> குருத்து: அச்சம் - கலீல் ஜிப்ரான்

October 24, 2021

அச்சம் - கலீல் ஜிப்ரான்


கடலுக்குள்
நுழைவதற்கு முன்பு
ஒரு நதி பயத்தில் நடுங்குகிறது
என்று கூறப்படுகிறது.
 
தான் பயணித்த பாதையை
அது திரும்பிப் பார்க்கிறது
மலையின் சிகரங்களிலிருந்து
காடுகளை கிராமங்களைக்
கடந்து வந்த நீண்ட நெடிய பாதை
 
 
எதிரில் அது பார்க்கிறது
மிகப்பெரிய சமுத்திரத்தை
அதற்குள் நுழைவதென்றால்
என்றென்றைக்கும்
காணாமல் போவதென்று அர்த்தம்
ஆனால் வேறு வழியில்லை
அந்த நதி திரும்பிச்செல்ல முடியாது
எவரும் திரும்பிச்செல்ல முடியாது
திரும்பிச்செல்வது வாழ்வில் சாத்தியமில்லை
சமுத்திரத்தில் நுழைவதெனும்
முடிவைத் துணிந்து எடுத்துத்தான் ஆகவேண்டும்
ஏனெனில் அப்போதுதான் அச்சம் அகலும்
ஏனெனில் அங்குதான் நதிக்குப் புரியும்-
சமுத்திரத்தில் நுழைவதென்பது
மறைந்துபோவதல்ல,
அது சமுத்திரமாய் ஆவது
 
தமிழில் : ரவிக்குமார்
 

0 பின்னூட்டங்கள்: