> குருத்து: தமிழக காவல்துறை அதிகாரிகளில் 20 பேர் கோடீஸ்வரர்கள்!

June 30, 2011

தமிழக காவல்துறை அதிகாரிகளில் 20 பேர் கோடீஸ்வரர்கள்!

முன்குறிப்பு : அதென்னமோ தெரியல! அதிகாரிகளின் சொந்த பந்தங்கள் எல்லாருமே நல்ல வசதியுள்ளவர்களாகவே இருக்கிறார்கள்!

****

தமிழக காவல்துறையில் பணியாற்றும் 169 அதிகாரிகளில் 20 பேர் கோடீஸ்வரர்கள் என தெரிய வந்துள்ளது.

தமிழக காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட சொத்து விவரங்களுக்கான பட்டியல் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழக செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன ஐ.ஜி. ஏ.கே.விஸ்வநாதன் ரூ.15 கோடி சொத்து மதிப்புடன் முதலிடம் வகிக்கிறார். இந்தச் சொத்துகள், தனது தாயார் மற்றும் மனைவி மூலம் வந்த குடும்பச் சொத்துகள் என்று விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டிஜிபி போலோநாத், சிபிசிஐடி ஏடிஜிபி ஆர்.சேகர், நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி டி.ராஜேந்திரன் ஆகியோர் ரூ.3 கோடிக்கும் அதிகமான சொத்துடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி ரூ.2.8 கோடி மதிப்புக்கான சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த நான்கு அதிகாரிகளும் மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

இந்தக் கோடீஸ்வர அதிகாரிகள் அனைவரும் தங்களது பணத்தை நிலம் மற்றும் வீடு என ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிபி போலோநாத்துக்கு தில்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் வீடுகள் உள்ளன. சிபிசிஐடி ஏடிஜிபி சேகருக்கு ரூ.1.2 கோடி மதிப்பில் சென்னை அண்ணா நகரிலும், நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி டி.ராஜேந்திரனுக்கு பெசன்ட் நகரில் ரூ.75 லட்சம் மதிப்பிலும் வீடுகள் உள்ளன.

இந்நிலையில், மேற்கு மண்டல ஐஜி பி.சிவனாண்டி தனக்கு எந்த சொத்தும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி, 01/07/2011

1 பின்னூட்டங்கள்:

வலிப்போக்கன் said...

மேற்கு மண்டல ஐஜி பி.சிவனாண்டி தனக்கு எந்த சொத்தும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

நெஜமாகவா???