> குருத்து: இறைவன் நடராஜரை, தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்றுவோம்!

March 20, 2008

இறைவன் நடராஜரை, தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்றுவோம்!



நேற்று சென்னை ரயிலில், பயணிகள் மத்தியில், ஒரு பெண் தோழர் உரக்க பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அன்பார்ந்த பெரியோர்களே!

மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற புரட்சிகர அமைப்பிலிருந்து வந்திருக்கிறோம். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மூன்று நாட்களாக தமிழக செய்தி தாள்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில், தேவாரம், திருவாசகம் பாடப்பட்டதாக நீங்கள் அறிவீர்கள்.

79 வயது முதியவர் சிவனடியார் ஆறுமுகசாமி-க்கு வாழ்க்கையின் ஒரே கனவு 'சிதம்பரம் நடராஜர் முன்பு மனமுருகி தேவாரம், திருவாசகம் பாடவேண்டும்'. கடந்த 2000ம் ஆண்டு, சிதம்பரம் கோயிலில் பாட முயற்சித்த பொழுது, அந்த கோயிலை நிர்வாகம் செய்கிற தீட்சிதர்களால், அவருடைய கைகள் முறிக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார்.

சற்றும் தளராமல், தமிழ் ஆதினங்கள், மடாதிபதிகள் எல்லோரிடமும் சென்று, ஆதரவு கேட்டு நின்றார். ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. இறுதியில், நாத்திகர்களான, கம்யூனிஸ்டுகளான, எங்களிடம் வந்து சேர்ந்தார்.

தமிழ் தீண்டாமையை எதிர்த்து, பக்தர்களுடைய வழிபாட்டு உரிமையைக் காப்பாற்ற, எங்களது சகோதர அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் களத்தில் இறங்கி, பல கட்சிகளையும் ஒன்றிணைத்து, மக்களிடத்தில் தொடர் பிரச்சாரம் செய்து, அரசிடமும், நீதிமன்றங்களிடத்திலும் போராடி, தேவாரம், திருவாசகம் பாடலாம் என்ற அரசு ஆணையைப் பெற்று, பாடசென்றால்...





தமிழ் திரைப்படங்களில் மிகவும் பரிதாபகரமாக சித்தரிக்கப்படுகிற பார்ப்பனர்கள், அன்றைக்கு உலகமே பார்த்தது பருப்பும், நெய்யுமாய் தின்று கொழுத்த பார்ப்பன தீட்சிதர்கள், போலீஸ் எஸ்.பி.யை தூக்கியெறிந்தார்கள். ஆறுமுகசாமி அவர்களின், மூக்கு கண்ணாடியை உடைத்தார்கள்.

ஏன் இத்தனை களேபரம்? தேவாரம் பாட மறுப்பதற்கு தீட்சிதர்கள் சொல்லும் காரணம் என்ன?

"சமஸ்கிருதம் தேவ பாஷை" "தமிழ் நீஷ பாஷை" என்கிறார்கள்.

நீஷபாஷை என்றால், தரம் தாழ்ந்த மொழி என்று அர்த்தம்.

நூறு கோடி மக்கள் வாழ்கிற இந்தியாவில், ஒருவரால் கூட பேசப்படாத சமஸ்கிருதம் தேவபாஷை. கடவுள் அறிவார்.

ஆறு கோடி மக்களால் பேசப்படுகிற தமிழ் நீஷப்பாஷையாம். கடவுளுக்கு புரியாதாம்.

இப்பொழுது, நம்மைப் பார்த்து, திமிர்ப்பிடித்த தீட்சிதர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

"மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு"

இந்த கேள்விக்கு அர்த்தம் என்னவென்றால்,

"தமிழ் பேசுகிற ஆறு கோடி மக்களுக்கே, சூடும், சொரணையும், சுயமரியாதையும் இல்லாமல், அமைதியாய் இருக்கும் பொழுது, உங்களுக்கு மட்டும் ஏன் இந்த சூடு, சொரணை?"

5000 கோடி பெறுமானமுள்ள சிதம்பரம் கோயில் சொத்தை, தீட்சிதர்கள் என்ற சிறு கும்பல் காலம், காலமாய் தின்று கொழுக்கிற கொழுப்பு இப்படி பேச வைக்கிறது.

இதுவரைக்கும், கோயில் வசூலைப் பங்கு போடும், தகராறில், பல கொலைகள் நடந்திருக்கிறது. கோயிலுக்குள் சீட்டு விளையாடுகிறார்கள். தண்ணியடிக்கிறார்கள். கொட்டமடிக்கிறார்கள்.

இந்நிலையில், தீட்சிதர்களிடமிருந்து சிதம்பரம் கோயிலையும், இறைவன் நடராஜரையும் காப்பாற்ற வேண்டியது தமிழர்களுடைய கடமை.

"கோயிலை, அரசு கையகப்படுத்தி, பராமரிக்க வேண்டும் - என மாநிலம் முழுவதும், எமது தோழர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறார்கள். வருகிற 22ந் தேதி பொதுக்கூட்டம் ஒன்று சிதம்பரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதற்கு நீங்கள் அதிக பட்ச நிதி உதவி தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம்."

- பேசி, முடித்ததும், மக்கள் பலர் உண்டியலில் பணம் போட்டார்கள்.

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

தமிழுக்கு வந்த சோதனை. தமிழர்கள் "சமூக அநீதி கண்டு, கொதித்து எழாதவரை,
தமிழும் வாழாது. தமிழர்களும் மேம்படமாட்டார்கள்"

- பச்சையப்பன்

Anonymous said...

தமிழை எதிர்த்தவன் மீது படை எடுப்போம். அவனோடு தமிழனே நின்றாலும் அவன் தலை எடுப்போம்.

-ஒல்லாந்தன்-

ஏகலைவன் said...

சிதம்பரம் போராட்டத்தைப் பற்றி பதிவிட்டமைக்கும் மேற்சொன்ன பெண்தோழருக்கும் முதலில் எனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


தீட்சிதப் பார்ப்பனர்களை வென்றுவிட்டோம். இது காலம் காலமாய்த் தொடரும் தேவ அசுரப் போரின் முதல் வெற்றி. இதன் தொடர்ச்சி தேசபக்தி வேடமிட்டுக் கொண்டும், இந்து மதத்திற்குள்ளும், புகுந்துகொண்டு அப்பாவி உழைக்கும் மக்களின் மீது கலவரத்தை ஏவும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களையும் வெல்ல தொடர்ந்து போராடுவோம். வெற்றி பெறுவோம்.

ஏகலைவன்.