> குருத்து: தமிழகத்தின் கோயபல்ஸ் ஜெயலலிதா

April 2, 2008

தமிழகத்தின் கோயபல்ஸ் ஜெயலலிதா



'கிருஷ்ணகிரி தண்டவாளத்தில் டெட்டனேட்டர் வெடிப்பு' என மார்ச் 31ல் செய்தி வெளியானதுமே, ஜெயலலிதா "நக்சலைட்டுகள், விடுதலைப்புலிகள் பெருகி விட்டார்கள்" என்ற தனது வழக்கமான கோயபல்சு பாணி பிரச்சாரத்தை எடுத்துவிட்டார்.

நடந்தது என்ன என்பதை, கீழே தொடர்ந்து படித்தால் புரியும்.

இதே மாதிரி தான், சில நாட்களுக்கு முன்பு, தர்மபுரி அதியமான் கோட்டையில், காவல் நிலையத்தில் (!) துப்பாக்கிகள் களவு போயின. உடனே, ஜெயலலிதா "நக்சலைட்டுகள் அட்டூழியம்" என்றார்.

தேடிப்பார்த்ததில், பக்கத்து தோட்டத்தில், பத்திரமாய் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

(இதை ஒட்டி, நான் ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருக்கிறேன். படித்து பாருங்கள்.)

களவுக்கு பிறகு, அங்கு வேலை செய்த காவலர்களை ஊர் ஊராக கூட்டிக்கொண்டு போய், மூளை சோதனை செய்த கேலிக்கூத்து ஊர் அறியும்.

இப்படி தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்வது எதற்காக? எல்லாம் இழந்த ஆட்சியைப் பிடிப்பதற்காக!

ஏற்கனவே, இந்த அம்மா (இனிமேல் செல்லமாய் 'மம்மி' என அழைப்போம்) ராஜீவ் காந்தியின் ரத்தம் பட்டு உயிர்த்தெழுந்தது. 5 ஆண்டுகள் ஊரைக் கொள்ளையடித்து, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியது.(1991-1996)

பிறகு, அதற்கான சக்தி இழந்து, 5 ஆண்டுகள் இதே மாதிரி பொய்களை, புளுகுகளை சொல்லி, புலம்பிக்கொண்டே இருந்தது.(1996-2001)



மக்கள் மம்மியின் ஆட்டத்தை மறந்து, தனது, வாக்கு சீட்டு என்னும் மந்திர புத்தகத்தால், 'மம்மியை' மீண்டும் உயிர்த்தெழ வைத்தார்கள்.

உயிர்த்தெழ வைத்த விவசாயிகளை, நெசவாளிகளை, மாணவர்களை, அரசு ஊழியர்களை அடித்து துவைத்தது. பல பேருடைய ரத்தம் குடித்தது.

மீண்டும், மக்கள் புதைக்குழிக்குள் தள்ளினார்கள்.

இப்பொழுது, மீண்டும் உயிர்தெழ, ஆட்சியை கைப்பற்ற, அடித்து வெளுக்க, பழைய பாணியை கடைப்பிடித்து, இது மாதிரி பொய்களையும், புளுகுகளையும் வாரி இறைத்துக்கொண்டு இருக்கிறது.


மக்களே ஜாக்கிரதையாய் இருங்கள். இனி ஒருமுறை, 'மம்மியை' உயிர்த்தெழ வைத்து விட்டீர்களெனில், பிறகு, புதைக்குழிக்குள் 'மம்மியை' தள்ள உங்களை உயிரோடு விட்டு வைக்காது.


கிருஷ்ணகிரி அருகே தண்டவாளத்தில் டெட்டனேட்டர் வெடிப்பு!
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 2008


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ரயில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் வெடித்தன. ரயிலைக் கவிழ்க்க நடந்த முயற்சியா இது என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே கிரிகேபள்ளி என்ற இடத்தில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. நேற்று இந்த வழியாக பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வந்தது. ரயில், கிரிகேபள்ளி ரயில்வே கேட்டை தாண்டிச் சென்றதும், தண்டவாளத்தில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேட் கீப்பர் அங்கு சென்று பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் நீண்ட வயர்களுடன் 10 டெட்டனேட்டர்கள் ஒரு கம்பியால் கட்டப்பட்டு வெடித்த நிலையில் கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்டார்.

பத்து டெட்டனேட்டர்களில் 3 மட்டுமே வெடித்திருந்தது. தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. தேன்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்த டெட்டனேட்டர்கள் எப்படி இங்கு வந்தன. யார் இதைப் போட்டது என்று தெரியவில்லை. இது பாட்னா ரயிலைக் கவிழ்க்க நடந்த சதியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

டெட்டனேட்டர்களைக் கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- இப்படி தமிழக செய்தி தாள்களில், செய்தி வந்தது.


அதற்கு, ஜெயலலிதா அளித்துள்ள பேட்டி

"விடுதலைப்புலிகள், தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை மேலும், ஊர்ஜிதப்படுத்தும்விதமாக தற்போது கிருஷ்ணகிரி அருகே ரெயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதற்கு காரணமாக இருக்கும் தி.மு.க. அரசையும், தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

- தினத் தந்தி, மார்ச் 31, 2007

மறுநாள், எல்லா செய்தி தாள்களிலும் வந்த செய்தி

சென்னை, ஏப். 1: கிருஷ்ணகிரி அருகே ரெயில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர் வெடித்தது தொடர்பாக கல்குவாரி மேஸ்திரி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 3 ஜெல்லட்டின் குச்சிகள் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
.
கிருஷ்ணகிரி மாவட்டம் படவனூர் ரெயில்வே கேட் அருகே கடந்த 29ந் தேதி காலை பாட்டான எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ற போது ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு போன்ற ஒன்று வெடித்தது. இது தொடர்பாக சேலம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெயில் தண்டவாளத்தில் வெடித்தது டெட்டனேட்டர்கள் என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சாமல்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஏ. வெங்கட்ராமனிடம் அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சரண் அடைந்தார். அவர் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசாரிடம் பழனிசாமி அளித்த வாக்குமூலத்தில் அவர் கல்குவாரி ஒன்றில் மேஸ்திரியாக வேலை செய்வதாகவும், கல்குவாரியில் பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர்கள் சம்பவத்தன்று காலை ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது தவறவிட்டுவிட்டதாகவும் அதுதான் ரெயில் சென்ற போது வெடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து பழனிச்சாமியை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து வெடிக்காத 3 ஜெல்லட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

- 1, ஏப்ரல் 2008 - மாலைசுடர்

2 பின்னூட்டங்கள்:

களப்பிரர் - jp said...

ஒட்டு போடும் எந்திரத்தில் உள்ள பிலோப்பி டிஸ்க் மோசடி மூலம் கள்ள ஒட்டு போட முயற்சி என்று கூட சில சமயம் நையாண்டி செய்துள்ளார்..

குருத்து said...

இந்த 'மம்மி'யின் தகிடுதத்தங்களைச் சொல்ல வேண்டுமென்றால், சொல்லிக்கொண்டே போகலாம்.

ஊர் அறிந்த விசயங்களை நாம் ஏன் சொல்ல வேண்டும் என்று தான் விட்டுவிட்டேன்.

கருத்து சொன்ன களப்பிரர் அவர்களுக்கு நன்றி