> குருத்து: மூஞ்சிய பாரு போதும்!

July 29, 2013

மூஞ்சிய பாரு போதும்!

கடந்த ஞாயிறு சரத்குமாரின் சமத்துவ கட்சி முப்பெரும் விழா ஒன்றை தீவுத்திடலில் நடத்தியது. சனிக்கிழமையன்று ஒரு தோழரைப் பார்க்க அம்பத்தூரில் துவங்கி திருவான்மியூர் வரை சமத்துவ கட்சி சுவரொட்டிகளை பார்த்துக்கொண்டே சென்றேன். முப்பெரும் விழா என்றால் என்ன? என ஒவ்வொரு சுவரொட்டியாக பார்த்துக்கொண்டே போனேன். சுவரொட்டியில் கட்சியின் தலைவர் சரத்குமார் பாதியை அடைத்திருந்தார். மீதியை சரத்தின் அன்பு தம்பிகளும், பெயர்களும், கட்சி பதவிகளும் நிரப்பி இருந்தன. கடைசி வரை முப்பெரும்விழா என்றால் என்ன அர்த்தமே தெரிந்துகொள்ள முடியவில்லை.

அடுத்தநாள் செய்திதாளில் விளம்பரம் பார்த்து தான் புரிந்துகொண்டேன்.  முப்பெரும் விழாவில் ஒரு விழாவிற்கான காரணம் காமராஜரின் பிறந்தநாள் ஒன்று.  அவர்கள் மதிப்பதாக சொல்லும் காமராஜரின் புகைப்படம் பெரும்பான்மையான சுவரொட்டிகளில் இல்லை.


மூஞ்சிய பாரு போதும்!  என்பதாக தான் வாக்கு அரசியலில் உள்ள கட்சிகளின் லட்சணம்  இருக்கிறது!

0 பின்னூட்டங்கள்: