> குருத்து: இன்று நடைபெற்ற இ.எஸ்.ஐ, பி.எப் குறித்த விளக்க கூட்டம் குறித்து!

August 12, 2023

இன்று நடைபெற்ற இ.எஸ்.ஐ, பி.எப் குறித்த விளக்க கூட்டம் குறித்து!

 

அன்புள்ள GSTPS உறுப்பினர்களுக்கு,

 

வணக்கம்.  தலைவர் அவ்வப்பொழுது ஒரு தலைப்பில் பேசுங்கள் என சொல்லும் பொழுது, அது பெரிய வேலை.  ”அதற்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டோம்” என நம்பிக்கை ஆழமாய் இருந்தது.

ஆனால் நம் தலைவர் தான் விடுவதில்லையே! மீண்டும் வலியுறுத்துகிற பொழுது,  பேசலாம் என முடிவுக்கு வந்தேன்.

அதை முதலில், இ.எஸ்.ஐ, பி.எப் லிருந்து துவங்குவோம் என சொன்ன பொழுது, தலைவரும் நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டார்கள்.


 

படிக்கத் துவங்கிவிட்டேன்.  வில்லியப்பன் சாரிடம் அவ்வப்பொழுது சந்தேகங்களை கலந்து பேசிக்கொண்டேன்.

பிபிடி குறித்த அறியாமையால், தட்டச்சு செய்து அதில் இடுவது தானே! என நானாக நினைத்துக்கொண்டேன்.  அந்த வேலையை செய்யும் பொழுது தான் அது எப்படிகவனத்துடனும், நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் புரிந்தது.  நேற்றும், நேற்றைக்கு முதல் நாள் இரவும் பிபிடிக்காக நேரம் செலவிட வேண்டியிருந்தது.

முதல் உரை என்பதால், கொஞ்சம் உள்ளுக்குள் மெல்லிய பதட்டம் ஓடிக்கொண்டே இருந்தது.  அந்த பதட்டம் மேலெழும்பி வந்துவிடகூடாது என்பதில் எனக்கு நானே மறைத்துக்கொண்டேன்.

முதல் உரையிலேயே தமிழிலும் தயாரிப்பது என்பதற்காக‌ கூடுதல் உழைப்பு தேவைப்பட்டது.  ஆனால் நம் தாய் தமிழுக்காகவும், அப்பொழுது தான் தமிழ் பேசும் பல தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் சென்று சேரும் என நினைத்தேன்.  அதனால் அதில் உறுதியாக இருந்தேன்.

எப்பொழுதும் போல கூட்டத்திற்கு 10.25க்குள் உள்ளே நுழைந்த பொழுது, 15 பேருக்கும் மேல் இருந்தவர்களைப் பார்த்ததும், கொஞ்சம் ”பயம்” தான் வந்தது.


என் உரை வரி ஆலோசகர்களுக்கு கிடையாது. பி.எப்பை பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கானது என்பதால், அவர்களை மனதில் வைத்து அவர்களுக்கு புரியும் விதத்தில் இருக்கவேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆகையால், செக்சன்களை, நிறைய புள்ளி விவரங்களை தவிர்க்கவேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

 


ஒரு மணி நேரத்திற்குள் பேசுவோமா, தாண்டிப் போகுமா என்ற பயம் இருந்தது.  அவ்வப்பொழுது நேரம் பார்த்து கொஞ்சம் வேகப்படுத்தி சமாளித்தேன். அநேகமாக 1.25 மணி நேரம் பேசியிருப்பேன் என நினைக்கிறேன்.

ஒரு தலைப்பில் படித்து, கலந்து பேசி, சந்தேகங்களை களைந்து, பிபிடி தயாரித்து பேசும் பொழுது தான் ஒரு உரை எத்தனை கடினம் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.   நிறைய தேடித்தேடி படித்ததால், நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.  அதற்காக தான் தலைவர் இவ்வளவு வலியுறுத்துகிறார் என்கிற ரகசியத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது.


நமது உறுப்பினர்களில் பெரும்பாலும் வரி ஆலோசகர்கள் தான். ஆகையால் நிறைய பேர் வரமாட்டார்கள் அல்லவா! என எனது கருத்தாக தலைவரிடம் தெரிவித்தேன். 40 பேர் வரை நம் கூட்டத்திற்கு இயல்பாக வருகிறார்கள். அதே எண்ணிக்கையில் வருவார்கள் என தெரிவித்தார். ஆனால்,  74 பேர் வரை கலந்துகொண்டார்கள். அதில் 28 பேர் நமது உறுப்பினர்கள் என்கிற செய்தி தலைவர் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. 

 

பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் உரை குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.  அனைவருக்கும் நன்றி.

 

1.25 மணி நேரம் பேசி முடித்ததும், மொத்த ஆற்றலும் வடிந்தது போல இருந்தது. கேள்வி பதில் பகுதி முழுக்க இரண்டு மூத்தவர்கள்  Dr. வில்லியப்பன் அவர்களும், கோவை பெருமாள் அவர்களும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சளைக்காமல் பதில் தந்தது அருமையாக இருந்தது. அவர்களுக்கு நன்றி.

 

பேச உற்சாகம் கொடுத்து பேச சொன்ன தலைவர் அவர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து, வரவேற்புரை பேசிய  நமது இணைச்செயலர் செண்பகம் அவர்களும், நன்றியுரை வழங்கிய நமது பொருளாளர் செல்வராஜ் அவர்களுக்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் நன்றி.

முதல் உரை என்பதால், அது தந்த அனுபவத்தை உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும், இனி வகுப்பு எடுக்கப் போகும் புதியவர்களுக்கும் நிச்சயம் பயன்படும் என்பதற்காக தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

ஆகையால், புதியவர்கள் உற்சாகத்துடன் வகுப்பு எடுக்க முன்வாருங்கள்.

நன்றி.


குறிப்பு : தனிப்பட்ட முறையில் பேசும் பொழுது, பிபிடி பகிருமாறு கேட்டார்கள்.  சில விடுபடுதல்கள், எழுத்துப்பிழைகள், திருத்தங்கள்  செய்த பிறகு, குழுவில் பகிர்கிறேன்.

0 பின்னூட்டங்கள்: