> குருத்து: ஒப்பந்த தொழிலாளியைப் பாதுகாக்க சட்டம் இல்லை! தீர்வு?

May 31, 2009

ஒப்பந்த தொழிலாளியைப் பாதுகாக்க சட்டம் இல்லை! தீர்வு?

இந்த பதிவில்....

//ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்க பாராளுமன்றத்தில் தீர்வு இல்லை. சுதந்திரம் வந்ததா சொல்றான்! 60 ஆண்டு காலமாக 12 தேர்தல். பல பிரதம மந்திரிகள். பல தொழிலாளர் மந்திரிகள், ஆனால், ஒப்பந்த தொழிலாளியை பாதுகாக்க இதுவரை விவாதமும் நடத்தவுமில்லை. சட்டமும் இல்லை. சமூக நீதியோ, சட்ட பாதுகாப்போ இல்லை.//

//தீர்வு தான் என்ன?

சங்கமாக சேர்! சங்கத்தை வலுப்படுத்து! போராடு! சண்டையிடு!
அடி! (கைத்தட்டல்)

- வழக்கறிஞர் பாலன், உயர்நீதி மன்றம், பெங்களூர்.

*****

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரப்படும் கூலி எவ்வளவு? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

ஒப்பந்த தொழில் செய்யும் நகரச் சுத்தி தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ. 63. ஹெச்.ஏ.எல். ல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ. 118 கூலி. BSNL – ல் வெலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ. 30 கூலி. இந்த கூலியை பெற்று, எந்த மாதிரி வாழ்க்கை நடத்த முடியும்?

அவர்கள் எங்கு வாழ்கிறார்கள்?

சென்னை, பெங்களுர், மும்பை, கல்கத்தா போன்ற இடங்களில் குடிசைப் பகுதியில் வீடு வேண்டும் என்றால் கூட ரூ. 1500 கூலி. போக்குவரத்து, பிள்ளைகளுக்கு கல்வி செலவு, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழக்கூடிய தொழிலாளர்கள்.

இவர்கள் சங்கமாக திரள முடியாது. சங்கமாக திரண்டால் உடனே நிர்வாகம் வேலை நீக்கம் செய்துவிடும்.

வேலை நீக்கம் செய்தால்... நீதிமன்றத்துக்கு போகணும். தொழிலாளர் துறைக்கு கன்சுலேசன் போடணும். எல்லாம் சரி! எங்கே சட்டம்? ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டம் எங்கே? ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டம் இதுவரைக்கும் வரவில்லை. Contract workers regulation and abolition act என்று இருக்கிறது. பல்லே இல்லாதது. கடிக்காது.

சட்டம் எங்கே? சட்டம் இல்லை. கன்சுலேசன் போட்டால்.. ஒண்ணும் பண்ண முடியாது சார்! நீங்க அப்படியே அட்ஜட்ஸ் பண்ணிகிட்டு போங்க! என நம்மிடம் சொல்கிறான்.
டிஸ்பூட் எழுப்பி நிர்வாகத்துக்கு (Management) நோட்டீஸ் அனுப்பினால், கன்சுலேசன் அதிகாரி முன்பு அவன் வருவதில்லை. எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறான்.

நிரந்தர தொழிலாளிக்கு தான் சங்கம் இருக்கிறது. அதை அங்கீகரிச்சுருக்கோம். காண்டிராக்ட் தொழிலாளர் சங்கம் என்ற சங்கமே கிடையாது. அதனால நாங்க வர்றதில்ல! என்கிறான்.

கன்சுலேசன் ஆபீசர் சொல்கிறார் “ஒண்ணும் பண்ண முடியாது?” நிர்வாகத்தின் மேலே நடவடிக்கை எடுக்கிறதுக்கு எங்கே சட்டம்?

சரி! பெயிலுர் அறிக்கையை தில்லிக்கு அனுப்பு! தில்லிக்கு போய் ‘பஞ்சப்படி கொடு’ என ஒரு கன்சுலேசன். ‘போனஸ் கொடு’ என ஒரு கன்சுலேசன். அங்கிருந்து பல காலம் கழித்து நமக்கு பதில் வருகிறது.
உங்களுக்கு
பஞ்சப்படி இல்லை.
போனசு இல்லை.
குறைந்தபட்ச ஊதியம் இல்லை
வேலை நேரம் இல்லை


“ரிஜக்ட்டடு” (Rejected)

அதுக்கு மேலே நீதிமன்றத்துக்கு போக முடியாது. ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்க பாராளுமன்றத்தில் தீர்வு இல்லை. சட்டம் இல்லை. சுதந்திரம் வந்ததா சொல்றான்! 60 ஆண்டு காலாமாக 12 தேர்தல். பல பிரதம மந்திரிகள். பல தொழிலாளர் மந்திரிகள், நிதி அமைச்சர்கள், எம்பிக்கள். ஆனால், ஒப்பந்த தொழிலாளியை பாதுகாக்க இதுவரை விவாதமும் நடத்தவுமில்லை. சட்டமும் இல்லை. அதனால் பாராளுமன்றத்தின் மூலமாக இந்த தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. சமூக நீதியோ, சட்ட பாதுகாப்போ இல்லை.
சட்டம் இல்லை.
சட்டம் இருந்தால் தான் நீதிமன்றம்
(சட்டம், நீதிமன்றம் இருந்தாலே, நிர்வாகம் மதிக்கமாட்டான்.) இரண்டும் இல்லையென்றால், நிர்வாகத்தினரிடமும் போகமுடியாது. எங்கே போவது?

தீர்வு தான் என்ன?

சங்கமாக சேர்! சங்கத்தை வலுப்படுத்து! போராடு! சண்டையிடு!
அடி! (கைத்தட்டல்)
நிர்வாகத்தின் கேட்டை மூடு! நிர்வாகத்தினர் எவனும் கார்ல போக கூடாது. காரை வழிமறி! எச்சரிக்கை கொடு!
உதை! (கைத்தட்டல்)
அடித்தால் திருப்படியடி!
போலீசு தாக்கினால் திருப்பித் தாக்கு! (கைத்தட்டல்)

தனிமனித தீவிரவாதத்தை சொல்லவில்லை. உன்னுடைய உரிமை. நீ உழைக்கிறாய். உனக்கு சம வேலைக்கு சமகூலி கொடு.

நான் டிரைவர். அவனும் டிரைவர்.
நான் கணிப்பொறியில் வேலை செய்பவன்.
அவனும் கணிப்பொறியில் வேலை செய்பவன்.
நான் பெயிண்டர். அவனும் பெயிண்டர்.

அவனுக்கு 20000 சம்பளம். எனக்கு ரூ. 2000 சம்பளம். சம வேலைக்கு சம கூலி கொடு. இதைத்தான் இந்திய அரசியல் சாசன சட்டம் சொல்கிறது. சட்டத்தின் ஷரத்துப் படி தான் நான் கேட்கிறேன். என்னை வஞ்சிப்பவன் யார்? ஒரு முதலாளி. அவன் நிர்வாகி. சட்டத்தை மீறுபவன் அவன். நானல்ல!

நமக்கு நடைமுறை அனுபவங்கள் இருக்கிறது. ஒரு மத்திய தொழிற்சாலையில்....

... மீதி அடுத்த பதிவில் தொடரும்.

****

பின்குறிப்பு : கடந்த ஜனவரி 25-ம் தேதியன்று, சென்னனயில் நடந்த முதலாளித்துவ பயங்கரவாத மாநாட்டில் வழக்கறிஞர் தோழர் பாலன் பேசிய உரையின் மூன்றாவது பகுதி இது. முதல் பகுதியைப் படிக்க... கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

உரையின் முதல் பகுதி

உரையின் இரண்டாவது பகுதி
****

நன்றி : மாநாட்டின் உரைகளை தொகுத்து, எம்பி3 வடிவில்...டிவிடி-யை ரூ. 30க்கு வெளியிட்டிருக்கிறார்கள். வாங்கி கேளுங்கள். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் அனுமதியுடன் இங்கு பதிவிடுகிறேன்.

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

குணா said...

நல்ல பதிவு.

Anonymous said...

நல்ல பதிவு.ஆனால்
என்னதான் போராடினாலும் அழுதாலும் ஒப்பந்த தொழிலாளர்களை கண்டு கொள்ள இந்த நாட்டில் ஆட்கள் கிடையாது.ஒப்பந்த தொழிலாளர் என்றால் வேலை செய்ய மட்டுமே பிறந்தவர்கள்.கொத்தடிமைத்தனம் ஒப்பந்த ஊழியர் என்ற பெயரில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Anonymous said...

நல்ல பதிவு.ஆனால்
என்னதான் போராடினாலும் அழுதாலும் ஒப்பந்த தொழிலாளர்களை கண்டு கொள்ள இந்த நாட்டில் ஆட்கள் கிடையாது.ஒப்பந்த தொழிலாளர் என்றால் வேலை செய்ய மட்டுமே பிறந்தவர்கள்.கொத்தடிமைத்தனம் ஒப்பந்த ஊழியர் என்ற பெயரில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.