> குருத்து: மரணம் - குஷ்வந்த் சிங்

January 31, 2022

மரணம் - குஷ்வந்த் சிங்

 


கேள்வி
: எப்போதுமே உங்கள் வயது பொதுவாக விமர்சிக்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது. தனிமையில் இருக்கும்போது உங்கள் மரணத்தைப் பற்றி நீங்கள் சிந்திப்பதுண்டா?
 
குஷ்வந்த் சிங் பதில்:
 
ஆமாம். எனது மரணத்தைப் பற்றி அடிக்கடி நான் நினைக்கிறேன். இறந்துபோன எனது நண்பர்களை யெல்லாம் நினைத்து அவர்கள் எல்லாம் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று வியப்படைவேன். நமது இல்லங்களில் இறப்பைப் பற்றி நாம் ஏன் பேசுவதில்லை என்று ஆச்சரியப் படுவேன்.
எவருமே தப்பிக்க இயலாத உண்மை நிலைகளில் அதுவும் ஒன்று. இறப்பு கொண்டாடப்படவேண்டிய ஒன்று என்ற சமண மதத் தத்துவத்தை நான் நம்புகிறேன்.
 
 
சில ஆண்டுகளுக்கு முன் சுடுகாட்டுக்குச் சென்று அங்கே நான் உட்கார்ந்து கொண்டிருப்பேன். அது என் மீது ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மருத்துவ சிகிச்சை போன்று அது செயல் பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் என் கல்லறை மீது பொறிக்க வேண்டிய வாசகங்களை (Epitaph) நானே எழுதினேன்.
 
"கடவுளையோ மனிதனையோ விமர்சித்த, விட்டு வைக்காத ஒரு மனிதர் இங்கே உறங்குகிறார். உங்கள் கண்ணீரை அவருக்காக வீணாக்கவேண்டாம். அவர் ஒரு குழந்தை. மோசமான விஷயங்களை எழுதுவதை அவர் ஒரு தமாஷாகக் கருது பவர். ஒரு துப்பாக்கியின் மகனான அவர், இறந்து போனதற்கு கடவுளுக்கு நன்றி."

0 பின்னூட்டங்கள்: