> குருத்து: தோழர் மார்க்ஸ்

May 5, 2022

தோழர் மார்க்ஸ்


18 வயதில் வறுமை ஏன்? ஏற்றத்தாழ்வு ஏன்? என்ற மண்டையை குடையும் கேள்விகளோடு பதில் தேடி அலைந்த நாட்கள் நினைவில் மேலெழும்புகின்றன.


தேடித் தேடி படித்திருக்கிறேன். தேடித்தேடி பார்த்திருக்கிறேன். தேடித்தேடி விவாதித்திருக்கிறேன். கிடைத்த பதில்களும் முரண்பட்டவைகளாக இருந்தன. உலகை வியாக்கியானம் செய்வதல்ல! மாற்றுவது தான் தேவை! என அழுத்தமாய் சொன்ன தோழர் மார்க்சை கண்டடைந்தேன். எல்லாவற்றிற்கும் முரணற்ற முறையில் எனக்கு பதில் வைத்திருந்தார்.

20களில் இளமை வேகத்தில் மார்க்சை, லெனினை நேசிப்பீர்கள். 30களில் சராசரியாகிவிடுவீர்கள் என்றார்கள் சில மூத்தவர்கள். இதோ 40+களிலும் மார்க்சை பின்பற்றிவருகிறேன். சொன்னவர்கள் குழம்பிபோய்விட்டார்கள்.

சமூகத்தின் மீதான நேசம் குறையாதவரை எப்பொழுதும் மார்க்சின் மாணவன் தான். மனித குலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்சியம் என்னும் தீச்சுடரை நமக்கு தந்துள்ளார். அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம்.

மார்க்ஸ்க்கும் எனக்கும் பிறந்தநாள் தொடர்பு இருக்கிறது. பள்ளியில் சேர்க்கும் பொழுது எனக்கும் அவரின் பிறந்த நாளை தான் கொடுத்துள்ளார்கள்.

உலக மக்களின் மீது மாறாத அன்புகொண்டு தன் இறுதிநாள் வரை உழைத்த தோழர் மார்க்சுக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
!
நம் கனவு தான் அவரின் கனவும்! அதை உறுதியுடன் முன்னெடுத்து செல்வோம்!!

0 பின்னூட்டங்கள்: