> குருத்து: தாய் நாவல்!

January 3, 2013

தாய் நாவல்!

வாசிப்பில் காதலையும், ரசனைகளையும் மட்டுமே கண்டு வந்த என்னை ரத்தம், வேர்வை, கண்ணீர், உழைப்பு எல்லாவற்றையும் பற்றி சிந்திக்க வைத்த புத்தகம் 'தாய்'. உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்க பட்ட புத்தகம் தாய் என்று ஒரு நண்பர் சொன்னதை நினைவு. ரஷ்ய நாவலான் தாய்(மக்ஸ்சிம் கார்கி), என் நண்பர்கள் பலவாறு என்னை ஊக்க படுத்தி எங்கள் ஊர் நூலகத்திலே அது கிடைத்த போது எனக்கு மகிழ்ச்சியில் குதித்து விடலாம் போல இருந்தது.

அதில் என்ன இருந்தது என்பதை விட இதை நாம் படிக்க போகிறோம் என்பதே சிலிர்பை இருந்தது. அதிலும் அது ஒரு கம்முனிச நாவல் என்று முன்பே அறிந்து வைத்திருந்ததால் நான் என்னவோ பெரிய லெனினின் தங்கை போல ஒரு உணர்வு கிளர்ந்தது(இவ்வளவும் அந்த புத்தகத்தை படிக்கும் முன் இருந்த உணர்வு).படிக்க தொடங்கிய போது, ஒரு நாயகன் நாயகி என்று(தமிழ் சினிமா போல) தொடங்காமல் தொழில்சாலை தொழிலாளர்கள் என்று இருந்தது முதலில் பெரிய ஏமாற்றமாய் தான் இருந்தது 

ஆனால் தொடர்ந்து படித்த போது தான் அந்த தொழிலாளிகளின் வேதனையும் வலியும் மெல்ல மெல்ல தாக்க தொடங்கியது. நாயகன் பாவேலின் தாயின் அற்புதமான தியாகம் மெய் சிலிர்க்க வைத்தது, மெல்லிய சரடாய் வரும் காதல் பெரிய விஷயமாய் தெரியவே இல்லை. என் வாசிப்பின் மற்றொரு பூங்கதவு தாழ்திறந்து கொண்டது, ஒரு புறம் பசி பட்டினி என்ற பல முகங்கள் பற்றி தெரிய நேர்ந்தாலும் மறுபுறம் திறந்த வானமும் எனக்கு கிடைத்த் வாழ்கையும் எவ்வளவு நிம்மதியானது என்பதை உணர்த்து வாழ கற்று தந்தன இந்த நூல்கள்.

- இனியாள்

0 பின்னூட்டங்கள்: