> குருத்து: ஆந்திராவில் 40 நாளில் 21 விவசாயிகள் தற்கொலை!

August 31, 2009

ஆந்திராவில் 40 நாளில் 21 விவசாயிகள் தற்கொலை!


முன்குறிப்பு : தலைப்பு செய்திகளாக தெரிவிக்க வேண்டிய சில செய்திகளை பெட்டி செய்தியாக பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. தேர்தல், சினிமா போன்ற அக்கப்போர்களில் இந்த பெட்டிச் செய்திகள் நம் கண்ணில் இருந்து மறைந்து விடுகின்றன.

நிதி மூலதன கும்பல்களால் பங்குச் சந்தை சூறையாடப்பட்டு ஏதேனும் பிரச்சனையென்றால்.. அரசு மக்களின் பணத்தை பங்குச் சந்தையில் அள்ளிக் கொட்டுகிற இந்திய அரசு இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டேயிருப்பதை தெரிந்து கொண்டே மவுனம் காக்கிறது.

இன்றைக்கு விவசாயி சாகிறான் என்றால்... நாம் பட்டினி, பசியில் சாகப்போவதற்கு ஒரு முன்னறிவிப்பு. விவசாயியை காப்பாற்றினால்... நாம் பிழைத்தோம்.

*****

ஆந்திர மாநிலம் தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதியில் பருவ மழையும் பொய்த்தது. மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் பலத்த ஏமாற்றமடைந்தனர். சிலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 40 நாளில் 21 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டோன்சந்தா கிராமத்தை சேர்ந்த ஞீமண்ணா என்ற விவசாயி தூக்கில் தொங்கினார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியும் ஒப்புக் கொண்டுள்ளார். அனந்தஞீர் மாவட்டத்தில் 11 பேரும், அடில்லாபாத்தில் 4 பேரும், வாராங்கல் பகுதியில் 3 பேரும், மேடக் மாவட்டத்தில் 2 பேரும் தற்கொலை செய்து
கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி - (தினபூமி, 17/08/2009).

தொடர்பான செய்திகள் அறிய...

http://vidarbacrisis.blogspot.com

1 பின்னூட்டங்கள்:

சர்வதேசியவாதிகள் said...

கடந்த மாதம் இறுதி வாரத்தில் மட்டும் சுமார் 40 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் தோழர்.
இது போன்ற பதிவுகளை தோடர்ந்து போடுங்கள்.