> குருத்து: பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - நாவல் - ஒரு அனுபவம்

May 3, 2020

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - நாவல் - ஒரு அனுபவம்

நாவலைப் பற்றி மனுஷ்யபுத்திரன் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். பதிப்பாளரும் அவரே என்பதால் எளிதில் கடந்துபோய்விட்டேன். வேறு ஒருவரும் குறிப்பிட்டு சொன்ன பொழுது, அஞ்சலில் உடனே வாங்கிவிட்டேன்.
சமீப காலங்களில் இத்தனை விரைவாக ஒரு நாவலை வாசித்ததில்லை.
மகாசுவேதா தேவி எழுதிய '1084ன் அம்மா' என ஒரு நாவல். 70 களில் மே. வங்கத்தில் நக்சலைட்டுகளை நரவேட்டையாடியதில், 1084வது ஆளாக கொல்லப்பட்ட தன் மகனை பற்றிய தேடலே நாவல். அந்த பயணத்தில் தன் மகனைப் பற்றி புரிந்துகொள்வார்.

அது போல, மருத்துவம் படிக்கும் பிரபாகரன் எந்த குறிப்பும் எழுதாமல் தற்கொலை செய்துகொள்கிறான்.

பிரபாகரனின் 'நண்பர்' பிரபாரகரனைப் பற்றி தேடும் பயணமே நாவல். அந்த பயணம் மனித இயல்புகளை, சிக்கல்களை, மருத்துவ உலகின் பழுப்பு நிற பக்கங்களை சொல்லி செல்கிறது. அதை மருத்துவரே எழுதும் பொழுது, உண்மைகளை குளோசப்பில் அறிந்துகொள்கிறோம்.

ஏற்றத்தாழ்வான சமூகத்தில், பல்வேறு கோளாறுகளோடு இயங்கும் சமூகம் மருத்துவ உலகம் மட்டும் பரிசுத்தமாகவா இருந்துவிடும்.
சமத்துவத்திற்கான போராட்டத்தை சமூகத்தை நேசிக்கும் மருத்துவர்களே முன்னெடுக்க முடியும்.

நாவலில் பல அம்சங்களை விவாதிக்கலாம். நீண்டுவிடும் பயத்தில், முடித்துக்கொள்கிறேன்.

ஆசிரியருக்கு நன்றி. வாங்கி படியுங்கள் என நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

0 பின்னூட்டங்கள்: