> குருத்து: வங்கி ஊழியர்கள் போராட்டம்!

August 4, 2011

வங்கி ஊழியர்கள் போராட்டம்!

இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட தேசிய‌ வங்கிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இணைத்து, டாப் 10 வங்கிகள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற அளவில் மத்திய அரசு காய்கள் நகர்த்துகிறது. தனியார்மயப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன.

இதனை எதிர்த்தும், வங்கி ஊழியர்களின் பற்றாக்குறை 3 லட்சம் அளவில் இருக்கிறது. வங்கிகளுக்கெல்லாம் போனால், வாடிக்கையாளர்களையே எல்லா வேலைகளையும் செய்ய வைக்கிறார்கள். ஒருமுறை இந்தியன் வங்கியில் இதற்காக சண்டையே போட்டிருக்கிறேன். ஆகவே, ஏற்கனவே இழுத்துமூடப்பட்ட‌ தேர்வு செய்து நியமனம் செய்யும்BSRB ஐ- மீண்டும் திற! என்ற கோரிக்கையும் உண்டு.

இப்படி பல்வேறு நீண்ட கால கோரிக்கைகளை 21 அம்ச திட்டத்தை வைத்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட‌ வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

கடந்த ஜூலை 7ந் தேதி ஸ்டிரைக் அறிவித்து, பின்பு, இன்றைக்கு தள்ளி வைத்தார்கள்.

காலையிலிருந்து பேசிய மூவர் என்னவென்று கோரிக்கை என்று தெரியாமலே, வங்கி ஸ்டிரைக்கை எதிர்த்து பேசுகிறார்கள். (இன்னைக்கு செக்‍‍ஐ போடமுடியலையாம்!) இது என்ன பண்பு? எனபுரியவில்லை. அவர்களின் நியாய கோரிக்கைகளை எடுத்து சொன்னபிறகு, ஆமோதிக்கிறார்கள்.

தொடர்புடைய சுட்டிகள் :



0 பின்னூட்டங்கள்: