> குருத்து: எது நம்முடைய மரபு? - தோழர் மருதையன்

February 10, 2011

எது நம்முடைய மரபு? - தோழர் மருதையன்


சமீபத்தில், ம.க.இ.க தோழர் ஒருவரின் மகனின் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடந்தது. அதில், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். செல்பேசியில் பதிவு செய்ததை, நேற்றிரவு கேட்டுக்கொண்டிருந்தேன். பகிர்வதற்கான அருமையான உரை. 20 நிமிட உரை என்பதால், மூன்று தொடர் பதிவுகளாக இடுகிறேன். (தட்டச்சு செய்ய நேரம் கொடுங்க!).

முதல் பதிவை படிக்க : முதல் பகுதி

டிஸ்கி : அவருடைய உரையை, உரைநடைக்கு தகுந்தவாறு சில இடங்களில் முன்பின் மாற்றியிருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால், நானே முழு பொறுப்பு!
***

எது நம்முடைய மரபு?

இன்று நடக்கும் திருமணம் போல பல திருமணங்களுக்கு போயிருக்கிறேன். பலரும் பாராட்டுவார்கள். தாலி இல்லை; வரதட்சணை இல்லை; சீர்வரிசை இல்லை; அன்பளிப்புகள் இல்லை. இதெல்லாம் பாராட்டத்தக்கது தான் என்பார்கள். ஆணால், அதை பின்பற்றுவதற்கு எவ்வளவு பேர் தயார் என்றால், இல்லை. ஏனென்றால், நம்முடைய மரபு. "எல்லாம் வேண்டாம். இந்த தாலியை மட்டுமாவது கட்டுங்கள்" என கோருபவர்கல் பலர் இருக்கிறார்கள். நம்முடைய மரபு அவ்வளவு பெருமைபடக் கூடிய மரபு அல்ல! இந்து மரபு என்பது ஒரு இழிவான மரபு.

இராமன், இராமன் என கடவுளை தூக்கி ஆடுகிறார்கள். அந்த இராமனின் பெருமை என்ன? ஏகபத்தினி பரதன். ஒரு மனைவியைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தான் என்பதற்காக ஒரு மதம் அதையே ஒரு சாதனையாக கருதி, அவனைக் கடவுளாக வைத்திருக்கிறது என்றால், அந்த மதத்தின் யோக்கியதை எப்படி இருக்கும்?

கிருஷ்ணனும் கடவுள்; அவர் என்ன கடவுள்? அவர் ஏகப்பட்ட பத்தினி விரதர். அவரும் கடவுள். நானா சொல்கிறேன் இதை! கிருஷ்ண புராணம் சொல்கிறது. என்ன பெருமை இருக்கிறது இந்த மரபிலே?

தாலியை பெண்கள் அதை புனிதமாக கருதுகிறார்கள். பெண்களுக்கு நான் சொல்கிறேன். தாலி ஆணுக்கு இல்லை; பெண்களுக்கு தாலி இருக்கிறது. 1950ம் ஆண்டு அம்பேத்கர் அரசியல் சட்டத்தை இயற்றும் வரையில்..அதாவது 51 லே இந்து சட்டம் இயற்றப்படும் வரையிலே, இந்துக்களிடையே நிலவிய மரபு எது? ஒரு இந்து 25 கல்யாணம் வேண்டுமென்றாலும் பண்ணிக்கொள்ளலாம். சட்டப்படி செல்லும். 25 தாலி கட்டலாம் ஒரு ஆண். அம்பேத்கார் இந்த சட்டத்தை முன்மொழிந்த பொழுது, இந்து மரபினுடைய தலைவர்களாக இருந்தவர்களெல்லாம், அரசியல் நிர்ணய சபையிலே எதிர்த்தார்கள்.

"இதை வேறு என்ன சட்டம் என வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள்; இந்துச் சட்டம் என்று சொல்லாதீர்கள்" என்றார்கள். காரணம் என்ன ஒரு தார மணம்.

ஒருதார மணத்தை எதிர்த்தது இந்து மரபு!
சதியை, உடன்கட்டை ஏறுதலை ஆதரித்தது இந்து மரபு!
பால்ய விவாகதத்தை ஆதரித்தது இந்து மரபு!
விதவை மறுமணத்தை எதிர்த்தது இந்து மரபு!
விவாகரத்தை எதிர்த்தது இந்து மரபு!

விவாகரத்து என்ற ஒரு உரிமை இருந்திருக்குமென்றால், சீதை தீக்குளிக்க நேர்ந்திருக்குமா? போடான்னு இராமனை டைவேர்ஸ் பண்ணிட்டு சீதை போயிருப்பாள். அப்படி ஒரு உரிமை கிடையாது. விவாகரத்து என்ற உரிமையை வழங்கியது எது? இந்து மரபுக்கு எதிரான இந்த சட்டம். ஆகவே, நம் மரபு என்று பேசும் பொழுது நம்முடைய மத மரபிலே இருப்பதெல்லாம் குப்பைகள். நான் இந்து மதத்தில் மட்டும் சொல்லவில்லை. இஸ்லாம், கிறித்துவம் பற்றி பேச இங்கு வாய்ப்பில்லை. அதனால் இங்கு வேண்டியதில்லை.

....

அமெரிக்காவிலே, ஐரோப்பாவிலே குடும்பம் சீரழிந்து விட்டது என்கிறார்கள். நம்முடைய நாட்டில் குடும்ப அமைப்பு வலிமையாக இருக்கிறது. இது இந்த நாட்டின் தொன்மையான கெளரவமான நாகரிகத்தை காட்டுகிறது என பேசுகிறார்கள். இது பொய்.

தொடரும்...

தொடர்புடைய பதிவுகள் :

உலகின் அழகிய மணமக்கள் - பதிவர் சந்தனமுல்லை - வினவு

இயல்பாய் நடந்த திருமணம்

தேவையில்லாத தாலியும் சில உருப்படியான தகவல்களும் - நந்தவனம்

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

தோழர் படிக்க படிக்க ஆர்வமாக இருக்கிறது.நன்றி தொடருங்கள்

மாநகர்எருமை said...

ஏராளமான விவரங்களும்.ஆதாரங்களும் கொட்டிகிடக்கினறன்.நன்றி.