> குருத்து: அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் பண்!

August 8, 2011

அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் பண்!


பட்டினிக் கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்!
பாரில் கடையரே எழுங்கள் வீறுகொண்ட தோழர்காள்!
கொட்டுமுரசு கண்ட நம் முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வினைச் சமைத்திட

பண்டையப் பழக்கமென்னும் சங்கிலி அறுந்தது!
பாடுவீர் சுயேச்சை கீதம் விடுதலை பிறந்தது!
இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்தெழும்
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகமாகிடும்

முற்றிலும் தெளிந்த முடிவான போரிதாகுமே!
முகமலர்ச்சியோடு உயிர்த்தியாகம் செய்ய நில்லுமே!
பற்றுகொண்ட மனித ஜாதி யாவும் ஒன்றதாகுமே!
படிமிசைப் பிரித்த தேசபாஷையும் ஓர் அய்க்கியமே!

பாரதோ மமதையின் சிகரத்திறு யாந்துமே
பார்க்கிறான் சுரங்க மில் நிலத்தின் முதலாளியே
கூறிடில் அன்னார் சரித்திரத்தில் ஒன்று கண்டதே

கொடுமை செய்து உழைப்பின் பலனைக் கொள்ளை கொண்டு நின்றதே!
மக்களின் உழைப்பெலாம் மறைத்து வைத்து ஒருசிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்ற தறிகுவீர்
இக்கணம் அதைத்திரும்ப கேட்பதென்ன குற்றமோ?
இல்லை நாம் நமக்குரிய பங்கைக் காட்டி கேட்கிறோம்!

தொன்று தொட்டு உழைத்த விவசாயி தொழிலாளி நாம்
தோழர் ஆகினோம் உழைப்போர் யாவரெனும் ஓர் குலம்
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்த வாக்குச் சொல்லுவோம்
உழைப்பவர் யாவருக்கும் சொந்தமிந்த நிலமெலாம்

வேலை செய்யக் கூலியுண்டு வீணர்கட்கிங் கிடமில்லை
வேதம் ஓதி உடல் வளர்க்கும் காதகர்க்கிங் கிடமில்லை
நாளை எண்ணி வட்டி சேர்க்கும் ஞமலிகட்கிங் கிடமில்லை
நாமுணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங் கிடமில்லை

பாடுபட்டுழைத்தவர் நிணத்தைத் தின்ற கழுகுகள்
பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளதில்
காடுவெட்டி மலை உடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்
கவலையற்ற போகவாழ்வை சகலருக்குண்டாக்குவோம்!

0 பின்னூட்டங்கள்: