> குருத்து: அவர்கள் வீட்டுக்கு கதவுகளில்லை!

May 13, 2019

அவர்கள் வீட்டுக்கு கதவுகளில்லை!


நரிக்குறவர் குடும்பம்!
கணவனும் மகனும் பாண்டிச்சேரிக்கு
ஊசிமணி பாசிமணி
விற்க கிளம்பிவிட்டார்கள்!


சென்னை ஆவடியில்
தாயும் மகளும் தனியாக இருந்தார்கள்!

நடுநிசியில்
உள்ளே புகுந்த இளைஞர்கள்
தூங்கிக் கொண்டிருந்த
அவர்களின் தலையில்
அம்மி கல்லை போட்டுக்
கொன்று விட்டார்கள்.
பச்சிளம் குழந்தையையும்
கொன்றுவிட்டார்கள்.
எல்லாம் பாலியல் வன்முறைக்காகத்தான்!

அவர்கள் வீட்டில்
கதவுகளில்லை!
தன் வீட்டில் உடமை இல்லை! - பிறகு
கதவுகள் எதற்கு என நினைத்தார்களோ?
மனித சமூகத்தோடு
வாழ்கிறோம்!
மனிதர்கள் இத்தனை இழிகுணத்தோடு
வாழ மாட்டார்கள் என அப்பாவியாய் நம்பினார்களா?

இரண்டு உறவுகள்!
மிகப் பெரிய இழப்புகள்!
நாளை அவர்கள் வீட்டுக்கு கதவுகள் பொருத்தப்படலாம்!!
அந்த கதவுகள்
சமூகத்தின் மீதான
நம்பிக்கை இல்லா தீர்மானம் அல்லவா!

சகோதரியே!
நாங்கள் வெட்கப்படுகிறோம்!
எங்களை ஒருபோதும் மன்னித்துவிடாதே!

0 பின்னூட்டங்கள்: