> குருத்து: மூன்றாவது வகுப்பு பயணம் (1969)

January 4, 2019

மூன்றாவது வகுப்பு பயணம் (1969)

வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தான் பிறந்த குக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஊர்களைத் தவிர வேறு ஊர்களைப் பார்த்ததேயில்லை. சண்டையும், சச்சரவுகளோடு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு பரந்த இந்தியாவை அறிமுகப்படுத்தப்படவேண்டும் என நினைக்கிறார். அதற்கான பயண ஏற்பாட்டை செய்கிறார். அவரோ நோயில் இரண்டு மாதத்தில் இறந்துவிடுவார். இறந்தும்விடுகிறார்.

அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றும்விதமாக 44 பேரை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். சாப்பாடு, உடல்நிலை பிரச்சனை என பல சோதனைகளை எதிர்கொண்டு இந்தியா முழுவதும் சுற்றி, பல அனுபவங்களை பெற்று வேறு மனிதர்களாக தங்கள் ஊர் வந்து சேர்கிறார்கள்.

அவர்களுடன் பயணித்து இந்த அனுபவங்களை எழுத்தாளர் ஹூதர் வுட் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தை எஸ். இராமகிருஷ்ணன் அருமையாக அறிமுகப்படுத்தி எழுதியுள்ளார்.

இப்பொழுது இதைப் படிக்கலாம் என இணையத்தில் தேடினால், அமேசானில் விலை ரூ. 20319. தள்ளுபடி போக விலை ரூ. 6786. இலவசமாக பிடிஎப் கிடைக்குதா என தேடினால் கிடைத்தது. நான் படிக்க துவங்கிவிட்டேன். உங்களுக்கும் அறிமுகப்படுத்தலாமே என யோசித்து இந்த பதிவு. சுட்டி எல்லாம் கேட்காதீர்கள். கூகுளில் தேடினாலே கிடைக்கிறது!

http://www.sramakrishnan.com/?p=2870&fbclid=IwAR2HCoeyozJBDUcQi-dUZns6cgwbKPqQ6LDY_FyFd4-Y9lAvTQ91ENgxakc

0 பின்னூட்டங்கள்: