> குருத்து: தோழர் கோ. கேசவனின் தொகுப்பு நூல்கள்

May 30, 2022

தோழர் கோ. கேசவனின் தொகுப்பு நூல்கள்


தோழர் கேசவன் பேராசிரியர், மார்க்சிய ஆய்வாளர். அநீதிக்கு எதிராக களத்திலும் நின்று போராடியவர், தன் இறுதி மூச்சு வரை மார்க்சிய லெனினிய அரசியல் நின்றவர் என அவருக்கு பல சிறப்புகள் உண்டு.


மதுரையில் அறிவுச்சுடர் நடுவத்தில் பல மார்க்சிய அறிஞர்கள் 1990 களில் வந்து பேசியதில், தோழர் கேசவனும் ஒருவர். அவர் எழுதிய ”சாதியம்” என்னும் நூலுக்கு அறிவுச்சுடர் நடுவம் சார்பாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு திறனாய்வு கூட்டம் நடத்தியது நினைவுக்கு வருகிறது.

1946ல் பிறந்து 1998ல் தனது 52 வயதில் இறந்தது தமிழ்ச் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அவர் தன் உடலை முறையாக பராமரித்துக்கொள்ளவில்லை என தோழர்கள் வருத்தமாக சொன்னார்கள். அவர் இறந்த பொழுது, இடுகாடு வரை அறிவுச்சுடர் நடுவம் தோழர்களுடன் போயிருந்து அஞ்சலி செலுத்தியது இன்றும் நினைவில் நிற்கிறது.

தோழரின் புத்தகங்கள் அவர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்து, பலரும் படிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, செரித்துக்கொண்டவை தான்.

இப்பொழுது அவருடைய மகன் பல தோழர்களின் உதவியுடன், அவர் எழுதிய புத்தகங்களை ஐந்து தலைப்புகள் வாரியாக கொண்டு வந்துள்ளார்.

1. தமிழ்ச்சமூக வரலாறு - இலக்கியம்
2. தலித்தியம்
3. மார்க்சியம்
4. இயக்கங்கள்.
5. பொதுக்கட்டுரைகள்

சில காலம் கடந்து கூட புத்தகங்கள் தொகுப்பாக வருவது ஆரோக்கியமான ஒன்று. அவருடைய மகனுக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம். அவர் பெயரிலெயே ஒரு டிரஸ்ட்டை ஏற்படுத்தி அதன் மூலமாக கொண்டு வந்ததினால், புத்தகங்களின் விலை எல்லாம் குறைவாகவே இருக்கின்றன.

வருங்காலங்களில் புத்தக வெளியீடு, சிறப்பான நூல்களுக்கு பரிசு, கல்வி உதவி என திட்டமிட்டுள்ளதாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

புத்தகம் வாங்க தொலைபேசி : 89257 06664

படம் : படத்தில் உள்ள மூன்று புத்தகங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று நம் தோழர் ஒருவர் வாங்கி வந்தவை.

0 பின்னூட்டங்கள்: