> குருத்து: தேசவிரோதி, தேசதுரோகி என்பதெல்லாம் எதிரிகள் நமக்கு தரும் விருதுகள்

February 8, 2024

தேசவிரோதி, தேசதுரோகி என்பதெல்லாம் எதிரிகள் நமக்கு தரும் விருதுகள்


தேசவிரோதி, தேசதுரோகி என்பதெல்லாம் எதிரிகள் நமக்கு தரும் விருதுகள் என்கிறார் எழுத்தாளர் அருந்ததிராய்.

அப்படிப் பார்த்தால் பலமுறை அந்த விருதுகளை நாமே வாங்கியிருக்கிறோம். மகிழ்ச்சி.

****
நான் எதுவும் சொல்லாமல் இருந்தால், இதையெல்லாம் நான் ஒப்புக்கொண்டதாக கருதப்படும் என்று எனக்குத் தெரியும். பேசுவது போல அமைதியாக இருப்பதும் ஒருவகை அரசியல் தான் என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். பேசுவதால் இலக்கிய உலகில் மாய இளவரசி பட்டம் பறிபோகும் என்பதையும் புரிந்து கொண்டேன். இதற்கு மேலாக, விளைவுகளைப் பொருட்படுத்தாமல் நான் நம்புகின்றவற்றை எழுதவில்லை என்றால் நானே எனக்கு மோசமான எதிரியாகி விடுவேன்.
அதனால் தான் என் எழுத்துக்களுக்கான சுயத்தைக் காப்பாற்ற எழுதினேன். தேசத் துரோகி எனவும் தேச விரோதி எனவும் முத்திரை குத்தப்பட்டேன். அந்த அவமதிப்புகளை புக்கர் பரிசுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத விருதுகளாக ஏற்றுக் கொண்டேன்.

-அருந்ததிராய்.

Charles Veillon Foundation வழங்கிய சிறந்த கட்டுரையாளருக்கான விருது நிகழ்வில் அருந்ததிராய் ஏற்புரை யிலிருந்து..

0 பின்னூட்டங்கள்: