற இந்தி திணிப்பு போராட்டத்தில் திருச்சி உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள் 577 மைல்கள் நட்ந்தே சென்றுள்ளார். பயணத்தின் பொழுது 87 பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

இந்துமத மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தேவதாசி முறைக்கு எதிராக நடகம் நடத்தி வந்தார் மூவலூர் அம்மையார். இந்துமத வெறியர்கள் நாடக மேடை ஏறி அவரது கூந்தலை அறுத்து எறிந்தனர். இதற்கெல்லாம் அஞ்சாத அம்மையார் தன் பிறகு தனது கொள்கைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினாரே தவிர நிறுத்தவில்லை. இந்து சனாதனிகளுக்குப் பதில் சொல்லும்விதமாக தன் இறுதிக்காலம் வரை தனது முடியை கிராப் செய்தே வாழ்ந்திருக்கிறார்.

தோழர்கள் குஞ்சிதம் ‍ குருசாமி, சிவகாமி சிதம்பரனார் உட்பட 80க்க்கும் மேற்பட்ட சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.

'தேவதாசி ஒழிப்புச் சட்டம்' கொண்டு வர போராடிய டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் அளவிற்கு மூவலூர் அம்மையார் பெயர் பதிவாகவில்லை என்கிற தோழர் ஜீவசுந்தரியின் ஆதங்கம் நியாயமானதே.

மூவலூர் அம்மையார் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் கவுரவ மாஜிஸ்ட்ரேட்டாக பணியாற்றியுள்ளார்.

மூவலூர் அம்மையார் ஆதரவற்ற பெண்களை எங்கு பார்த்தாலும் வீட்டிற்கு அழைத்துவந்துவிடுவாராம். அதன்பின் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைப்பதையும், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதையும் ஒரு நிரந்தர கடமையாகவே செய்து வந்துள்ளார்.

1956ம் ஆண்டு திமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை இயக்க்திற்குப் பாடுபட்ட பெண்ணுரிமைப் போராளி மூவலூர் அம்மையாருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

அது மட்டுமல்ல.. தன் வாழ்நாளில் யாரிடமும் சிபாரிசுக்குச் செல்லாத அண்ணா அவர்கள், அம்மையாரின் பேரனுக்காக சிதம்பரம் பல்கலைத் துணைவேந்தரிடம் சிபாரிசு செய்துள்ளார்.

1936ல் 'தாசிகள் மோசவலை' அல்லது 'மதி பெற்ற மைனர்' என்ற நாவலையும், அறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு வார இதழில் 1945ஆம் ஆண்டு 'தமயந்தி' என்ற தொடர்கதையையும் எழுதியுள்ளார்.

தோழர் ஜீவசுந்தரியின் படைப்பைப் படிக்கும் பொழுது அவரது முயற்சியும், உழைப்பும் நூல் முழுமையிலும் தெரிகிறது. இந்த நூல் படிப்பதற்கு எளிமையாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. இந்த அற்புத நாவலைப் படைத்த தோழர் ஜீவசுந்தரிக்கு வாழ்த்துக்கள்!

மூவலூர் அம்மையாரின் வாழ்க்கையை சொல்லும் இந்த நூல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கோ அல்லது கல்லூரி மாணவர்களுக்கோ பாடப்புத்தகமாக அமைவதற்கு முழுத்தகுதி பெற்றிருக்கிறது.

‍- தோழர் பொற்கொடி
தோழமை மார்ச் 2012 இதழிலிருந்து...

பக்கம் : 192
விலை ரூ. 120

வெளியீடு :

அரிவை
(பெண்களுக்கான நூல் வெளியீடுகள்)
27, பாரதி முதல் குறுக்குத்தெரு,
செல்லியம்மன் நகர், அம்பத்தூர்,
சென்னை ‍ 58

பேச : 97899 13810

February 20, 2009

இன்று தில்லையில் பேரணி! பொதுக்கூட்டம்!



தீட்சிதர் ஆதிக்கம் தகர்த்தோம்!
தில்லை கோயிலை மீட்டோம்!


தமிழக அரசே!

* அரசாணைப் பிறப்பித்து தில்லைக் கோயிலை அறநிலையத் துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வா!

* நகை களவு, நிதி கையாடல், கோயில் நில விற்பனை, கொலை முதலான குற்றங்கள் புரிந்த தீட்சிதர்களை கைது செய்!

* நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்திருக்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறி!

****

பேரணி


நாள் : 21.02.2009 சனிக்கிழமை மாலை 4 மணி

துவங்கும் இடம்

இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி

இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்

தலைமை

வ‌ழ‌க்குரைஞர். சி.ராஜு,
மாநில‌ ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

முன்னிலை

சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,
குமுடிமூலை.


சிற‌ப்புரை


தோழ‌ர் ம‌ருதைய‌ன்
பொதுச்செய‌லாளர்,
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.

பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.


மற்றும்

பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும்
பேசுகிறார்கள்.

புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி


ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் மையக்குழுவின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்..

ப‌ங்கேற்போர்:

ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி
பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி
மற்றும் சில அமைப்புகள்

நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு:

மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்
க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.

மூன்று கோரிக்கைகளோடு இந்த பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

1. தற்பொழுது போடப்பட்டிருக்கும் அறநிலையத்துறை உத்தரவின் படி கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு தீட்சிதரின் எடுபிடி என்ற அளவுக்கு தான் அதிகாரம் உள்ளது. இந்நிலை மாற தனிச்சிறப்பான அரசாணை மூலம் இக்கோவிலை அறநிலையத்துறை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் தீட்சிதர்கள் அர்ச்சகர் என்ற நிலைக்கு கட்டுப்படுத்தப்படுவர்.

2. தீட்சிதர்கள் மேல் நகைக்களவு, மோசடியான நிதி நிர்வாகம் (ஆண்டுக்கு மொத்த வருமானமே ரூ. 37,199 தானாம்), இன்னபிற குற்றச்சாட்டுகளை இந்து அறநிலையத்துறை விசாரிக்காமல் வைத்திருக்கிறது.

இது தவிர கோவிலில் நடந்த கொலை மற்றும் பல கிரிமினல் குற்றங்களை காவல்துறை பதிய மறுத்து, ம.உ.பா.மையம் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

இது தவிர அரசு இப்பொழுது தான் கோவிலின் சொத்து விவரங்களை திரட்டி கொண்டிருக்கிறது. பக்தர்கள் தானமாக கொடுத்துள்ள நிலம் மற்றும் வீடுகளை விற்று தீட்சிதர்கள் ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

இப்படி தீட்சிதர்கள் மீதுள்ள எல்லா குற்ற வழக்குகளுக்காக கைது செய்து, விசாரிக்கப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

3. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் எழுப்பப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர் உடனே இடிக்கப்பட வேண்டும்.

ஆகையால், இந்த பேரணி, பொதுக்கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி, பலரும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

February 18, 2009

தில்லையில் பேரணி! பொதுக்கூட்டம்!


அன்பார்ந்த பதிவர்களே! வாசகர்களே!

தில்லையில் (சிதம்பரத்தில்) வருகிற 21.02.2009 – சனிக்கிழமையன்று மாலை பேரணியும், அதைத் தொடர்ந்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றையும் மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் சகோதர அமைப்புகளும், மற்றும் சில அமைப்புகளும் இணைந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் உரிமையோடு அழைக்கிறோம்.

எதற்காக இந்த பேரணியும்,பொதுக்கூட்டமும்?

தில்லை நிகழ்வுகளை தொடர்ச்சியாய் பலர் கவனித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த போராட்டத்தின் அர்த்தமும் , தேவையும் நிச்சயமாய் விளங்கும்.

புதியவர்களுக்காக – ஒரு சிறு அறிமுகம்

இதுவரை

உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் கோவிலில், நடராசருக்கு எதிரே உள்ள சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடக்கூடது. காரணம் – தமிழ் தீட்டு மொழி என அந்த கோவிலை நிர்வகிக்கிற தீட்சிதர்கள் பல ஆண்டு காலம் மறுத்துவருகின்றனர்.

70 வயது முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமிக்கு தன் வாழ்நாள் லட்சியம் நடராசர் முன்பு
மனமுருகி தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என்பது. பாட சென்றால், தீட்சிதர்கள் அந்த பெரியவரை கையை முறித்து, வெளியே தூக்கிப்போட்டனர்.

முறையிட காவல் நிலையம் போனார். வழக்கு பதிய மறுத்தனர். தமிழால் வயிறு வளர்க்கும் ஆதினங்கள், மடங்கள் என போய் முறையிட்டார். முகம் திருப்பிக் கொண்டனர். எல்லா ஆத்திகர்களும் கைவிட்ட பிறகு, நாத்திகர்களான கம்யூனிஸ்டுகளை மனித உரிமை பாதுகாப்பு மையம் வந்து முறையிட்டார்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் களத்தில் குதித்த கதை

இந்த வழக்கு மனித உரிமை மீறல் மட்டும் இல்லை, தீட்சிதர்களின் சாதித்திமிர் கொண்டதாக, மொழித்தீண்டாமை கொண்டதாக இருந்தது.

இது குறித்து, இந்து அறநிலையத்துறைக்கு பல புகார்கள் அனுப்பியும், எந்த பதிலுமில்லை.

இதன் வரலாறு தேடிப்பார்த்தால்...

1987ல் அதிமுக ஆட்சியில் தில்லைக் கோவிலில் நடைபெற்ற தீட்சிதர்களின் முறைகேடுகள், திருட்டுகள் பற்றி தீட்சிதர்களின் ஒரு பிரிவினரே அரசுக்கு புகார் தெரிவித்த அடிப்படையில், அரசு ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தது.

தீட்சிதர்கள் “இந்து மதத்தில் தனி வகையறா” என தடை வாங்கினர்.

மீண்டும், பல ஆண்டுகளுக்கு பிறகு 1987ல் திமுக ஆட்சியில் மீண்டும் நிர்வாக அதிகாரியை அரசு நியமித்தது.

தமிழ் படங்களில், மிக மிக சாதுவான மனிதனாக காட்டப்படும் பார்ப்பனர்கள், கோவிலில் அரசு
அலுவலகம் திறக்கப்பட்டதும் அந்த அதிகாரியைத் தாக்கி, அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினர். பிறகு, அந்த வழக்கையும், தனது பல பணத்தால், செல்வாக்கு பலத்தால் அமுக்கினர்.

தீட்சிதர்களை சட்டபடியாக மட்டும் எதிர்கொண்டு விட முடியாது என கருதிய ம.உ.பா.மை. தனது தோழமை அமைப்புகள் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாய விடுதலை முன்னணி, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், சில தமிழ் அமைப்புகள் கொண்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டது.

சில வெற்றிகள்

மக்கள் மத்தியில் பிரச்சாரம் ஒரு புறம். மறு புறம் சட்ட ரீதியாகவும் பல போராட்டங்கள்.

(இந்த போராட்டம் நீண்ட கதை. இது தொடர்பாக பல பதிவுகள் தனியாக இருக்கின்றன. பார்க்க : மகா – தில்லை போராட்டம் – வரலாற்று தடங்கள் )


முதல் வெற்றி –
சிற்றம்பல மேடையில் பாட முதலில் அரசு அனுமதி

இரண்டாவது வெற்றி – அரசு நிர்வாக அதிகாரியை மீண்டும் நியமித்தது.


அவாள்கள் ஒன்று கூடுகிறார்கள்.

இன்றைக்கு, இழந்த கோவிலை மீட்க, தீட்சிதர்கள் மீண்டும் கிளம்பி விட்டார்கள். உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடருகிறார்கள்.

ஒரு கும்பல் ஜெயலலிதாவை, மற்றும் பலரைப் பார்த்தார்கள். கடந்த வெள்ளியன்று சு.சாமியும்,
விசுவ இந்து பரிசத் தலைவர் வேதாந்தம் தில்லைக்கு போய் விசேஷ பூஜை நடத்தியிருக்கிறார்கள். நேற்று, சு.சாமி இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்து கொள்ள விண்ணப்பித்திருக்கிறார். தீட்சிதர்களில் ஒரு குழு தில்லி சென்றிருக்கிறது. இல. கணேசன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

பேரணி, பொதுக்கூட்ட தேவை!

இப்படி இழந்த கோவிலை மீட்க பார்ப்பன கும்பல் தனது சதி வேலைகளை செய்ய கிளம்பிவிட்டது. கிடைத்த வெற்றியை போதும் என ஒதுங்கி கொண்டால், தீட்சித கும்பலுக்கு கொண்டாட்டமாகிவிடும். நாம் அதை அனுமதிக்கலாமா?

பெற்ற வெற்றிகளை தக்க வைத்துக்கொள்ள ....

மூன்று கோரிக்கைகளோடு இந்த பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

1. தற்பொழுது போடப்பட்டிருக்கும் அறநிலையத்துறை உத்தரவின் படி கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு தீட்சிதரின் எடுபிடி என்ற அளவுக்கு தான் அதிகாரம் உள்ளது. இந்நிலை மாற தனிச்சிறப்பான அரசாணை மூலம் இக்கோவிலை அறநிலையத்துறை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் தீட்சிதர்கள் அர்ச்சகர் என்ற நிலைக்கு கட்டுப்படுத்தப்படுவர்.

2. தீட்சிதர்கள் மேல் நகைக்களவு, மோசடியான நிதி நிர்வாகம் (ஆண்டுக்கு மொத்த வருமானமே ரூ. 37,199 தானாம்), இன்னபிற குற்றச்சாட்டுகளை இந்து அறநிலையத்துறை விசாரிக்காமல் வைத்திருக்கிறது.

இது தவிர கோவிலில் நடந்த கொலை மற்றும் பல கிரிமினல் குற்றங்களை காவல்துறை பதிய மறுத்து, ம.உ.பா.மையம் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

இது தவிர அரசு இப்பொழுது தான் கோவிலின் சொத்து விவரங்களை திரட்டி கொண்டிருக்கிறது. பக்தர்கள் தானமாக கொடுத்துள்ள நிலம் மற்றும் வீடுகளை விற்று தீட்சிதர்கள் ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

இப்படி தீட்சிதர்கள் மீதுள்ள எல்லா குற்ற வழக்குகளுக்காக கைது செய்து, விசாரிக்கப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

3. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் எழுப்பப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர் உடனே இடிக்கப்பட வேண்டும்.

ஆகையால், இந்த பேரணி, பொதுக்கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி, பலரும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

பின்குறிப்பு : தில்லை போராட்டத்திற்கு முன்பு, சிவனடியார் ஆறுமுகச்சாமி
ஆறுதல் சொல்லக்கூட ஆளிலில்லாமல், சிதம்பரம் தெருக்களில் புலம்பிக்கொண்டு திரிந்தார்.

சமரசம் இல்லாமல், தொடர்ந்து போராடும் அமைப்புக்கு வந்து, தொடர் போராட்டங்களுக்கு பிறகு, அவர் களப்போராளியாகவே மாறிவிட்டார்.

ஏற்கனவே, இந்த சட்டம், நீதிமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்திருப்பார். மீண்டும், தொடர்கிற போராட்டத்தில், ஒரு நாத்திகவாதியாக மாறினாலும் மாறியிருப்பார்.